நெய்வேலி
நெய்வேலி (ஆங்கிலம்:Neyveli), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டத்தில் இருக்கும் நகரம் ஆகும். இங்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும், மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில் ஆகும். 1956 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலயம் நிறுவப்பட்டு செயலுக்கு வந்தது. வரலாறுதமிழ்நாடு மாநிலம், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் அமைந்துள்ள தொழில் நகரமாகும். இந்த நகரம் வடலூரிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும், பண்ருட்டியிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இது சென்னை - தஞ்சாவூர் 45சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கிலும், கடலூர் - சேலம் மற்றும் திருச்சி - பாண்டிச்சேரி நெடுஞ்சாலைக்கு நடுவிலும் அமைந்துள்ளது. 1935க்கு முன்தற்பொழுது நெய்வேலி நகரியம் உள்ள இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் தெற்கில்தான் நெய்வேலி கிராமம் இருந்தது. அங்கு வாழ்ந்த மா. ஜம்புலிங்கம் முதலியார் என்பவர் 1935 இல் தன் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். கிணற்றிலிருந்து கருமையான பொருள் வெளிப்பட்டது. அதை அரசுக்கு அனுப்பி வைத்தார். அரசு அதனை ஆய்விற்கு அனுப்பியது. அந்த ஆய்வில் பழுப்பு நிலக்கரி என முடிவு கிடைத்தது. அரசு நெய்வேலியை சுற்றிலும் உள்ள இடங்களில் ஆய்வு செய்து நிலத்தடியில் ஏராளமான நிலக்கரி படிவங்கள் இருப்பதை உறுதி செய்தது. ஒன்றிய அரசு 1956 இல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க என். எல். சி நிறுவன அமைப்பை ஏற்படுத்தியது. இது ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். நெய்வேலி கிராமத் தில் முதன் முதலில் பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனத்திற்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என பெயர் சூட்டியது. வெளியேற்றப்பட்ட கிராமங்கள்நிலக்கரி வெட்டி எடுக்கவும் என். எல். சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும் அலுவலகங்கள் கட்டவும் கீழ்க்கண்ட கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. அவையாவன..
வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு விருத்தாசலத்திற்கு வடக்கில் உள்ள விஜயமா நகரம் மற்றும் கிழக்கே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் மனைகள் வழங்கப்பட்டன. நெய்வேலி நகரிய அமைப்புநெய்வேலி நகரியம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டது. நெய்வேலி 32 வட்டங்களாகப்(Block) பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டம் என்பது 1 கி.மீ க்கு, 1.கி.மீ என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வட்டம் ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ளது. ஒவ்வொரு வட்டத்தைச் சுற்றிலும் இரட்டைச் சாலைகள் போடப்பட்டுள்ளது. முதல் வட்டத்தில் என்.எல்.சி நிர்வாக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இரண்டாவது வட்டம் முதல் முப்பதாவது வட்டம் வரை மக்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. நகரிய நிர்வாகம்நகரிய நிர்வாக அலுவலகம் வட்டம் 10 இல் உள்ளது. மின் வசதியைக் கவனிக்க, நீர் வசதியைப் பராமரிக்க, கட்டிடங்களைப் பராமரிக்க, சாலைகளைப்போடவும் பராமரிக்கவும், நகர பேருந்துகளை ஓட்டுதல் மற்றும் பராமரித்தல்,தெரு விளக்குகளைப் போட்டு பராமரித்தல்,சாலை மற்றும் அலுவலகங்களின் சுகாதாரத்தைப்பாதுகாத்தல், நூலகங்களைப் பராமரித்தல்,நகர நிர்வாகத்தில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்குதல் ஆகிய பணிகளைச் செய்ய அங்கு தனித்தனி அலுவகங்கள் உள்ளன. புவியியல்இவ்வூரின் அமைவிடம் 10°58′N 78°33′E / 10.97°N 78.55°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 87 மீட்டர் (285 அடி) உயரத்தில் இருக்கின்றது. மக்கள் வகைப்பாடு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நெய்வேலி நகரியம் 32 உறுப்பினர்களையும், 25,827 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 105,731 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 90.4% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 980 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7048 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 897 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 22,136 மற்றும் 784 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.03%, இசுலாமியர்கள் 3.03%, கிறித்தவர்கள் 7.8%, தமிழ்ச் சமணர்கள் 0.05%, மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[2] குடிநீர்ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல் நிலைத்தொட்டி மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வசதி செய்து தந்துள்ளனர். கல்வி நிலையங்கள்
நிர்வாக அலுவலகம்நெய்வேலி வட்டம் ஒன்றில் நிர்வாக அலுவலகம் உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும், இங்கிருக்கும் அலுவலகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. சுரங்கம்ஆரம்பகாலத்தில் வட இந்தியாவில் உள்ள சுரங்கம் போன்று சுரங்கம் தோண்டினர். ஆனால் பூமியின் நீர் ஊற்றால் சுரங்கம் நீரால் நிரம்பி விட்டது. பின் ரஷிய நாட்டு அரசின் உதவியால் திறந்த வெளிச்சுரங்கம் தோண்டி கரியை எடுக்கின்றனர்.[சான்று தேவை] கோவில்கள்
வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் முருகனின் கையில் வேலுக்கு பதில் வில் காணப்படுகிறது.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia