மோகன் நாயக்கு
மோகன் நாயக்கு (Mohan Nayak) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அக்லிட்சா நாயக்கு மற்றும் சந்திரமா நாயக்கு தம்பதியருக்கு மகனாக 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா சட்டப் பேரவையில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மக்களவையில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்காம்பூர் இடைத்தேர்தல், 1967, 1971 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பெர்காம்பூர், துரா மற்றும் கோபால்பூர் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து முறையே 1, 4, 5 மற்றும் 6 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கஞ்சம் மற்றும் பஞ்ச்நகர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 2ஆவது மற்றும் 3ஆவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோகன் நாயக்கு ஒடிசா அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாக பணியாற்றினார்.[1][2][3] 1940 மற்றும் 1941 ஆம் ஆண்டுகளில் சத்தியாக்கிரகத்திற்காகவும், மீண்டும் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் மோகன் நாயக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.[1] மோகன் நாயக்கு 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று தனது 62 ஆவது வயதில் இறந்தார் மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia