முகமது மீரான் ராவுத்தர்

முகமது மீரான் ராவுத்தர் (எ)
ஹாஜி கருத்த ராவுத்தர்
பிறப்புமுகமது மீரான் ராவுத்தர்
1888
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம், தமிழ்நாடு,
 இந்தியா.
இறப்புஆகஸ்ட் 6, 1958
உத்தமபாளையம்
இறப்பிற்கான
காரணம்
வயது முதிர்வு
கல்லறைஉத்தமபாளையம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்ஹாஜி கருத்த ராவுத்தர்
அறியப்படுவதுவிடுதலைப் போராட்ட வீரர்,
கல்வியாளர்
பெற்றோர்(கள்)செந்தலை சையத் லெப்பை ராவுத்தர் (தந்தை),
மீர்குட்டியம்மாள் (தாய்)

முகமது மீரான் ராவுத்தர் (Mohamed Meera Rowther) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டத்தில், அம்மாவட்ட மக்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு 1956 ஆண்டு உயர் கல்வி நிலையமான ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா (தன்னாட்சி) கல்லூரியை உத்தமபாளையத்தில் தோற்றுவித்தவர்.[1] 1888-ஆம் ஆண்டு உத்தமபாளையத்தில் விவசாயக் குடும்பம் ஒன்றில், செந்தலை சையது லெப்பை ராவுத்தர் மீர்குட்டியம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். 1958-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6ஆம் தேதியன்று முகமது மீரான் ராவுத்தர் இறந்தார்.[2]

விடுதலைப் போராட்ட வீரர்

கருத்த ராவுத்தர் என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவர், ஒரு விடுதலைப் போராட்ட வீரர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர், மதுரை நகரின் வீதிகளில் தான் இயற்றிய பாடல்களைத் தன் மனைவியுடன் பாடிக்கொண்டு உலா வந்து சுதந்திர எழுச்சியை ஊட்டியவர்.[3] சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஆங்கிலேய அரசு இவருக்கு 500 ரூபாய் அபராதமும், சிறைத்தண்டனையும் விதித்தது. தேச விடுதலைக்காக மதுரை சிறையிலும், பின்னர் அலிப்பூர் சிறையிலும் சிறைப்படுத்தப்பட்டார்.[4]

1922 ஆம் ஆண்டில், பெரியகுளம் தாலுகாவின் காங்கிரஸ் மாநாட்டை நடத்தும் பொறுப்பு காந்திஜியால் இவருக்கு வழங்கப்பட்டது. இம்மாநாடு, கிலாபத் இயக்கத்தை ஒடுக்குவதற்காக ஆங்கில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிவித்தும், எதிர்த்தும் மக்களுக்கு அந்த நடவடிக்கைகளை விமர்சனம் செய்து அவர்களது கவனத்துக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை ஆங்கிலேய அரசின் எதிர்ப்புகளை மீறி இவர் நடத்திக் காட்டினார்.[5]

நிதியுதவி

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சென்னை தி நியூ கல்லூரி மற்றும் சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரிக்கு நிதியுதவியினை வழங்கி இருக்கிறார்.[6] 1950 ஆம் ஆண்டில், உள்ளூர் வாரிய உயர்நிலைப் பள்ளி நிரந்தரக் கட்டிடம் இல்லாததால் மூடப்படும் நிலையில் இருந்த போது, ​​ஹாஜி கருத்த ராவுதர் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கட்டிடத்தைக் கட்டித் தந்தார். அப்போதைய மதுரை மாவட்ட வாரியம் அந்தப் பள்ளிக்கு 'கருத்த ராவுதர் ஹவுதியா உயர்நிலைப் பள்ளி' என்று பெயரிட்டது.[7]

மேற்கோள்கள்

  1. "தேனியின் கல்வி கண் திறந்த ஹாஜி கருத்த ராவுத்தர் - யார் இவர்?". tamil.news18.com. 2022-08-08. Retrieved 2025-05-15.
  2. "ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் நிறுவனரின் 65வது நினைவு நாள் தின நினைவஞ்சலி பேரணி". mycitytheni.com. 2024-08-07. Retrieved 2025-05-15.
  3. "விடுதலைப் போரில் தமிழக இஸ்லாமியர்களின் தியாகம்". www.natputanramesh.blogspot.com/. 2016-08-26. Retrieved 2025-05-22.
  4. "இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு கருத்த ராவுத்தர்". www.adminmedia.in/. 2016-08-26. Retrieved 2025-05-22.
  5. "எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள்..." www.adirainirubar.blogspot.com/. 2014-03-29. Retrieved 2025-05-22.
  6. மணவை முஸ்தபா எழுதி, மீரா பப்ளிகேசன்ஸ் வெளியிட்ட இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் (1991) - பக்கம் 68-69 கருத்த ராவுத்தர் (ஹாஜி) குறித்த செய்தி.தமிழிணையம் - மின்னூலகம்
  7. "ABOUT THE FOUNDER". www.hkrhc.ac.in/ (in ஆங்கிலம்). Retrieved 2025-05-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya