ம. மு. சுப்பிரமணியம்
மயில்வாகனம் முதலியார் சுப்பிரமணியம் (Mylvaganam Mudaliyar Subramaniam, (1870 – 1945) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்புசுப்பிரமணியம் ஏறத்தாழ 1870 அளவில் பிறந்தார்.[1] இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் சம்பத்தீவு என்ற இடத்தில் தென்னந்தோட்டங்களுக்கு உரிமையாளராகவிருந்த மயில்வாகனம் முதலியாருக்குப் பிறந்தார்.[1] சுப்பிரமணியத்திற்கு மூன்று மகன்கள்: அழகராஜா, தர்மராஜா, மாணிக்கராஜா ஆகியோர் ஆவர்.[1] பணிசுப்பிரமணியம் அரச வழக்கறிஞராகப் பணியாற்றியவர். திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபையில் உறுப்பினராக இருந்தவர்.[1] 1924 இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தெரிவானார்.[1][2][3] 1931 இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்புத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[1][4] 1931 சூலையில் புதிய அரசாங்க சபை கூடிய போது இவர் குழுக்களுக்கான துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 1936 அரசாங்க சபைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு ஈ. ஆர். தம்பிமுத்துவிடம் 7,429 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[6] சுப்பிரமணியம் 1945 இல் காலமானார்.[1] இவரது மகன் எஸ். எம். மாணிக்கராசா திருகோணமலைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia