முகம்மது நபி நிலவைப் பிளந்த நிகழ்வு
முகம்மது நபி நிலவைப் பிளந்த நிகழ்வு (splitting of the moon by Prophet Muhammad ) (அரபி: انشقاق القمر) என்பது இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்றாகும்.[1] [2] இந்நிகழ்வு குர்ஆன் வசனங்கள் மூலமும் (54:1-2),ஹதீஸ்கள் மூலமும் எடுத்தியம்பப் படுகின்றன. பெரும்பாலான முஸ்லீம் விரிவுரையாளர்கள் நேரடி சந்திரன் பிளவு நிகழ்வு நடந்தது என விளக்குகின்றனர். சில அறிஞர்கள் கூற்றுப்படி இறுதித் தீர்ப்பு நாள் அன்று நடக்கும் நிகழ்வு எனக்கூறுகின்றனர். நேரடி விளக்கங்கள் முகம்மது நபியின் தோழர்களான இப்னு அப்பாஸ், அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் போன்றவர்கள் மூலமும் இன்னும் சிலர் மூலமும் விவரிக்கப்பட்டுள்ளன.[3][4] பின்னணிசில குறைஷிக் குலத்தைச் சார்ந்த தலைவர்கள் முகம்மது நபியிடம் "நீங்கள் உண்மையான இறைத்தூதராக இருந்தால் முற்காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர்கள் போல் அற்புதங்களை காட்டவும்" எனக்கூறினாரகள். அப்பொழுது முகம்மது நபி நிலவை பிளந்து மறுபடியும் ஒட்ட வைத்தார்கள் என்பது முசுலிம்களின் நம்பிக்கையாகும்.[5][6][7][8][9] [10] [11] [12] [13] [14] குர்ஆன் வசனங்கள்முகம்மது நபி சந்திரனை பிளந்த நிகழ்வை பற்றிய குர்ஆன் வசனங்கள் 54:1-2 வருமாறு:
ஹதீஸ்முகம்மது நபி சந்திரனை பிளந்த நிகழ்வை பற்றிய ஹதீஸ் வசனங்கள் வருமாறு:
நாசா செயற்கைக்கோள் புகைப்படம்1969 இல் அப்பல்லோ 10 செயற்கைக் கோள் அனுப்பிய நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தில் நிலவு பிளந்ததற்கான [ https://apod.nasa.gov/apod/image/0210/rille_apollo10_big.jpg ] அடையாளம் கண்டறியப்பட்டது.[16] .[17][18] அப்பல்லோ 10 செயற்கைக் கோள் அனுப்பிய நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தில் 300 கி.மீ. நீள பிளவு காணப்பட்டது.[19] 2010 இல் இணைய விவாதங்களில் நிலவு பிளந்ததற்கான ஆதாரம் விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சார்ந்த பிராட் பெய்லி "நிலவு பிளந்ததற்கான ஆதாரம் இணைய விவாதங்கள் மூலம் இல்லாமல் ஆராய்ச்சி கட்டுரைகள் மூலமாகவே நிருபிக்க வேண்டும்" எனக் கூறினார்.[20] சேரமான் பெருமாள்சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர நாட்டு மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபியைப் பற்றியும், இஸ்லாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.என்பதாக இந்திய மாநிலமான கேரள முசுலிம்கள் மத்தியில் தொன்மவியல் கருத்து உள்ளது.[21][22] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia