இ. இரா. தம்பிமுத்து
இம்மானுவேல் இராசநாயகம் தம்பிமுத்து (Emmanuel Rasanayagam Tambimuttu, பிறப்பு: ~1890) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்புதம்பிமுத்து 1890களில் பிறந்தவர்.[1] இவரது முன்னோர்கள் வட மாகாணம் நல்லூரைச் சேர்ந்தவர்கள். பின்னர் மட்டக்களப்பில் குடியேறினார்.[1] பணிதம்பிமுத்து ஒரு வழக்கறிஞர் ஆவார்.[1] இவர் 1921 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தொகுதியில் போட்டியின்றி இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.[1][2] 1924 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் போட்ட்டியிட்டு சட்டவாகக்ப் பேரவைக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.[1][2][3][4] 1931 அரசாங்க சபைத் தேர்தலைப் புறக்கணிக்க யாழ்ப்பாணம் இளைஞர் பேரவை கேட்டுக் கொண்டதற்கிணங்க தம்பிமுத்து இத்தேர்தலில் போட்டியிடவில்லை.[5] 1936 அரசாங்க சபைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[1][6] இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, 1943 சூன் மாதத்தில் இவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் தனது பதவியைத் துறக்க மறுத்ததால், அரசாங்க சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[6] தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia