மணிகஞ்ச் மாவட்டம்![]()
மாவட்ட எல்லைகள்மணிகஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் தங்காயில் மாவட்டமும், மேற்கு, தென்மேற்கு மற்றும் தெற்கில் முறையே ஜமுனா ஆறு மற்றும் பத்மா ஆறுகள் பப்னா மாவட்டம் மற்றும் பரித்பூர் மாவட்டங்களை மணிகஞ்ச் மாவட்டத்திலிருந்து பிரிக்கிறது. கிழக்கில் டாக்கா மாவட்டம், வடகிழக்கில் மற்றும் தென்கிழக்கில் மணிகஞ்ச் மாவட்டம்|மணிகஞ்ச் மாவட்டங்கள்]] எல்லைகளாக உள்ளது. மாவட்ட நிர்வாகம்சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மணிகஞ்ச் சதர், சில்பலோய், சதுரியா, கேர், சிறீநகர், ஹரிராம் மற்றும் தௌலத்பூர் என ஏழு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் இரண்டு நகராட்சி மன்றங்களையும், அறுபத்தி ஐந்து கிராம ஒன்றியக் குழுக்களையும், 1357 வருவாய் கிராமங்களையும், 1668 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 1800 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0651 ஆகும். இம்மாவட்டம் நான்கு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]] தட்ப வெப்பம்மணிகஞ்ச் மாவட்டத்தின் கோடைகால அதிகபட்ச வெப்பம் 36° செல்சியஸ் ஆகவும்; குளிர்கால குறைந்தபட்ச வெப்பம 12.7° செல்சியஸ் ஆகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1,378.99 மில்லி மீட்டராக உள்ளது. பொருளாதாரம்மணிகஞ்ச் மாவட்டத்தில் பத்மா ஆறு, ஜமுனா ஆறு, இஷாமதி ஆறு, தாலேஷ்வரி ஆறு, காளிகங்கா போன்ற வற்றாத ஆறுகள் பாய்வதால், இம்மாவட்டம் நீர் வளமும், நில வளமும் மிக்கதாக உள்ளதும் இம்மாவட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தையே நம்பியுள்ளது. இங்கு நெல், சணல், கரும்பு, பருப்பு வகைகள், மிளகாய், வெள்ளைப்பூண்டு, நிலக்கடலை, வெங்காயம், எண்ணெய் வித்துக்கள் முதலியன பயிரிடப்படுகிறது. மக்கள் தொகையியல்1383.66 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 13,92,867 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6,76,359 ஆகவும், 7,16,508 பெண்கள் ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.80% ஆக உள்ளது. பாலின விகிதம் 94 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1007 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 49.2% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர். கல்விவங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது. கல்வி நிறுவனகள்இம்மாவட்டத்தில் மூன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், ஒரு மருத்துவக் கல்லூரியும், ஐந்து உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளது. குறிப்பிடத்தக்கவர்கள்மணிகஞ்ச் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்கவர்களாக நோபல் பரிசு பெற்ற அமார்த்தியா சென், திரைப்படத் தயாரிப்பாளர் ஹீராலால் சென், மொழிப் போர் தியாகி சாகித் ரபீக் ஆவர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia