முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (Investor Education and Protection Fund), இந்திய நிறுவன சட்டம் 2013, பிரிவு 125இன் கீழ்[1] இந்திய அரசால் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் நிறுவன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் ஆகும். ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான செலுத்தப்படாத அல்லது கோரப்படாத தொகைகள் தொகுக்கப்பட்டு முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியில் வரவு வைக்கப்படுகிறது. இதன் நிதிகல் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிகள் சட்டத்தின் கீழ் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

நிதி நிர்வாகம்

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியை நிர்வகிப்பதற்கு, இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவர், ஒரு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஏழு உறுப்பினர்கள் கொண்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் உள்ளது..

இந்திய தலைமை தணிக்கையாளர்ருடன் கலந்து நிதி தொடர்பான கணக்குகள் மற்றும் பிற தொடர்புடைய பதிவுகளை பராமரிக்கிறது. இந்த ஆணையம் முதலீட்டாளர்களின் கோரப்படாத நிதியை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்திச் செலவிடும். இதன் கணக்குகளை இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்வார். தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கை மற்றும் வருடாந்திர அறிக்கையைகளையும் ஆணையம் இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும். இந்திய அரசு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதம் நடத்தும்.

நிதிக்கு வரவு வைக்கப்படும் தொகைகள்

  • பரிமாற்றத் தேதியிலிருந்து ஏழு ஆண்டுகள் நிறுவனங்களால் செலுத்தப்படாதா அல்லது முதலீட்டாளர்களால் உரிமை கோரப்படாதா ஈவுத்தொகைகள் மற்றும் பங்குத் தொகைகள் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு வரவு வைக்கப்படும்.
  • இந்திய நிறுவனங்கள் சட்டம், 1956 இன் பிரிவு 205A(5) இன் கீழ், இந்திய அரசின் பொது வருவாய் கணக்கிற்கு மாற்றப்படும் தொகை, இந்திய நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் செலுத்தப்படாமலோ அல்லது உரிமை கோரப்படாமலோ உள்ள தொகைகள்.
  • .இந்திய முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி தொகையிலிருந்து செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து பெறப்பட்ட வட்டி அல்லது பிற வருமானங்கள்.
  • வங்கி அல்லாத பிற நிதி நிறுவனங்களில் முதிர்ச்சியடைந்த வைப்புத் தொகைகள், அவை செலுத்த வேண்டிய தேதியிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு உரிமை கோரப்படாமலும், செலுத்தப்படாமலும் உள்ள தொகைகள்.
  • நிதி நிறுவனங்களில் முதிர்ச்சியடைந்த கடன் பத்திரங்கள் மற்றும் அவற்றின் மீது திரட்டப்பட்ட வட்டி, அவை செலுத்த வேண்டிய தேதியிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு உரிமை கோரப்படாமலும் செலுத்தப்படாமலும் உள்ள தொகைகள்.
  • நிறுவனங்களின் போனஸ் பங்குகள் மற்றும் முன்னுரிமைப் பங்குகளின் மீட்புத் தொகை, ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு உரிமை கோரப்படாமலும் அல்லது செலுத்தப்படாமலும் உள்ள தொகைகள்.

நிதியை பயன்படுத்தும் முறைகள்

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் பின்வரும் நோக்கங்களுக்காக மட்டுமே இதன் நிதியை பயன்படுத்த வேண்டும்.

  • முதிர்ச்சியடைந்த கடன் பத்திரங்கள், முதிர்ச்சியடைந்த வைப்புத்தொகைகள், கோரப்படாத ஈவுத்தொகைகள், திருப்பிச் செலுத்த வேண்டிய விண்ணப்பப் பணம் மற்றும் அதன் வட்டி ஆகியவற்றிற்கான பணத்தைத் திரும்பப் பெறுதல்.
  • முதலீட்டாளர்களின் விழிப்புணர்வு, கல்வி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல்.
  • தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட, சட்டத்தின் பிரிவு 37 மற்றும் 245 இன் கீழ், கடன் பத்திரதாரர்கள், உறுப்பினர்கள் அல்லது வைப்புத் தொகையாளர்களால் வழக்குகளைத் தொடர்வதற்காக ஏற்படும் சட்டச் செலவுகளைத் திருப்பிச் செலுத்துதல்.

நிதிக்கு வரவு வைக்கப்பட்ட தொகைகயைத் திரும்பப் பெறுதல்

நிறுவனத்தால் செலுத்தப்படாத அல்லது கோரப்படாத தொகை, செலுத்தப்படாத ஈவுத்தொகை கணக்கிலிருந்து முதலீட்டாளர் நிதிக்கு மாற்றப்பட்ட தொகையை எந்தவொரு நபரோ அல்லது பங்குதாரரோ முதலீட்டாளர் நிதி பாதுகாப்பு ஆணையத்திடமிருந்து தங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். அவர்கள் சட்டத்தின் பிரிவு 125(3)(a) மற்றும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கியல், தணிக்கை, பரிமாற்றம் மற்றும் திரும்பப் பெறுதல்) விதிகள், 2016 இன் விதி 7(1) இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டபடி, IEPF-படிவம் 5ஐ பூர்த்தி செய்து அனுப்பி பணத்தைத் திரும்பப் பெறலாம்.

மேற்கோள்கள்

வெளி இணிப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya