After Indian independence in 1947, followed by the promulgation of the இந்திய அரசியலமைப்பு on 26 January 1950, which marked the transformation of the Dominion of India into the இந்தியா, the Article 18 of the Indian Constitution abolished all titles, except those given by the இந்திய அரசு to those who have made their mark in military and academic fields. However, under the policy of Privy Purse nobles were allowed to enjoy certain privileges and keep their titles. However, this policy was abolished in 1971 by the twenty-sixth Amendment of the Constitution of India. Thus the title of the "Nawab Bahadur of Murshidabad" was officially, constitutionally and legally abolished in 1971.
Murshidabad was the capital for both the Nawabs of Bengal and the Nawabs of Murshidabad.
வங்காள நவாபுகள் முகலாயப் பேரரசின் பிரதிநிதிகளாக பெயரளவில் இருப்பினும், 1717 - 1765க்கு இடைப்பட்ட காலங்களில், வங்காள மாகாணத்தின் தன்னாட்சியாளர்களாகவே விளங்கினர்.
1793ம் ஆண்டு முதல் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினர், வங்காள நவாபுகளின் ஆளுநர் பதவிகளை பறித்துக் கொண்டு, அதற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்கினர்.[3][4]
நவம்பர், 1880ல் வங்காளத்தின் இறுதி நவாப் மன்சூர் அலி கானுக்குப் பதிலாக அவரது மகன் அசன் அலி மிர்சாவை வங்காளம் மற்றும் முர்சிதாபாத் நவாபாக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் நியமித்தனர்.[5].[5][6] 1880ல் வங்காள நவாபுகளின் பட்டங்களை ஆங்கிலேயர்கள் பறித்தனர்.
வங்காளம் மற்றும் முர்சிதாபாத்தை 1717 முதல் 1880 முடிய நசிரி, அப்சர் மற்றும் நஜபி என மூன்று இசுலாமிய வம்ச நவாபுகள் ஆண்டனர்.[9]
நசிரி வம்ச நவாபுகள் 1717 முதல் 1740 வரையும், அப்சர் வம்ச நவாபுகள் 1740 முதல் 1757 வரையும் ஆண்டனர். வங்காளத்தை மூன்றாவதாகவும், இறுதியாக ஆண்டவர்கள் நஜபி இசுலாமிய நவாபுகள் ஆவார்.[10]
முகலாயப் பேரரசில் வங்காள நவாபுகள்
முகலாயப் பேரரசில் செழிப்பு மிக்க மாகாணம் வங்காளம் ஆகும்.[11] 1700ல் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி காலத்தில், வங்காள நவாபுகள் பெயரளவிற்கு முகலாயப் பேரரசின் பிரதிநிதிகளாக வங்காளத்தை ஆண்டாலும், தங்களது படைகளை வலுப்படுத்தி தன்னாட்சியுடன் ஆண்டனர்.[12][13]
மராத்தியர்கள் 1741 முதல் 1748 வரை ஆறு முறை வங்காளத்தின் மீது படையெடுத்தனர். இப்படையெடுப்புகளின் போது, மராத்தியப் படைத்தலைவர் இரகுநாதராவ், வங்காள நவாபுகள் ஆண்ட தற்கால ஒடியாவின் பகுதிகளை கைப்பற்றினார். மராத்தியப் படையெடுப்புகளால் பிகார், வங்காளம், ஒடிசா பகுதிகளின் பொருளாதாரம் பாதிப்படைந்தது.
1751ல் வங்காள நவாப் அலிவர்த்தி கான், மராத்தியர்களுடன் செய்து கொண்ட போர் ஒப்பந்தப்படி, வங்காள நவாபுகள் தங்களின் ஆட்சிப் பகுதியான ஒடிசாவின் பெரும்பகுதிகளை மராத்தியர்களுக்கு விட்டுக்கொடுத்ததுடன், ஆண்டுக்கு 12 இலட்சம் ரூபாயும் கப்பம் கட்ட வேண்டியதாயிறு.[14]
கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் வங்காள நவாபுகளும் மற்றும் நவாபுகளின் வீழ்ச்சியும்
1750களில் மராத்தியப் படைகளால், முகலாயப் பேரரசின் முதுகெலும்பு முறிக்கப்பட்ட நிலையில், பேரரசு முழுவதும் தன்னாட்சி கொண்ட சிறிதும், பெரிதுமான புதிய இராச்சியங்கள் உருவாயின.
1757ல் நடைபெற்ற பிளாசி சண்டையில், வங்காள நவாப் சிராச் உத் தவ்லாவை, கிழக்கிந்தியக் கம்பெனி படைத்தலைவர் ராபர்ட் கிளைவ் வெற்றி கொண்டார்.[15] இப்போருக்குப் பின்னர் வங்காள நவாபுகள், ஆங்கிலேயப் படைகளின் பாதுக்காப்பில், பொம்மை நவாபுகளாக வங்காளத்தை ஆண்டனர்.[15]
போரின் முடிவில் 12 ஆகஸ்டு 1765 அன்று முகலாயப் பேரரசர் ஷா ஆலமிற்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே அலகாபாத் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, வங்காளம், பிகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட கிழக்கிந்தியாவின் மக்களிடம் கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக வரி வசூலிக்கும் உரிமை பெற்றது. மேலும் அயோத்தி நவாப் சுஜா உத்-தவுலா அலகாபாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கம்பனியாருடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டார்.
மேலும் வங்காள மாகாணத்தின் பெரும் பகுதிகளில் நிலவரி வசூலிக்கும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனியினர் பெற்றனர்.
1774ல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியத் தலைமை ஆளுநர் ஆக பதவியேற்ற வாரன் ஹேஸ்டிங்ஸ், 1765ல் வங்காளத்தை கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிப் பகுதியாக வங்காள மாகாணமாக நிறுவினர். கொல்கத்தா நகரம் வங்காள மாகாணத்திற்கு தலைநகரானது. இந்தியத் தலைமை ஆளுநர் வாரன்ஹேஸ்டிங்ஸ், வங்காள நவாபுகளுக்கு பணியிலிருந்து ஓய்வு கொடுத்து, மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கினர்.
வங்காள நவாபுகளின் பட்டியல்
சர்பராஸ் கான் மற்றும் மீர் ஜாபர் ஆகியோர் மட்டுமே இரண்டு முறை வங்காள நவாபுகளாக பதவியில் இருந்தனர்.[16] 1717ல் முர்சித் குயுலி கானால் நிறுவப்பட்ட வங்காள நவாபுகளின் ஆட்சி, முர்சிதாபாத் நவாப் மன்சூர் அலி கானுடன் 1881ல் நிறைவுற்றது.[12][16]
ஆங்கிலேயர்களால் 1881ல் வங்காள நவாபுகளின் பட்டங்கள் பறித்த பிறகு, அப்பட்டங்கள் முர்சிதாபாத் நவாபுகளுக்கு வழங்கப்பட்டது.[12] 1971ல் இந்திய அரசால் முர்சிதாபாத் நவாப் பட்டங்கள் பறிக்கப்பட்டது.