மணப்பாறை நல்லாண்டவர் கோயில்
மணப்பாறை நல்லாண்டவர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மணப்பாறை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2][3][4][5] கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில், 10°37′29″N 78°26′03″E / 10.6246°N 78.4343°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மணப்பாறை நல்லாண்டவர் கோயில் அமைந்துள்ளது. கோகுலாஷ்டமி, ஸ்ரீராமநவமி, நல்லாண்டவர் பெருந்திருவிழா, சித்திரை வருடப் பிறப்பு, மஹாளய அமாவாசை, ஆடி முதல் நாள் பால்குட விழா,[6] ஆடி வெள்ளி, திருக்கார்த்திகை, ஆவணி உறியடி, விஜயதசமி, தைப்பொங்கல், புரட்டாசி சனிக்கிழமைகள், பங்குனி உத்திரம் மற்றும் மகாசிவராத்திரி ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இக்கோயிலின் மூலவர் நல்லாண்டவர் ஆவார். சப்தகன்னியர், லாடசன்னியாசி சித்தர், கருடாழ்வார், அனுமதி விநாயகர், ஓங்கார விநாயகர், தெப்பக்குளம் முருகன், ஆஞ்சநேயர், முத்துக்கருப்பர், பாரிகாரர், மதுரை வீரன், ஏழு கருப்பண்ணசாமி, பேச்சியம்மன், பட்டத்து யானை, நல்லாண்டவர் யானை ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia