மீர் காசிம்![]() மீர் காசிம் (Mir Qasim) (Bengali: মীর কাসেম; இறப்பு: 8 மே 1777) 7-வது வங்காள நவாபாக 1760 முதல் 1763 முடிய இருந்தவர். 1764-இல் ஆங்கிலேயருக்கும், வங்காள நவாபு மீர் ஜாபருக்கும் இடையே நடைபெற்ற பிளாசி சண்டையில், வங்காளத்தின் தலைமைப் படைத்தலைவர் மீர் காசிம் ஆங்கிலேயருக்கு மறைமுகமாக உதவியதால், 6-வது வங்காள நவாபாக இருந்த மீர் ஜாபர் போரில் தோற்றார். போரில் ஆங்கிலேயருக்கு உதவிய மீர் காசிமை வங்காளத்தின் 7-வது நவாபாக முடிசூட்டப்பட்டார்.[1] இருப்பினும் மீர் காசிம் ஆங்கிலேயருடன் பிணக்குகள் கொண்டிருந்தார். எனவே மீர் காசிம், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் உறவு கொள்ள முயன்றார். மீர் காசிமின் இச்செயலை எதிர்த்த ஆங்கிலேயர்கள், பக்சார் சண்டையில், மீர் காசிமை வென்று, மீண்டும் பழைய வங்காள நவாபு மீர் ஜாபரை வங்காள அரியணையில் ஏற்றினர்.[2] இபோரின் முடிவில் ஆங்கிலேயர்கள் வட இந்தியா மற்றும் வங்காளத்தின் பெரும்பகுதிகள் கைப்பற்றினர்.[3] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia