மொரிசியசு அரசுமொரிசியசு அரசு என்பது மொரிசியசு நாட்டினை ஆளும் அமைப்பாகும். மொரிசியசின் அரசுத் தலைவராக பிரதமர் இருப்பார். 2011-ஆம் ஆண்டில், உலக அளவில் பல நாடுகளிடையே ஆட்சி முறை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மக்களாட்சியை பின்பற்றும் மொரிசியசு 167-ஆம் இடத்தைப் பெற்றது. ஆப்பிரிக்காவிலேயே முழு மக்களாட்சியை நடைமுறைப்படுத்திய நாடாகவும் குறிப்பிடப்பட்டது.[1] சட்டவாக்கம்மொரிசியசில் சட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்துவது மொரிசியசின் தேசிய சட்டமன்றம் ஆகும். இது மொரிசியசு அரசின் அங்கமாகும். இந்த சட்டமன்றத்தில் எழுபது உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் 21 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.[2] அமைச்சரவைநீதித் துறைமொரிசியசின் நீதித் துறையில் உச்ச நிதிமன்றமே உயர் அமைப்பாகும். இதைத் தவிர, ரோட்ரிக்சின் நீதிமன்றம், இடைக்கால நீதிமன்றம், தொழிற்துறை நீதிமன்றம் உள்ளிட்டவையும் உள்ளன. மொரிசியசின் நீதித் துறையின் தலைமைப் பொறுப்பில் உச்ச நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி இருப்பார்.[3] உள்ளூர் அரசுகள்நகரம், ஊர், மாவட்டம் உள்ளிட்டவையும் தமக்கென அரசுகளை கொண்டுள்ளன.[4] மேலும் பார்க்கசான்றுகள்
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia