முல்லையன கிரி
முல்லையன கிரி (Mullayana Giri) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் அமைந்துள்ள மிக உயரமான சிகரமாகும். முள்ளையன கிரி சிக்மகளூர் வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சந்திர துரோண மலைத்தொடர்களில் 13 ° 23′26 ″ வடக்கிலும் 75 ° 43′18 ″ கிழக்கிலும் 1,930 மீட்டர் (6,330 அடி) உயரத்துடன் அமைந்துள்ளது.[1] இது கர்நாடகாவின் மிக உயர்ந்த சிகரமாகும். முல்லயனகிரியின் உச்சியில் ஒரு காவல் வானொலி ஒளிப்பரப்பு நிலையம் உள்ளது. சீதலாயனகிரி என்ற ஒரு முக்கிய சிகரம் இந்த இடத்தை ஒட்டியுள்ளது. கோயில்மலை உச்சியிலுள்ள ஒரு சிறிய கோயிலில் (கல்லறை) இருந்து இந்த சிகரத்திற்கு இதன் பெயர் கிடைக்கிறது, இது "முல்லப்பா சுவாமி" என்ற முனிவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் மலையுச்சியில் இரண்டு அடி மட்டுமே இருந்த குகைகளில் தியானித்ததாக நம்பப்படுகிறது. குகைகள் அணுகக்கூடியவையாகவும் மிகவும் ஆழமில்லாமலும் இருக்கிறது. அவை கோயிலின் கர்ப்பகிரகத்திற்கு நேரடி நுழைவாயிலைக் கொண்டுள்ளன. இது இப்போது கோவில் பூசை செய்பவர்களால் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கதைகள் மற்றும் வலுவான சித்தர் கலாச்சாரத்தின் பல பதிப்புகளைத் தவிர, தெய்வத்தைப் பற்றிய தோற்றம் அல்லது எந்த தகவலும் தெளிவற்றதாகவே உள்ளது. முல்லை என்பது பழைய கன்னட மொழியில் காட்டைக் குறிக்கிறது. மலையேற்றம்முன்னதாக, தற்போதைய சாலைகள் மற்றும் 464 கல் மற்றும் கான்கிரீட் படிகள் இல்லாதபோது, சிகரத்தை அடைய ஒரு பாதை பயன்படுத்தப்பட்டது. இது 'சர்ப்பதாரி' அல்லது 'சர்ப்பநாடி' என்று அழைக்கப்படுகிறது. இப்போது இது அடிக்கடி பயன்படுத்துவதில்லை என்றாலும், இந்த பாதை மலையேறுபவர்களால் போற்றப்படுகிறது. புகைப்படங்கள்</gallery> படிமம்:Mullayanagiri1.JPG|முல்லையன கிரிக்கு செல்லும் வழியில் படிமம்:Mullaiyangiri hills.jpg|முல்லையங்கிரி மலைகள் </gallery> மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்Tours and Trip Packages பரணிடப்பட்டது 2019-06-18 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia