மருதூர் அரங்கராசன்

மருதூர் அரங்கராசன் (பிறப்பு: திசம்பர் 9, 1952) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். ச. அரங்கராசன் எனும் இயற்பெயருடைய இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியின் முதல்வர். ஆராய்ச்சி தொடர்பான 7 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "யாப்பறிந்து பாப்புனைய" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya