மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி
![]() மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி (மூடா) (ஆங்கிலம்: Malaysian United Democratic Alliance (MUDA); மலாய்: Ikatan Demokratik Malaysia; சீனம்: 马来西亚民主联合阵线) என்பது மலேசியாவில் இளைஞர்களை மையமாகக் கொண்ட பல்லின அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி செப்டம்பர் 2020-இல் சையது சாதிக் (Syed Saddiq Syed Abdul Rahman) என்பவரால் உருவாக்கப்பட்டது.[1][2][3][4] வரலாறுஉருவாக்கம்மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி எனும் (மூடா) கட்சியை செப்டம்பர் 2020-இல் சையது சாதிக் உருவாக்கினார். இதற்கு முன்பு, இவர் பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) நிர்வாகத்தின் கீழ் மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக (Minister of Youth and Sports) பணியாற்றினார். 2018-ஆம் ஆண்டு சையது சதீக், அவரின் 25-ஆவது வயதில் ஓர் அமைச்சராக நியமிக்கப்பட்ட போது, மலேசிய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் இளைய மலேசிய அரசியல்வாதி எனும் சாதனையைப் படைத்தார்.[4] மலேசிய அரசியல் நெருக்கடி 2020சையது சதீக், மூவார் மக்களவை தொகுதியின் (Muar Federal Constituency) மக்களவை (மலேசியா)|நாடாளுமன்ற உறுப்பினர்]] ஆவார். இவர் முதலில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (பெர்சத்து) (Malaysian United Indigenous Party) (BERSATU) உறுப்பினராக இருந்தார். மலேசியாவின் 14-வது மலேசியப் பொதுத் தேர்தலில் 50,843 வாக்காளர்களைக் கொண்ட மூவார் மக்களவை தொகுதியில் 6,953 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றவர் ஆகும். அதே தொகுதியில் 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் 1,345 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். உள்நாட்டு போராளிகள் கட்சி2020 பிப்ரவரி மாதம் மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022 அல்லது (செரட்டன் நகர்வு) (2020 Malaysian Political Crisis) எனும் நெருக்கடிக்குப் பின்னர் சையது சாதிக்கின் பெர்சத்து கட்சியின் உறுப்பினர் பதவி நிறுத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) உட்பட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சையது சாதிக்கும் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.[5] அதன் பின்னர் மகாதீர் பின் முகமது உள்நாட்டு போராளிகள் கட்சி மலாய்: Parti Pejuang Tanah Air; ஆங்கிலம்: Homeland Fighters' Party) (PEJUANG) கட்சியை உருவாக்கினார். ஆனால் சையது சாதிக்; மகாதீரின் புதிய கட்சியில் சேர மறுத்து விட்டார். 17 செப்டம்பர் 2020-இல், சையது சாதிக் தன் சொந்த புதிய கட்சியை பதிவு செய்ய மலேசிய சங்கங்கள் சட்டம் 1966-இன் (Societies Act 1966) கீழ் மலேசிய சங்கங்களின் பதிவதிகாரியிடம் (Registrar of Societies) (RoS) விண்ணப்பம் செய்தார்.[6][7][8][9] 2020 அரசியல் நெருக்கடி நேரத்தில், மலேசிய அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக போராடிக் கொண்டு இருந்தனர். அந்தக் கட்டத்தில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி மிகக் குறைந்த பெரும்பான்மையைப் பெற்று இருந்தது. நிதியுதவிதொடக்கக் காலத்தில் மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி (மூடா) தோன்றுவதற்கு நிதியுதவி செய்தவர்கள்:
பிரான்சு நாட்டின் லா ரிபப்ளிக் என் மார்ச்சே (La Republique En Marche) கட்சி; மற்றும் தாய்லாந்து நாட்டின் எதிர்கால முன்னோக்கு கட்சி (Future Forward Party) எனும் இரு அரசியல் கட்சிகளைப் போல மூடா கட்சி வடிவம் அமைக்கப் பட்டதாக சையத் சாதிக் கூறியுள்ளார்.[10] அரசியல் கட்சியாக பதிவுதன் கட்சி பல்லின இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்; மற்றும் இனம், மதம் அல்லது வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சமூகத்தின் அனைத்து நிலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் என சையத் சாதிக் குறிப்பிட்டுள்ளார்.[11][12] மூடா கட்சியின் பதிவு மலேசிய சங்கங்களின் பதிவதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மலேசிய சங்கங்களின் பதிவதிகாரியின் முடிவை எதிர்த்து வழக்குகள் தொடரப் பட்டன. பற்பல போராட்டங்களுக்குப் பின்னர் இறுதியாக 23 டிசம்பர் 2021-இல் மூடா கட்சி மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. மேற்கோள்கள்
மேலும் பார்க்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia