மறைமாவட்டம்
மறைமாவட்டம்(diocese) என்பது கிறித்தவத் திருச்சபைகளில் பல பங்குதளங்களை உள்ளடக்கிய ஒரு ஆயரின் ஆட்சிப் பகுதியைக் குறிக்கும்.[1] டயோசிஸ் (diocese) என்ற ஆங்கிலச் சொல் பல்வேறு கிறித்தவத் திருச்சபைகளின் ஆளுகைப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டினாலும், தமிழில் மறைமாவட்டம் என்றச் சொல் கத்தோலிக்க திருச்சபையால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் ஆயரால் ஆட்சி செய்யப்படும். ஒரு மறைமாவட்டத்தின் கீழ் பல்வேறு பங்குதளங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதே போல் பல மறைமாவட்டங்கள் ஒரு உயர் மறைமாவட்டத்தின் கீழ் இருக்கும். இத்தகைய உயர் மறைமாவட்டத்தின் ஆயர், பேராயர் என அழைக்கப்படுவார். இவ்வகை மறைமாவட்டங்கள் கூட்டமாக, உயர்-மறைமாவட்டத்தேடு சேர்த்து மறைமாநிலம் என அழைக்கப்படுகின்றன. ஒரு மறைமாவட்டத்தை நிறுவும் உரிமை திருத்தந்தைக்கே உரியது. கத்தோலிக்க திருச்சபை சட்டம் 369, ஒரு மறைமாவட்டத்தை பின்வருமாறு விளக்குகின்றது. {{quote|மறைமாவட்டம் என்பது குருகுழாமின் ஒத்துழைப்புடன் மேய்ப்புப் பணிக்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இறை மக்களின் ஒரு பகுதியாகும்; மக்களின் கூட்டமாக விவரிக்கப்பட்டாலும், ஒரு மறைமாவட்டம் பொதுவாக வரையறுக்கப்பட்ட ஒர் புவியியல் எல்லைக்கு உட்பட்டது; இவ்வாறு அந்த எல்லையில் வாழும் அனைத்து கத்தோலிக்க மக்களையும் அது உள்ளடக்கியுள்ளது. ஆயினும் பயனுள்ளதாக இருந்தால், விசுவாசிகளின் வழிபாட்டு முறையால் அல்லது அதையொத்த மற்றொரு காரணத்தினால் வேறுபட்டுள்ள மறைமாவட்டங்கள் பல ஒரே எல்லைக்குள் திருத்தந்தையால் நிறுவப்படலாம். மறைமாவட்டம் என அழைக்கப்படாவிட்டாலும் பின்வருபவையும் மறைமாவட்டத்திற்கு இணையானவையாக கருதப்படுகின்றது:
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia