காரியாபட்டி
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், விருதுநகரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கல்குறிச்சியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் காரியாபட்டி அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரியாபட்டி பேரூராட்சி 4,881 வீடுகளும், 18,191 மக்கள்தொகையும் கொண்டது.[4] இது 9.20 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட காரியாபட்டி பேரூராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் வகைப்பாடுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,194 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காரியாபட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரியாப்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள்இங்குள்ள கோவில்கள் மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஆவியூர் பெருமாள் கோவில், ஆவியூர் கருப்பசாமி கோவில், ஆவியூர் பெரிய கருப்பசாமி கோவில், ஆவியூர் ஶ்ரீமாணிக்கவாசக அய்யணார் கோவில், ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம், மாந்தோப்பு மாரியம்மன்ஆலயம், மாந்தோப்பு பெருமாள் கோவில், மாந்தோப்பு காருப்புசாமி கோவில், முக்கு ரோடு முத்துமாரியம்மன் கோவில், NGO மாரியம்மன் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில், சின்னகாரியாபட்டி ஐயப்பன் ஆலயம்,அ.நெடுங்குளம் ஸ்ரீ மாடசாமி கோவில், செவல்பட்டி பெருமாள் கோவில்கள் உள்ளது. கிருஸ்தவர்களுக்கு அமல அன்னை ஆலயமும், முஸ்லிம்களுக்கு சின்ன காரியாபட்டியில் முஹைதீன் ஆண்டவர் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் பாண்டியன் நகர் நூர் பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற விழாக்கள்வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழாவும் வைகாசி மாதம் நடைபெறும் முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் மிகவும் புகழ்பெற்றது. சுமார் இரண்டு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும். மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம் வருடாவருடம் வைகாசி திருவிழா மிகவும் புகழ்பெற்றது சுமார் ஒரு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும். ஆவியூர் பெருமாள் கோவில் மாசி தீபத்திருவிழா, ஆவியூர் செல்லாயி அம்மன் ஆடி முளைப்பாரி மற்றும் பூக்குழி திருவிழா. ஆவியூர் பெரிய காருப்பசாமி கோவில் மாசி கழரி மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழா, ஆவியூர் சின்னகருப்பசாமி பங்குனி கழரி மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழா, ஆவியூர் ஶ்ரீமாணிக்கவாசக அய்யணார் கோவில் பங்குனி திருவிழா மற்றும் வடமாடு ஜல்லிக்கட்டு. ஆவியூர் லிட்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (Little star sports club) நடத்தும் தைபொங்கள் விளையாட்டு விழா காரியாபட்டி சந்தைகாரியாபட்டியில் வாராவாரம் வியாழக்கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர் மற்றும் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை சந்தைப்பேட்டையில் கோழி சந்தை நடைபெறும். பள்ளிகள்
கல்லூரிகள்
திருமண மண்டபங்கள்
அருகில் உள்ள நகரங்கள்மதுரை 30 கி.மீ., அருப்புகோட்டை 20 கி.மீ., கல்குறிச்சி 8 கி.மீ.,விருதுநகர் 24 கி.மீ., திருமங்கலம் 30 கி.மீ., ஆவியூர் 7 கி.மீ.. ஆதாரங்கள்
http://www.census2011.co.in/data/subdistrict/5851-kariapatti-virudhunagar-tamil-nadu.html வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia