தொல்காப்பியம் மொழிமரபு நிரல் நச்சினார்க்கினியர் உரை பதிப்பு 1937
மொழியின் முதலில் வரும் எழுத்துகள் மொழிமுதல் எழுத்துகள் ஆகும்.[1]
முதலெழுத்து என்பது உயிரும் மெய்யும். இதில் உள்ள முதல் என்னும் சொல் "முதலை வைத்துப் பொருளீட்டு" என்னும் சொற்றொடரில் உள்ள முதல் போன்றது. ஆதி பகவன் முதற்றே உலகு[2] என்பதில் உள்ள முதல் என்பதும் இதே பொருளைக் கொண்டது. இது கால முதன்மை கொண்ட மூலதனம்.
மொழிமுதல் எழுத்து என்பதில் உள்ள முதல் இட முதன்மையைக் காட்டும். முதலில் நிற்கிறான். அகர முதல எழுத்தெல்லாம்[2] என்பனவற்றிலுள்ள முதல் போன்றது. இது இட முதன்மை.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மொழிமரபு என்னும் இரண்டாவது இயலில் கூறப்படும் செய்திகளில் மொழிமுதல் எழுத்துகள் பற்றிய செய்தியும் ஒன்று.
பேசப்படுவது மொழி. அதற்கு எழுத்து வடிவமும் உருவாக்கிக் கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவது சொல்லாகிறது. தமிழ் சொற்களில் முதலில் வரும் எழுத்துகள் மொழி முதல் எழுத்துகள் எனப்படுகின்றன. அவை என்பது இங்குக் கூறப்படுகிறது. இவற்றின் மூலம் புணர்ச்சியில் எந்த எழுத்து வரும்போது என்ன நிகழும் என்று காணமுடியும்.
ய வரிசையில் 1 எழுத்து மொழிக்கு முதலில் வரும். (யா)
1.யான்
குற்றியலுகரம் 1
1.நுந்தை (இது முறைப்பெயர். உன் தந்தை எனபது இதன் பொருள். இச் சொல்லின் முதலெழுத்தை இதழ் குவியாமல் ஒலித்தால் அப்போது அச்சொல் குற்றியலுகரம். இச்சொல்லையே இதழ் குவிய ஒலித்தால் அப்போது அச்சொல்லின் முதலெழுத்து முற்றியலுகரம்.
(இடைச்சொல் ஙகரம்) உரையாசிரியர்கள் இதனைக் கணக்கில் கொள்வதில்லை
'ங' எழுத்து மொழிக்கு முதலில் வராது. எனினும் தனிப்பொருள் தரும் துணைப்பெயராக வருவதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[41] தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் இதற்கு வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம், அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம் என்னும் எடுத்துக்காட்டுகளைத் தந்துள்ளார்.
நன்னூல் காலத்தில் சில மாற்றங்கள் தோன்றின.[51] தொல்காப்பியம் விலக்கிய எழுத்துகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
ச வரிசையில் (சட்டி, சையம், சௌரி) என 3
ய வரிசையில் (யவனர், யுகம், யூபம், யோகம், யௌவனம்) என 5
ஞ வரிசையில் (ஞமலி) என 1
ங வரிசையில் (அ + ஙனம் = அங்ஙனம்) 1
ஆக 10 எழுத்துகள் கூடின.
ங
அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் என 5 நிலைகளில் ங மொழிமுதல் ஆகும்.
சகரம் 12 உயிரோடும் மொழிமுதல் ஆகும்.
சனி, சாரல், சிலை, சீலை, சுளை, சூளை, செறி, சேறி, சையம், சொரி, சோரி, சௌரி - இவை மயிலைநாதர் தரும் எடுத்துக்காட்டு.
ச மொழிமுதல் பற்றி மயிலைநாதர் விளக்கம்
மயிலைநாதர் தரும் சொற்களைத் தேவநேயப் பாவாணர் வழிமொழிந்து தொல்காப்பிய நூற்பாவுக்கே வேறு வகையில் பாடம் கொள்கிறார்.
மயிலைநாதர் தரும் வெண்பா (பொருள்நோக்குச் சொற்பிரிப்பு)
சரி, சமழ்ப்புச், சட்டி, சருகு, சவடி
சளி, சகடு, சட்டை, சவளி - சவி, சரடு
சந்து, சதங்கை, சழக்கு ஆதி ஈரிடத்தும்
வந்தனவால் சம்முதலும் வை.
கண்ணோட்டம்
சொல்
பொருள்
இப்பொருளைக் குறிக்கும் தொல்காப்பியர் காலச் சொல்
சரி
சரியா, இல்லையா
ஏற்பு
சமழ்ப்பு
சப்பைக்கட்டுக் கட்டிச் சாமர்த்தியமாகப் பேசல்
"கடிசொல் இல்லை காலத்துப் படினே"
சட்டி
மட்பாண்டம்
கலம்
சருகு
உதிர்ந்து காய்ந்த இலைகள்
ஊழிலை
சவடி
சாவி நெல்
பதடி (மக்கட் பதடி எனல் - திருக்குறள்)
சளி
தடுமநோய்
-
சகடு
வண்டி
ஆழி
சட்டை
மேல்சட்டை
மெய்ப்பை
சவளி
சப்பளாக்கட்டை
-
சவி
தன்னைத்தானே சபித்துக்கொள்
அவி (ஐந்து அவித்தான் - திருக்குறள்)
சரடு
கயிறு
ஞாண்
சந்து
"சந்து நீவி" (மலைபடுகடாம்)
புழை
சதங்கை
காலணி வகை
சிலம்பு
சழக்கு
பிணக்கு
புலத்தல், ஊடுதல், துனித்தல்
புத்தாக்கம்
"கடிசொல் இல்லை காலத்துப் படினே" என்று தொல்காப்பியர் சொல்லதிகாரப் புறனடையில் புத்தாக்கச் சொற்களை வரவேற்றுள்ளார்.
இடைக்கால மரபு
தற்கால பிறமொழிகளின் தாக்கம், வாணிபத் தொடர்புகள் என்பவற்றால் பிறமொழிச் சொற்கள் தமிழில் எழுதப்படும்போது அச்சொற்களின் முன்னே மொழிமுதல் எழுத்துகள் சேர்ப்பது இலக்கணம் வழக்கம். பலநேரங்களில் முறையான ஏற்போ ஏரணமோ இன்றி தவிர்த்தும் எழுதப்படுகின்றன. கீழே சில எடுத்துக்காட்டுகள்:
ராகவன் - "இராகவனே தாலேலோ" - பெரியாழ்வார்.
ராமன் - "இராமன்" - கம்பன்
லட்சுமணன் - "இலக்குவன்" - கம்பன்
யேசு - இயேசு
ரோம் - உரோம்
பேஸ் (face) – "பேசு"
பிழையான பாவனை
கீழே உள்ளவை தமிழிலக்கணப்படி பிழையானவை. ஊடகங்களும் சிலரும் இப்படி எழுதுவதை இங்கே காட்டப்பட்டுள்ளன.