மோதியுர் ரஹ்மான் நிஸாமி
மோதியுர் ரஹ்மான் நிஸாமி (Motiur Rahman Nizami, வங்காள மொழி: মতিউর রহমান নিজামী), (மார்ச் 31, 1943) வங்காளதேசத்தைச் சார்ந்தவர். வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் (அமீர்) ஆவார். வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி வங்காளதேசத்தின் மிகப் பெரிய இஸ்லாமியக் கட்சி ஆகும். இக்கட்சியின் மீதான போர்க்குற்றங்கள் காரணமாக 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் நாள் வங்காளதேச உச்ச நீதிமன்றம் இக்கட்சியை தடை செய்தது. இது செயல்படுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் அரசியல் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை என்றும் தீர்ப்பளித்தது.[1][2][3][4] மோதியுர் ரஹ்மான் நிஸாமி வங்காளதேச பிரிவினைப் போரின் போது அல்-பாதர் (Al-Badr) ஆயுதக் குழுவின் தலைவராக இருந்தார்.[5] அரசியல் செயல்பாடுகள்
குற்றச்செயல்கள்இவர் மீது வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை எதிர்த்தது, பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது,[8] சிறுபான்மை இந்துகள் மீது தாக்குதல் நடத்தியது, இந்துப் பெண்களை கற்பழித்து, இந்துகளை இஸ்லாமியர்களாக மதம் மாற வற்புறுத்தியது ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டன.[9][10][11][12] மேலும் இந்தியாவின் அசாம் மாநிலத் தீவிரவாதக் குழுக்களுக்காக ஆயுதங்கள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.[13] இவ்வழகில் இவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.[14] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia