முங்கேர் வானுர்தி நிலையம்
முங்கேர் வானுர்தி நிலையம் (Munger Airport), சபியாபாத் வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இந்த வானூர்தி நிலையம் இந்திய மாநிலமான பீகாரில் முங்கேர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] மாவட்ட தலைநகர் முங்கேரிலிருந்து 5 கி.மி. தொலைவில் சபியாபாத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.[3] இந்த விமான நிலையம் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாறுமுங்கேர் விமான நிலையம் 90 ஆண்டுகள் பழமையான நிலையமாகும்.[2] 2015 ஜனவரியில், அப்போதைய மாநில முதல்வராக இருந்த ஜீதன் ராம் மாஞ்சி விமான நிலையத்தை மேம்பாடு செய்து உள்நாட்டு விமானச் சேவையினை தொடங்க அறிவித்தார்.[1] மார்ச் 2015இல், பீகார் ராஜ்ய பவன் நிமான் நிகாமுக்கு விமான நிலைய சீரமைப்பு பணிகள் வழங்கப்பட்டன. விமான நிலையம் 8 கோடி செலவில் சீரமைப்பு செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் ஓடுபாதையை முதலமைச்சர் நிதீஷ் குமார் 24 மே 2016 அன்று பயன்பாட்டிற்குத் துவக்கி வைத்தார்.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia