மத்திய சேமக் காவல் படை
மத்திய பின்னிருப்பு காவல் படை(ஆங்கிலம்:Central Reserve Police Force அல்லது சி.ஆர்.பி.எஃப். என்பது இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும். இந்திய உள் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இப்படை மாநில/யூனியன் பிரதேச சட்ட ஒழுங்கை பாதுகாத்து கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. 1939 ஜூலை 27ல் பிரித்தானிய அரச பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட இந்தக் காவல் படை இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1949 டிசம்பர் 28 சி.ஆர்.பி.எஃப். சட்டப்படி மத்திய சேமக் காவல் படையானது. சமீப காலங்களில், சட்டஒழுங்கு பாதுகாப்பிற்கு அடுத்ததாக நாட்டின் பொதுத் தேர்தல் பணிக்கும் இப்படை பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக பிரச்சனைக்குரிய பகுதிகளான சம்மு காசுமீர், பீகார் மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. உலகில் உள்ள துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படை இதுவேயாகும்.[2] வரலாறு
பணிகள்
அமைப்புபிற காவல் அமைப்புகளைப் போலவே மத்திய பின்னிருப்பு காவல் படையிலும் இ.கா.பவை முதன்மையாகக் கொண்டு தரவரிசைப் பதவிகளுண்டு. இதன் தலைமை இயக்குநர் இ.கா.ப அதிகாரியாவார். 181 நிர்வாக பட்டாலியன்கள், 2 மகளிர் பட்டாலியன்கள், 10 விரைவு அதிரடிப் படை பட்டாலியன்கள், 6 கோப்ரா பட்டாலியன்கள், 2 டி.எம். பட்டலியன்கள், 5 சமிக்கை பட்டாலியன்கள் மற்றும் 1 சிறப்பு பணிப் பிரிவும் உட்பட மொத்தம் 207 பட்டாலியன்கள் உள்ளன.[3] விரைவு அதிரடிப் படைமத்திய பின்னிருப்பு காவல் படையின் சிறப்புப்பிரிவாக 10 பட்டாலியன்கள் கொண்ட விரைவு அதிரடிப் படை (RAF) 1992 அக்டோப்ரில் உருவாக்கப்பட்டது. வகுப்புக் கலவரஙகள் மற்றும் உள்நாட்டு தொடர் கலவரங்கள் ஆகியவற்றை சந்திக்க இப்படை பயன்படுத்தப்படுகிறது. மத்திய பின்னிருப்பு காவல் படையின் எண் 99 முதல் 108 வரை விரைவு அதிரடிப் படையைச் சேர்ந்தவைகளாகும். மகளிர் படைமத்திய பின்னிருப்பு காவல் படையில் இரண்டு மகளிர் பட்டாலியன்கள் உள்ளன. 1986ல் முதல் மகளிர் பட்டாலியன் எண் 88 புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டுவுருவாக்கப்பட்டது; பிறகு குசராத், காந்தி நகரை தலைமையிடமாகக் கொண்டு இரண்டாவது பட்டாலியன் எண் 135 உருவாக்கப்பட்டது. பசுமைப் படைபசுமைப் படை என்பது மத்திய பின்னிருப்பு காவல் படையின் மற்றொரு சிறப்புப்பிரிவாகும். இப்படையின் தொடர் கண்காணிப்பில் சுற்றுசூழல் நாசவேலைகள் தடுக்கப்பட்டு, வன தாவரங்களும் விலங்குகளும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் மரங்கள் இப்படையினரால் நடப்படுகிறது. இதனையும் காண்கவெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia