மார்கோஸ்
மார்கோஸ் அதிரடிப் படை (Marine Commandos, சுருக்கமாக: MARCOS அலுவல் பூர்வமாக Marine Commando Force (MCF), இந்தியக் கடற்படையைச் சேர்ந்த சிறப்புப் படை ஆகும். மார்கோஸ் அதிரடிப் படைகள் கடல் சார்ந்த சிறப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாவர்.[Note 1] மார்கோஸ் படை பிப்ரவரி 1987-இல் நிறுவப்பட்டது. இப்படைகள் நீர், நிலம் மற்றும் வான் வெளிகளில் போரிடும் பயிற்சியும், ஆற்றலும் பெற்றது.[5][7][5][8] மார்கோஸ் படைகள் ஜம்மு காஷ்மீரில் பாயும் ஜீலம் ஆறு மற்றும் உளர் ஏரிப் பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.[9][7] மார்கோஸ் அதிரடிப் படையினர் இந்தியக் கடற்படையில் மட்டுமின்றி இந்தியத் தரைப்படை மற்றும் இந்திய வான்படைகளிலும் பணியாற்றுகிறார்கள்.[10] ![]() தளங்கள்![]() மும்பை,கொச்சி, கோவா, போர்ட் பிளேர் ஆகிய இடங்களில் மார்கோஸ் அதிரடிப்படையின் தளங்கள் உள்ளது.[11] இந்தியாவின் மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவில் உள்ள ஐ என் எஸ் அபிமன்யு எனும் போர்க் கப்பலில் மார்கோஸ் படையின் தலைமையகம் உள்ளது. இப்படை 1974-இல் துவக்கப்பட்டாலும், மே 1980-ஆம் ஆண்டில் தான் அதிகாரப்பூர்வ படையானது. 1987-இல் இதற்கு மார்கோஸ் (Indian Marine Special Force (IMSF) எனப்பெயரிடப்பட்டது.[2][6]12 சூலை 2016 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ என் எஸ் கர்ணா எனும் போர்க் கப்பலே மார்கோஸ் படையின் நிரந்தர தளமாக உள்ளது.[12] தேர்வு & பயிற்சி![]() அனைத்து மார்கோஸ் வீரர்கள் இந்தியக் கடற்படையின் 20 மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆண் வீரர்களிலிருந்து தேர்வு செய்யப்படடு, இரண்டு ஆண்டுகளுக்கு கடினமான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.[13] படக்காட்சிகள்
இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia