மோகன் சரண் மாச்சி
மோகன் சரண் மாச்சி (Mohan Charan Majhi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1972 ஆம் ஆண்டு சனவரி மாதம் 6 ஆம் தேதியன்று கியோஞ்சர் மாவட்டத்தில் குணராம் மாச்சிக்கு மகனாக இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக கியோஞ்சார் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக கியோஞ்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4] 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதியில் மோகன் சரண் மாச்சி போட்டியிட்டார். இந்த தேர்தலில், இவர் மொத்தம் 47,283 வாக்குகள் பெற்றும் தோற்கடிக்கப்பட்டார் ஒடிசா முதலமைச்சராகமோகன் சரண் மாச்சி 2024-இல் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கேந்துசார் மாவட்டத்தில் உள்ள கியோஞ்சர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் 11 சூன் 2024 அன்று, ஒடிசாவின் அடுத்த முதலமைச்சராக அவர் அறிவிக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia