மாஸ்டர் பிரபாகர்
மாஸ்டர் பிரபாகர் (பிறப்பு பிரபாகர் வைஷ்யன் ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் முதன்மையாக தமிழ் மற்றும் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் 1977 மற்றும் 1987 க்கு இடையில் தூர்தர்சனுக்காக சுமார் 60 நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். தொழில்நுட்ப வல்லுநராக சில பாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். ஜி. ஆர். நாதன் இயக்கிய தேவாலயம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். இவர், 150 திரைப்படங்களில் நடித்துள்ளார். [1] [2] தனிப்பட்ட வாழ்க்கைஇந்தியாவில், தமிழ்நாட்டின், மதுரையில் பிரபாகர் பிறந்தார். இவரது தாய்மொழி சௌராட்டிர மொழி. இவரது தந்தையும் தாயும் மதுரையை சேர்ந்தவர்களே. இவரது தந்தை ஒளிப்பட நிலையம், அச்சகம் போன்ற பல வணிகங்களை செய்துவந்தார். இவரது தாயார் ஒரு இல்லத்தரசியாவார். இவருக்கு சுமதி என்ற தங்கையும், ஆறு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் இருந்தனர். குடும்பத்தில் முதன்முதலில் திரையுலகிற்கு வந்தவர் பிரபாகர் ஆவார். 1966 இல், பிரபாகர் சுமதியுடன் சேர்ந்து தனது கனவுகளைத் தேடி அவரது அத்தையுடன் சென்றார். [3] தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia