26 January 1950; 75 ஆண்டுகள் முன்னர் (26 January 1950) (இந்தியக் கடற்படை) 5 September 1612; 412 ஆண்டுகள் முன்னர் (5 September 1612) (கிழக்கிந்திய கம்பெனி கடற்படை)[1][2]
64,000 செயல் வீரர்கள் [3] 50,000 இருப்பு வீரர்கள் [4] 250 கப்பல்கள் 300 வானூர்திகள்
பகுதி
இந்திய ஆயுதப்படை
தலைமையகம்
ஒருங்கிணைந்த பாதுகாப்பு தலைமையகம், பாதுகாப்பு அமைச்சகம், புது டெல்லி
குறிக்கோள்(கள்)
शं नो वरुणः .
[சாம் நோ வருணா] Error: {{Transliteration}}: transliteration text not Latin script (pos 1: ச) (help) ("நீரின் இறைவன் நமக்கு அருள் புரியட்டும்")
இந்தியக் கடற்படையின் முதன்மை நோக்கம், நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பது மற்றும் நாட்டின் பிற ஆயுதப் படைகளுடன் இணைந்து, போர் மற்றும் அமைதி காலங்களில் இந்தியாவின் எல்லைகள், மக்கள் அல்லது கடல்சார் நலன்களுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்புகளையும் தடுத்தல் ஆகியனவாகும். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் கூட்டுப் பயிற்சிகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், நல்லெண்ணப் பயணங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட மனிதாபிமானப் பணிகள் ஆகியவற்றிலும் இந்தியக் கடற்படை பங்காற்றுகின்றது.
சூன் 2019 நிலவரப்படி, இந்திய கடற்படையில் 67,252 பணியிலுள்ள மற்றும் 75,000 இருப்புப்
வீரர்கள் உள்ளனர். செப்டம்பர் 2022 நிலவரப்படி, இந்தியக் கடற்படையில் இரண்டு வானூர்தி தாங்கிக் கப்பல்கள், 12 நாசகாரிக் கப்பல்கள் மற்றும் 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட கப்பல்கள் உள்ளன. இந்திய கடற்படையின் வானூர்தி பிரிவில் ஏறத்தாழ 300 வானூர்திகள் உள்ளன. தனது சக்திகளை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தியக் கடற்படை மிகப் பெரிய அளவில் நவீனத்துவத்திற்கும் விரிவாக்கத்திற்கும் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் கடற்பயண வரலாறு 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது.[5] ஒரு 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடற்படை வீரர்களின் பதிவு புத்தகம், இந்தியாவின் முதல் துறைமுகம் சிந்து சமவெளி நாகரிகத்தின் போது கிமு 2300 இல் லோதல்] நகரில் கட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. ரிக்வேதம் நீர் மற்றும் கடலின் கடவுளான வருணன் கடல் வழிகளைப் பற்றிய அறிவைக் கொண்டவர் எனவும், இந்தியர்கள் கடற்படைப் பயணங்களில் நூறு துடுப்புகளைக் கொண்ட கப்பல்களைப் பயன்படுத்துவதை விவரிக்கிறது. புயல்களின் போது கப்பலை உறுதிப்படுத்தும் கப்பலின் பக்க இறக்கைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.[6]
மௌரியப் பேரரசின் பேரரசர், சந்திரகுப்த மௌரியர், தனது போர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக, கப்பற்படைப் பிரிவை நிறுவியதாக பதிவுகள் காட்டுகின்றன. பண்டைய இந்தியாவில் இருந்து பல வரலாற்றாசிரியர்கள் இந்திய வர்த்தக உறவுகளை பதிவு செய்தனர். பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளின் வர்த்தக வழிகள் பற்றிய குறிப்புகளும் இருந்தன. இந்தியர்கள் பண்டைய கிரேக்க மற்றும் ரோமானியருடன் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தனர்.[6]
14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில், இந்திய கப்பல் கட்டும் திறன் மற்றும் அவர்களின் கடல்சார் திறன் ஆகியவை நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட கப்பல்களை தயாரிக்கும் அளவுக்கு அதிநவீனமாக இருந்தன. கப்பல்கள் வடிவமைப்பில் உள்ளடங்கிய பெட்டிகளையும் கொண்டிருந்தன, அதனால் ஒரு பெட்டி சேதமடைந்தாலும், கப்பல் மிதந்து கொண்டே இருக்கும். கப்பல்களின் இந்த அம்சங்கள் ஐரோப்பியர்கள் இந்த யோசனையை அறிந்துகொள்வதற்கு முன்பே இந்தியர்களால் உருவாக்கப்பட்டன.[6]
குடியேறிகள் காலம்
கிழக்கிந்திய கம்பெனியின் கப்பலுக்கு எதிராக 1812 இல் மராட்டிய கடற்படை தாக்குதலின் சித்தரிப்பு
15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துகீசியர்கள் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த உடனேயே, தங்கள் வர்த்தகத்தை அனுமதிக்காத அனைத்து ஆசிய கப்பல்களையும் கைப்பற்றத் தொடங்கினர். 1534 வாக்கில், போர்த்துகீசியர்கள் பம்பாய் துறைமுகத்தை முழுமையாகக் கைப்பற்றினர். வர்த்தக உடன்படிக்கையின்படி சுங்க வரியை வாஸ்கோ ட காமா செலுத்த மறுத்தபோது கோழிக்கோடு சமோரின் போர்த்துகீசிய வர்த்தகத்திற்கு சவால் விடுத்தார். இதன் விளைவாக இரண்டு பெரிய கடற்படை போர்கள் நடந்தன.[6] இருப்பினும், 1526 ஆம் ஆண்டில், சமோரின் போர்த்துகீசியக் படைகளை விரட்டியடித்தார்.[7]முகலாயப் பேரரசு குறிப்பிடத்தக்க கடற்படைக் பராமரித்தது.[8] கடற்படையினர் முக்கியமாக கடலோரப் பகுதிகளில் ரோந்து சென்றனர். இந்தக் கடற்படையானது ஹூக்லி முற்றுகை மற்றும் ஆங்கிலேய-முகலாயப் போர் (1686-1690) ஆகியவற்றில் பங்குகொண்டது.[9][10]மராத்தா கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க கடலோரப் படையைக் கொண்டிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சத்ரபதி சிவாஜி, தனது சொந்த கடற்படையை உருவாக்கத் தொடங்கினார். ஆங்கிலேயர்கள் மற்றும் போர்த்துகீசியர்களை கொங்கன் கடற்கரையிலிருந்து விலக்கி வைத்தது மராட்டிய கடற்படை.[6]
1612 ஆம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டன் பெஸ்ட் தலைமையில் ஒரு ஆங்கிலக் கப்பல் போர்த்துகீசியர்களை எதிர்கொண்டது. போர்த்துகீசியர்கள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், வணிகக் கப்பல்களுக்கு கடற்கொள்ளையர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளால், பிரித்தானியர்கள் கடற்படையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[11] லப்போக்கில், இந்தக் கடற்படை பம்பாயில் இருந்து இயக்கப்பட்டது.
1686 இல், இந்தக் கடற்படைப் பிரிவு பம்பாய் மரைன் என மறுபெயரிடப்பட்டது. இது 1824 ஆம் ஆண்டின் முதல் ஆங்கிலோ-பர்மியப் போரில் ஈடுபட்டது. 1834 ஆம் ஆண்டில், பம்பாய் மரைன் அரசியின் இந்தியக் கடற்படை எனப் பெயரிடப்பட்டது. கடற்படை 1840 ஆம் ஆண்டின் முதல் ஓபியம் போர் மற்றும் 1852 ஆம் ஆண்டின் இரண்டாம் ஆங்கிலோ-பர்மியப் போர் ஆகியவற்றில் பங்கெடுத்தது. அந்த நேரத்தில், கடற்படை இரண்டு பிரிவுகளாக இயங்கியது - கல்கத்தாவின் கிழக்குப் பிரிவு மற்றும் பம்பாயின் மேற்கு பிரிவு.[11] 1892 ஆம் ஆண்டில் கடற்படை ராயல் இந்தியன் மரைன் என மறுபெயரிடப்பட்டது, மேலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இது ஐம்பது கப்பல்களை இயக்கியது. கடற்படையின் ரோந்து மற்றும் துருப்புக் கப்பல்கள் முதலாம் உலகப் போரில் பங்குகொண்டன. 1934 ஆம் ஆண்டில், இது ஒரு முழு கடற்படைப் படையாக மேம்படுத்தப்பட்டது, இதனால் ராயல் இந்தியக் கடற்படை என ஆனது.[11]
இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில், இந்தக் கடற்படையில் சிறிய எண்ணிக்கையில் மட்டுமே கப்பல்கள் இருந்தன. 114 அதிகாரிகள் மற்றும் 1,732 மாலுமிகள் மட்டுமே பணியில் இருந்தனர். போரின் தொடக்கமானது கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையில் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது. இந்தியப் பெருங்கடலில் நடந்த போரின் நடவடிக்கைகளில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டது.[11]
விடுதலைக்குப் பிறகு
இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு கப்பற்படையின் கப்பல்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியா மற்றும் பாக்கித்தான் இடையே பிரிக்கப்பட்டது. இந்தியக் கடற்படை 11,000 பணியாளர்களுடன் 32 கப்பல்களைக் கொண்டிருந்தது. அதே தேதியில் இருந்து, அனைத்து பிரித்தானிய அதிகாரிகளும் கடற்படை மற்றும் அதன் இருப்புக் கூறுகளில் இருந்து கட்டாயமாக ஓய்வு பெற்றனர், பிரித்தானிய மூத்த அதிகாரிகளுக்குப் பதிலாக இந்திய அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றனர்.[12] இருப்பினும் அனுபவம் வாய்ந்த இந்திய அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக 1962 ஆம் வருடம் வரை சிறப்பு நியமனத்தின் கீழ் பிரித்தானிய அதிகாரிகள் கடற்படையில் பணியாற்றினர். 26 சனவரி 1950 இல் இந்தியா குடியரசாக மாறியதும், ராயல் முன்னொட்டு நீக்கப்பட்டு, இந்தியக் கடற்படை என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[11][13]
இந்தியக் கடற்படையின் முதல் நடவடிக்கையானது ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் 1961 ஆம் ஆண்டு கோவாவில்போர்த்துகீசிய கடற்படைக்கு எதிராக இருந்தது.[14] இந்த தாக்குதல்களின் போது, இந்திய கடற்படை துருப்புக்கள் தரையிறங்குவதில் இந்திய இராணுவத்திற்கு உதவி செய்தது. இந்தியக் கடற்படையால் இரண்டு போர்த்துகீசிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்தச் செயற்பாட்டின்போது, ஐ.என்.எஸ் தில்லி ஒரு போர்ச்சுகீஸ் ரோந்துப் படகை மூழ்கடித்தது. ஒரு சிறு போருக்குப் பின்னர் இந்தியப் போர்க்கப்பல்களான ஐ.என்.எஸ் பெட்வா மற்றும் ஐ.என்.எஸ். பியஸ் ஆகியவை என்.ஆர்.பி அஃபோன்ஸோ டெ ஆல்புகெர்க் என்னும் போர்ச்சுகீசியக் கப்பலை மூழ்கடித்தன.[15]
திசம்பர் 4ஆம் தேதி துவக்கப்பட்ட இந்தத் தாக்குதல் ஆபரேஷன் ட்ரைடென்ட் என்று பெயரிடப்பட்டது.[17] இதில் அடைந்த வெற்றியின் காரணமாக, அப்போது துவங்கி இந்த தினமே கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது.[18] இதைத் தொடர்ந்து 8 திசம்பர் 1971 அன்று ஆபரேஷன் பைதான் செயல்படுத்தப்பட்டது.[17]வங்காள விரிகுடாவில், வானூர்தி தாங்கிக் கப்பல்விக்ராந்த் கிழக்கு பாகித்தானை முற்றிகையிட வெற்றிகரமாக செயல்படுத்த பயன்படுத்தப்பட்டது.[19]
1988வது வருடம் மாலத்தீவுகளில் அரசுரிமையைப் பறிக்க ப்ளோட் ஈடுபட்ட வல்லடியை வெற்றிகரமாகக் குலைப்பதில் இந்திய விமானப் படையுடன் இந்தியக் கடற்படை இணைந்து செயல்பட்டது.[20] கரையோர உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு கடற்படை விமானம் ப்ளோட் போராளிகளால் கடத்தப்பட்ட ஒரு கலத்தைக் கண்டுபிடித்தது. அந்தக் கப்பலில் இருந்த பணயக் கைதிகளில் மாலத்தீவின் மூத்த மந்திரியும் ஒருவர். அந்தக் கலத்தை மீட்பதற்கு ஆபரேஷன் காக்டஸ் என்னும் செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது. ஐஎன்எஸ் கோதாவரி மற்றும் இந்தியக் கடற்படை செயல் வீரர்களின் ராணுவ இடையூடுகளுக்குப் பின்னர் போராளிகள் சரணடைந்தனர்.[21]
1999வது வருடம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் போர் நிகழ்ந்த வேளையில் தல்வாரி செயற்பாடு என்பதன் ஒரு பகுதியாக வடக்கு அராபியக்கடலில் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்படைகள் அமர்த்தப்பட்டிருந்தன.[22] பாகிஸ்தானிய கடற்படையின் சாத்தியமான ஒரு தாக்குதலிலிருந்து இந்தியாவின் கடலோரச் சொத்துக்களைப் பாதுகாப்பதும், இந்தியாவின் கடல் வணிகப் பாதைகளை அடைப்பதன் மூலம் அதனை ஒரு முழுமையான போராக மாற்றுவதான பாகிஸ்தானிய முயற்சியைத் தடுப்பதுமே இதன் நோக்கம். கார்கில் போரின் போது இந்தியக் காலாட்படையினருடன் இந்தியக் கடற்படை விமானிகள் மற்றும் செயல் வீரர்களும் போரிட்டனர்.[23][24]
21 ஆம் நூற்றாண்டு
21 ஆம் நூற்றாண்டில், உலகெங்கிலும் உள்ள இயற்கை பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளின் போது மனிதாபிமான நிவாரணத்திற்காகவும், இந்தியாவின் கடல் வர்த்தக வழிகளை சுதந்திரமாகவும் திறந்ததாகவும் வைத்திருக்கவும் இந்தியக் கடற்படை பயன்படுத்தப்பட்டது.[25]
2001-02வது வருடங்களில் இந்திய-பாகிஸ்தான் உறவில் சுமுகமற்ற நிலை நிலவியபோது செயல்படுத்தப்பட்ட ஆபரேஷன் பராக்ரம் என்னும் முப்படையின் ஒருங்கிணைந்த திட்டத்தில் இந்தியக் கடற்படையும் பங்கேற்றது. பன்னிரண்டுக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் அணிவகுக்கப்பட்டிருந்தன.[26] பின்னர் 2001வது வருடம்,ஆபரேஷன் எண்ட்யூரிங் ஃப்ரீடம் என்னும் செயற்திட்டத்தில் பங்கேற்க மலாக்கா நீரிணை வழியாக சென்ற ஐக்கிய நாடுகள் போர்க்கப்பல்களுக்கு இந்தியக் கடற்படை பாதுகாப்பு அளித்தது.[27]
2004ஆம் ஆண்டில் நடந்த இந்தியப் பெருங்கடலில் உருவான நில அதிர்ச்சியின் போது, இந்தியக் கடற்படை 27 கப்பல்கள், 19 உலங்கு வானூர்திகள், 6 கடற்படை விமானங்கள் மற்றும் 5000த்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் ஆகியோரை நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தியது.[28] இந்திய மாநிலங்களான ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்த ஆபரேஷன் மாடத் , அந்தமான் நிகோபார் தீவுகளில் நடந்த ஆபரேஷன் ஸீ வேவ்ஸ் ,மாலத்தீவுகளில் நடந்த ஆபரேஷன் காஸ்டர் , இலங்கையில் நடந்த ஆபரேஷன் ரெயின்போ மற்றும் இந்தோனேசியாவில்ஆபரேஷன் கம்பீர் ஆகியவற்றிலும் பங்காற்றியது.[29] இந்தியக் கடற்படை மேற்கொண்ட மிகப்பெரிய நிவாரணப் பணிகளில் இதுவும் ஒன்றாகும். சுனாமி பெருக்கெடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாகவே, இந்தியக் கடற்படையினர் தமது நிவாரணப்பணிகளை அண்டை நாடுகளில் தொடங்க முடிந்தது; மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளி நாடுகளிலிருந்து சென்ற முதற் கடற்படையும் இதுவே.[28]
2006ஆம் ஆண்டு இஸ்ரேல்-லெபனான் சண்டையின் போது,436 இலங்கை வாழ் மக்கள் மற்றும் 69 நேபாள குடிமக்களையும் உள்ளிட்ட, 2,286 இந்தியர்களையும் குடியுரிமை அற்றவர்களையும் போரில் சிதிலமடைந்த லெபனான் நாட்டிலிருந்து இந்தியக் கடற்படை காப்பாற்றியது. இந்தச் செயற்பாடு "அமைதி மற்றும் சாந்தம்" என்னும் பொருள்படுமாறு ஆபரேஷன் சுகூன் என்று பெயரிடப்பட்டது.[30][31] 2006வது வருடத்தில், 10 இந்தியக் கடற்படை மருத்துவர்கள் யூஎஸ்என்எஸ் மெர்ஸி யில் 102 நாட்களுக்குத் தங்கி, பிலிப்பைன்ஸ், வங்காளதேசம், இந்தோனேசியா மற்றும் கிழக்கு டைமோர் ஆகிய இடங்களில் ஏறத்தாழ 10 மருத்துவ முகாம்களை நடத்தினர்.[32] வங்காளதேச சூறாவளிகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு நிவாரண பொருட்களையும் இந்தியக் கடற்படை அளித்துள்ளது. மியன்மாரின் நர்கிஸ் சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியக் கடற்படை, உதவிப் பொருட்களை இரண்டு கப்பல்களில் கொண்டு சென்றது.[33][34][35]
1999வது வருடம் அக்டோபர் மாதம் கடத்தப்பட்ட சப்பானிய சரக்கு கப்பலான எம்வி அலோந்த்ரா ரெயின்போ , இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கரையோர காவல் படையின் ஒருங்கிணைந்த முயற்சியால் கடற் கொள்ளைக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது.[36] 2008 இல், கடற்படை சோமாலியா கடற்கொள்ளையர்களை எதிர்த்து ஏடன் வளைகுடா பகுதிக்கு போர்கப்பல்களை அனுப்பியது.[37] இது பல கடற்கொள்ளை முயற்சிகளைத் தடுத்தது, மேலும் நூற்றுக்கணக்கான கப்பல்களை கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட கடல் வழியாக பாதுகாப்பாக அழைத்துச் சென்றது.[38][39][40]
பிப்ரவரி 2011 இல், இந்திய கடற்படை ஆபரேஷன் சேப் ஹோம்கமிங் என்ற பெயரில் போரால் பாதிக்கப்பட்ட லிபியாவிலிருந்து இந்திய நாட்டினரை மீட்டது.[41] சனவரி-மார்ச் இடையே, சோமாலிய கடற்கொள்ளையர்களின் கடற்கொள்ளையர் முயற்சிகளைத் தடுக்க கடற்படை "ஆபரேஷன் ஐலண்ட் வாட்ச்" ஐத் தொடங்கியது. இந்த நடவடிக்கை கடற்கொள்ளையர் தாக்குதல்களைத் தடுப்பதில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.[42][43][44] 2015 ஆம் ஆண்டு ஏமனில் ஏற்பட்ட நெருக்கடியின் போது, இந்திய கடற்படை ஆபரேஷன் ரகத் இன் ஒரு பகுதியாக 3074 நபர்களை மீட்டது, இவர்களில் 1291 பேர் வெளிநாட்டினர்.[45] 15 ஏப்ரல் 2016 அன்று, ஒரு போயிங் பி-8ஐ நீண்ட தூர ரோந்து விமானம் ஒரு வணிகக் கப்பலின் மீது பறந்து, கடலில் கடற்கொள்ளையர் தாக்குதலை முறியடிக்க முடிந்தது.[46]
சனவரி 2024 இல், வணிக கப்பல்கள் மீது ஹவுத்தி தலைமையிலான தீவிரவாதிகளின் தாக்குதல்களை அடுத்து ஏடன் வளைகுடா மற்றும் அரேபிய கடலில் பகுதிகளில் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க இந்திய கடற்படை 10 போர்க்கப்பல்களை அனுப்பியது. வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை ஏந்திய நாசகாரிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.[47]
கட்டளை மற்றும் அமைப்பு
அமைப்பு
இந்திய கடற்படை பயிற்சி மையத்தில் வீரர்கள் (2012)
இந்தியக் குடியரசுத் தலைவர் இந்திய ஆயுதப் படைகளின் உச்ச தளபதியாக இருக்கிறார். இந்திய கடற்படையின் நிறுவன அமைப்பின் தலைவராக ஒரு கடற்படைப் பணியாளர்களின் முதன்மை அதிகாரி (Chief of Naval Staff) நியமிக்கப்படுகிறார்.[48] இவர் புதுதில்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (கடற்படை) ஒருங்கிணைந்த தலைமையகத்திற்கும் தலைமை தாங்குகிறார். முதன்மை அதிகாரிக்கு ஏதுவாக ஒரு கடற்படை துணை முதன்மை அதிகாரி நியமிக்கப்படுகிறார். ஒவ்வொரு துறைக்கும் நிர்வாகத்திற்காக அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.[49]
இந்திய கடற்படை மூன்று செயல்பாட்டு ஆணைப் பிரிவுகளையும், ஒரு பயிற்சி பிரிவையும் கொண்டுள்ளாது. ஒவ்வொரு பிரிவையும் ஒரு தலைமை அதிகாரி வழிநடத்துகிறார்.[50] மேற்கு கடற்படைபிரிவு மும்பையைத் தளமாகக் கொண்டும், கிழக்கு கடற்படை பிரிவு விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்டும், தெற்கு கடற்படை பிரிவு கொச்சியைத் தளமாகக் கொண்டும் இயங்குகின்றன.[51][52]
மே 2005 இல், இந்தியக் கடற்படை ஐஎன்எஸ் கடம்பா என்ற பிரத்யேக கடற்படை தளத்தை கார்வார் நகரில் நிறுவியது.[56][57] இந்திய கடற்படைக்கு ஓமன் மற்றும் வியட்நாமில் கப்பல்கள் நிறுத்தும் உரிமை உள்ளது.[58] கடற்படையானது மடகாஸ்கரில் கடல்வழித் தொடர்பை இடைமறிக்க கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட கண்காணிப்பு நிலையத்தை இயக்குகிறது.[59]
கடற்படையானது ஐஎன்எஸ் கட்டபொம்மன் என்ற தொலைத்தொடர்பு பரிமாற்ற தளத்தை தமிழ்நாட்டில் திருநெல்வேலி அருகிலுள்ள விசயநாராயணபுரத்தில் இயக்குகிறது.[60]ஐஎன்எஸ் அபிமன்யு மற்றும் ஐஎன்எஸ் கர்ணன் மார்கோசு சிறப்பு படை வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு தளங்களாகும்.[61][62]ஐஎன்எஸ் வர்ஷா என்பது கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் உயர் தொழில்நுட்ப தளத்தை அமைப்பதற்காக கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் வகைப்படுத்தப்பட்ட திட்டமாகும். இந்த தளம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை கையாள சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் தளமாகும்.[63][64]
பயிற்சி
பயிற்சியில் இந்திய கடற்படை வீரர்கள்
இந்திய கடற்படையில் ஒரு சிறப்பு பயிற்சி கட்டளை பிரிவு உள்ளது. இது கடற்படை முழுவதும் அனைத்து அடிப்படை, தொழில்முறை மற்றும் சிறப்பு பயிற்சிகளின் அமைப்பு, நடத்தை மற்றும் மேற்பார்வைக்கு பொறுப்பாகும். தெற்கு கட்டளை பிரிவின் தளபதி, பயிற்சிக் கட்டளைத் தளபதியாகவும் பணியாற்றுகிறார்.[65] இந்திய கடற்படையின் பயிற்சி ஆண்டு சூலை 1 முதல் அடுத்த ஆண்டு சூன் 30 வரை வரையறுக்கப்பட்டுள்ளது.[66]
அதிகாரிகளின் பயிற்சியானது கேரளாவில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையத்தில் நடத்தப்படுகிறது. 2009 இல் நிறுவப்பட்ட இது ஆசியாவின் மிகப்பெரிய கடற்படை பயிற்சி மையமாகும்.[67] துப்பாக்கி சுடுதல், விமானப் போக்குவரத்து, தளவாடங்கள் இயக்கம், பொறியியல், கடற்பயிற்சி, கப்பல்கள் இயக்குவதற்கான சிறப்புப் பயிற்சி, இசை, மருத்துவம் மற்றும் உடல் பயிற்சி நிறுவனங்களையும் கடற்படை இயக்குகின்றது.[68][69] கடற்படை அதிகாரிகள் தேசிய பாதுகாப்பு கல்லூரி, பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி மற்றும் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களிலும் படிப்புகளுக்காக கலந்து கொள்கின்றனர். கடற்படையின் போர் கல்லூரி கோவாவில் உள்ளன.[65][70]
வானூர்திப்படை
இந்தியக் கடற்படையின் மிக்-29கே வானூர்தி
இந்திய கடற்படையின் வானூர்திப்படை பிரிவு 21 வானூர்தி படைப்பிரிவுகளை இயக்குகிறது. இவற்றில், பத்து நிலையான இறக்கை வானூர்திகளை இயக்குகின்றன, எட்டு உலங்கு வானூர்தி படைகள் மற்றும் மூன்று ஆளில்லா வான்வழி வாகன பிரிவுகளாகும். 1948 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை வானூர்தி போக்குவரத்து இயக்குநரகம் நிறுவப்பட்டது. 1951 இல் கடற்படையின் விமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடற்படைத் தேவைப் பிரிவு உருவாக்கப்பட்டது.[71]
சனவரி 1, 1953 அன்று கொச்சி வானூர்தி நிலையத்தின் பொறுப்பு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வருடம் மார்ச் 11 அன்று, புதிதாகக் கையகப்படுத்தப்பட்ட பத்து வானூர்திகளுடன் முதல் கடற்படை வானூர்தி பிரிவு இயக்கப்பட்டது. கடற்படையின் முதல் பிரத்யேக வானூர்தி நிலையம் ஐஎன்எஸ் கருடா இரண்டு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. பிப்ரவரி 1955 முதல் டிசம்பர் 1958 வரை, பயிற்சி தேவையை பூர்த்தி செய்ய பத்து வானூர்திகள் புதிதாக வாங்கப்பட்டன. [71]
இந்திய கடற்படை வானூர்தி தாங்கிக் கப்பலானஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை இயக்குகிறது. இது முப்பதுக்கும் மேற்பட்ட மிக்-29கே ரக வானூர்திகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.[72][73] காமோவ் கா-31 உலங்கு வானூர்திகள் வான்வழி முன்னறிவிப்பு பணிக்காகக் பயன்படுத்தப்படுகின்றன.[74] நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு பணியில் சீ கிங், காமோவ் கா-28 மற்றும் எச்.ஏ.எல். துருவ் ஆகிய உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.[75] கடல் செயல் வீரர் படையான மார்க்கோசு சீ கிங் மற்றும் துருவ் வானூர்திகளை பயன்படுத்துகின்றது. கடல்சார் ரோந்து மற்றும் உளவு நடவடிக்கைகள் போயிங் பி-8 மற்றும் இலியுசின் இல்-38 மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.[76][77][78][79][80]
ஆளில்லா வான்வழி வாகன பிரிவானது ஹெரான் மற்றும் சர்ச்சர் வாகனங்களைக் கொண்டுள்ளது, அவை கப்பல்கள் மற்றும் கடற்கரை தளங்களிலிருந்து கண்காணிப்பு பணிகளுக்காக இயக்கப்படுகின்றன.[81][82][83]
மார்க்கோசு கடல் செயல் வீரர் படை
கடல் செயல் வீரர் படை
மார்கோசு என்று அழைக்கப்படும் கடல் செயல் வீரர் படை ஒரு சிறப்பு செயல்பாட்டு பிரிவாகும். இது 1987 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையால் உருவாக்கப்பட்டது. இது சிறப்புப் போர், பயங்கரவாத எதிர்ப்பு, உளவு, பணயக்கைதிகள் மீட்பு, தேடல் மற்றும் மீட்பு போன்ற பல பணிகளுக்காக உட்படுத்தப்படுகின்றது.[61]
இந்த படையானது கார்கில் போர் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் போர்களில் பங்கு கொண்டுள்ளது.[84][85] இந்த படியானது ஆண்டு முழுவதும் கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.[86][87]
இந்தியக் கடற்படையில் உள்ள அனைத்துக் கப்பல்கள் (மற்றும் கப்பல் தளங்கள்) ஆகியவற்றின் பெயருக்கு முன்னால் இன்டியன் நேவல் ஷிப் (இந்தியக் கடற்படைக் கப்பல்) அல்லது இன்டியன் நேவல் ஸ்டேஷன் (இந்தியக் கடற்படை தளம்) என்பதை குறிக்கும் விதமாக ஐஎன்எஸ் என்னும் எழுத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.[88] இந்திய கடற்படையின் கடற்படையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட கப்பல்களும் உள்ளன. 2022 நிலவரப்படி, இந்தியக் கடற்படையில் இரண்டு வானூர்தி தாங்கிக் கப்பல்கள், 12 நாசகாரிக் கப்பல்கள் மற்றும் 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட கப்பல்கள் உள்ளன.
கடற்படையில் இரண்டு வானூர்தி தாங்கிக் கப்பல்கள் செயலில் உள்ளன, ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, கடற்படையின் முதன்மை வானூர்தி தாங்கிக் கப்பலாக செயல்படுகிறது.[89]விக்ரமாதித்யா திசம்பர் 2013 இல் உருசியாவிடமிருந்து $2.3 பில்லியன் செலவில் வாங்கப்பட்டது. இரண்டாவது விமானம் தாங்கி கப்பல், உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2, 2022 அன்று நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது.[90] இந்திய கடற்படை சேவையில் INS ஜலஷ்வா என பெயரிடப்பட்ட நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய கப்பல் உள்ளது.[91]
கப்பற்படையின் ஐஎன்எஸ் சக்தி எண்ணைக்கப்பல்
கடற்படையால் தற்போது 12 நாசகாரிக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன.[91] இதில் ஐந்து ராஜ்புட் பிரிவு மற்றும் விசாகப்பட்டிணம், கொல்கத்தா, தில்லி பிரிவை சேர்ந்த தலா மூன்று கப்பல்கள் அடங்கும்.[92] தற்பொழுது தல்வார், ஷிவாலிக், பிரம்மபுத்ரா மற்றும் கோதாவரி ஆகிய பிரிவுகளைச் சார்ந்த 12 ஏவுகணை போர்க் கப்பல்கள் இயக்கத்தில் உள்ளன.[93][94] இந்தியக் கடற்படையில் தற்பொழுது கமோர்ட்டா , குக்ரி, வீர் மற்றும் அபே பிரிவு வழித்துணை கப்பல்கள் இயக்கத்தில் உள்ளன.[95][96] இதை தவிர எண்ணைக் கப்பல்கள், ஆராய்ச்சிக் கப்பல்கள், பயிற்சிக் கப்பல்கள், ரோந்துக் கப்பல்கள், கண்ணிவெடி தேடும் கப்பல்கள் உட்பட பல்வேறு கப்பல்கள் செயற்பாட்டில் உள்ளன.[97][98][99]
வானூர்திகள்
இந்திய கடற்படையின் ஒரு மிக்-29கேஇந்திய கடற்படையின் போயிங் பி-8ஐ இந்திய கடற்படையின் காமோவ் கா-31 உலங்கு வானூர்தி
கடற்படையின் துணை-மேற்பரப்புக் கடற்படையில் ஒரு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல், ஒரு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல், 16 தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை அடங்கும்.[121] இந்திய கடற்படையின் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஐந்து கலவாரி (பிரான்சு), ஏழு சிந்துகோஷ் (உருசியா) மற்றும் நான்கு சிசுமார் (சேர்மனி) வகுப்புக் கப்பல்கள் அடங்கும்.[122][123][124]
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட அணு சக்தியால் உந்தப்படும் அரிஹந்த் வகையைச் சார்ந்த முதல் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிஹந்த் ஆகத்து 2016 இல் கடற்படையில் சேர்க்கப்பட்டது.[125] மேலும் ஆறு அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.[126][127]
கடற்படை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பல ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், வான் ஏவுகணைகள், வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகள், பிற துப்பாக்கிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவை இதில் அடங்கும்.[129]
இந்தியா தனது போயிங் பி-8ஐ உளவு விமங்களிலும் ஹார்பூன் ஏவுகணைகளைப் பொருந்தியுள்ளது. [132] இந்திய போர்க்கப்பல்களின் முதன்மையான வான்-பாதுகாப்பு கவசம் தரையிலிருந்து ஏவப்படும் பராக் 1 ஏவுகணையால் வழங்கப்படுகிறது.[133]பிரித்வி இன் கடற்படை வடிவமான தனுஷ் 350 கி.மீ. தூரம் வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க வல்லது.[134]
கே-15 சாகரிகா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையானது குறைந்தது 700 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.[135][136]
மின்னணு சார் போர் நடவடிக்கைகள்
சங்ரகா என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து செயல்படுத்தும் ஒரு மின்னணுப் போர் நடவடிக்கைத் திட்டமாகும். பல்வேறு கடற்படை தளங்களில் பயன்படுத்த, மின்னணு போர் தொகுப்புகளின் குடும்பத்தை உருவாக்க இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[137]
இந்திய கடற்படை அதிவேக தரவு மற்றும் செயற்கைக்கோள்கள் வழியாக அனைத்து கரை அடிப்படையிலான நிறுவல்களையும் கப்பல்களையும் இணைப்பதன் மூலம் ஒரு புதிய உத்தியை செயல்படுத்தி வருகிறது.[138][139] தகவல் தொழில்நுட்பப் பணிகளுக்காக கடற்படையில் பிரத்யேகப் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் இயங்குகிறது. நிறுவன அளவிலான மென்பொருள் மேம்பாட்டுத் திட்டங்கள், பாதுகாப்பு தயாரிப்புகள் தொடர்பான மேம்பாட்டு நடவடிக்கைகள், கரையோர வலைப்பின்னல்களின் நிர்வாகம் மற்றும் முக்கியமான கடற்படை சார்ந்த மென்பொருள் பயன்பாடுகளை நிர்வகித்தல் ஆகியவை இதன் பொறுப்பாகும்.[140][141] இந்தியாவின் முதல் பிரத்யேக கடற்படை பாதுகாப்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7 2013 இல் வெற்றிகரமாக ஏவப்பட்டது.[142]
இந்திய ஆயுதப் படைகளின் உச்ச தளபதியாக இருப்பதால், இந்தியக் குடியரசுத் தலைவர் எப்பொழுது வேண்டுமானாலும் கடற்படையை ஆய்வு செய்யலாம். 1953 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் முதல் கடற்படை மதிப்பாய்வு நிகழ்ச்சியை நடத்தினார். இதுவரை 2001 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இரண்டு சர்வதேச கடற்படை மதிப்பாய்வுகள் உட்பட பன்னிரண்டு கடற்படை மதிப்பாய்வுகள் நடந்துள்ளன.[143] பிப்ரவரி 2001 இல் மும்பையில் இந்திய கடற்படை "நட்பின் பாலங்கள்" என்ற சர்வதேச கடற்படை மதிப்பாய்வையும் நடத்தியது. அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து நட்பு கடற்படையின் பல கப்பல்கள் பங்கேற்றன.[144] இரண்டாவது சர்வதேச கடற்படை மறுஆய்வு, பிப்ரவரி 2016 இல் விசாகப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது.
கடற்படைப் பயிற்சிகளும் ஒத்துழைப்பும்
மலபார் 2007 ஐந்து தேச படைக்கப்பல்களின் போர் விளையாட்டு
இந்தியா அடிக்கடி மற்ற நட்பு நாடுகளுடன் கப்பல் பயிற்சிகளை மேற்கொள்கிறது; பரஸ்பர இயக்கத்தை அதிகரிக்கவும், கூட்டுப் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தவும் இவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளது. பிரான்சு கடற்படையுடன் வருணா, ஐக்கிய நாடுகளின் கடற்படையுடன் கொன்கன், உருசியக் கடற்படையுடன் இந்திரா, அமெரிக்கக் கடற்படையுடன் மலபார் மற்றும் சிங்கப்பூர் கடற்படையுடன் சிம்பெக்ஸ் போன்ற இத்தகைய பயிற்சிகள் வருடத்திற்கொரு முறை மேற்கொள்ளப்படுகின்றன. 2007வது ஆண்டு ட்ரோபெக்ஸ் (தியேட்டர்-லெவல் ரெடினெஸ் ஆபரேஷனல் எக்ஸர்சைஸஸ்) இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்டது, இச்சமயத்தில் இந்திய காலாட்படைக்கும் இந்திய விமானப்படைக்கும் ஆதரவளிக்கும் நோக்கத்தோடு நில மற்றும் வான் போர் ஒன்றை நடத்தும் கோட்பாடு ஒன்றையும் சோதித்துப் பார்த்தது.[145] ஆசிய-பசிபிக் பகுதியில் ஒருங்கிணைந்த கடற்படை ரோந்து சுற்றும் பணிக்காக ஜப்பானோடு 2008வது வருடம் அக்டோபர் மாதத்தில் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.[146]
மலபார் 2007ன்போது இந்தியக் கடற்படை விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விராட்டிற்கு மேலாக அணிவகுத்துப் பறக்கும் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளின் விமானங்கள்
இந்தியக் கடற்படையில் பயிற்சிக் கப்பல் ஐஎன்எஸ் தரங்கிணி
இந்தியக் கடற்படை, முறையான கால இடைவெளிகளில் சாகச ஆய்வுப் பயணங்களை மேற்கொள்கிறது. 2003வது ஆண்டு பயிற்சிக் கலமான' 'ஐஎன்எஸ் தரங்கிணி , பிற நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு உலகம் தழுவிய கப்பற் பயணத்தை மேற்கொண்டது; 18 நாடுகளில் 36 துறைமுகங்களுக்கு வருகை அளித்த பின்னர் மறு வருடத்தில் மே மாதம் இந்தியாவிற்குத் திரும்பியது[160]
லெஃப்டினென்ட் கமாண்டர் எம்.எஸ்.கோஹ்லி எவரெஸ்ட் சிகரத்தின் முதல் பயணத்திற்கு 1965ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையை நடத்திச் சென்றார்; மீண்டும் 2004வது வருடம் மே மாதம் இதைப் போன்ற ஒரு பயணத்தின் போது எவெரெஸ்ட் சிகரத்தின் மீது கடற்படையின் கொடி பறக்க விடப்பட்டது.[161] மற்றொரு கடற்படைக் குழு, தொழில் நுட்ப ரீதியாக மிகவும் சவாலான வழித்தடமாக அமைந்துள்ள, எவரெஸ்டின் சிகரத்தின் வட முகத்தையும் வெற்றிகரமாகக் கடந்து மலையேறியது.[162] உன்னத நீர்மூழ்கி பிரிவைச் சார்ந்த கமாண்டர் சத்யப்ரதா தாம் என்பவர் இந்தப் பயணத்தை நடத்தி சென்றார்.[163] In 2017, to commemorate 50 years of the Navy's first expedition in 1965, a team set off to climb Mount Everest.[161]
11 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இந்தியக் கடற்படை குழு ஆர்க்டிக் துருவத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தது. அதற்குத் தம்மைத் தயார் செய்து கொள்ள, குழு உறுப்பினர்கள் முதலில் ஐஸ்லாந்துக்குச் சென்று, அங்குள்ள ஒரு சிகரத்தில் ஏற முயன்றனர்.[164] இந்தக்குழு அடுத்து கிழக்கு கிரீன்லாந்துக்குப் பறந்து சென்றது; அங்கு குலுசுக் மற்றும் அங்மஸாலிக் பகுதிகளில், குளிரால் உறைந்திருந்த பள்ளதாக்குகளில், எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் இனுயிட் படகுகளை அவர்கள் பயன்படுத்தினர். அவர்கள் ஆர்க்டிக் சர்க்கிள் பனிப்பாறைகளுக்கு எழுபது டிகிரி கோணத்தில் வடபுறமாகப் பயணம் செய்தனர். இந்தக்குழு பெயர் அறியப்படாத 11,000 அடி உயரமுள்ள சிகரம் ஒன்றைத் தொட்டு அதற்கு "இந்தியச் சிகரம்" என்று பெயரிட்டனர்.[165]
இந்தியக் கடற்படையின் கொடி அன்டார்டிகாவில் 1981வது ஆண்டு முதன் முதலாகப் பறந்தது.[166] 2006வது வருடம், இந்தியக் கடற்படை தென் துருவத்தினூடே பனியின் இடையே பனிக்கட்டைகள் கொண்டு பயணம் செய்து தனது தக்ஷிண் துருவ் பணித்திட்டத்தில் வெற்றியடைந்தது. இந்த சரித்திரப்புகழ் வாய்ந்த பயணத்தின் மூலம், அவர்கள் நிலவியலில் தென் துருவத்தில் பனியின் இடையே பயணம் செய்த முதல் ராணுவக் குழு என்ற சாதனையை உருவாக்கியுள்ளனர்.[167] மேலும், பத்து உறுப்பினர் கொண்ட குழுவில் மூவர்- பயணத்தின் தலைவர்- கமாண்டர் சத்யப்ரதா தாம், மருத்துவர்கள் ராகேஷ் குமார் மற்றும் விகாஸ் குமார் ஆகியோர் உலகிலேயே இரண்டு துருவங்கள் மற்றும் எவரெஸ்ட் சிகரம் ஆகியவற்றை அடைந்த மிகச் சிலரில் தற்பொழுது உள்ளீடாகின்றனர்.[168] துருவங்களுக்கும் எவரெஸ்ட் சிகரத்திற்கும் சென்ற முதல் நிறுவனம் சார்ந்த அமைப்பு இந்தியக் கடற்படையே ஆகும்.[169] கமாண்டர் அபிலாஷ் டோமி எந்த தொழில்நுட்பம் அல்லது வழிசெலுத்தல் உதவிகள் பொருத்தப்படாத பாய்மரப் படகில் தனியாக, இடைவிடாமல் உலகை சுற்றி வந்த முதல் இந்தியர் ஆனார்.[170][171]
↑"Area of Work DRDO". Defence Research and Development Organization. Ministry of Defence. Archived from the original on 14 August 2017. Retrieved 23 July 2017.
Brewster, David (2014). India's Ocean: The Story of India's Bid for Regional Leadership. Routledge. ISBN978-1-317806-98-1.
Findlay, Ronald (2009). Power and Plenty: Trade, War, and the World Economy in the Second Millennium. Princeton University Press. ISBN978-1-400831-88-3.