ம. லெ. தங்கப்பாம. லெ. தங்கப்பா (8 மார்ச்சு, 1934 - 31 மே, 2018) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவர். இவர் ஒரு பன்மொழி அறிஞர்; இவர் கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு போன்றவற்றை எழுதும் பன்முக ஆற்றல் கொண்டவர். இவர் இரு முறை சாகித்திய அகதமி விருதைப் பெற்றுள்ளார்.[1] இவர் படைப்புகளில் தமிழ் நலத்துக்கு உழைத்தல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வு நலம் பற்றிய விழிப்புணர்வைப் பெருக்குதல், மாந்தரிடையே நல்லுறவு பேணுதல் போன்ற சிந்தனைகள் மிகுந்து இருக்கும். வாழ்க்கைக் குறிப்பும. லெ. தங்கப்பா மார்ச்சு 8, 1934இல் திருநெல்வேலி மாவட்டம், குறும்பலாப்பேரியில் புலவர் ஆ. மதனபாண்டியன், ம. இரத்தினமணி இணையருக்குப் பிறந்தார். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில், தாகூர், பாரதிதாசனின் படைப்புகளால் இவர் மிகவும் கவரப்பட்டார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, புதுவையிலேயே குடியேறி, அங்கு பல்வேறு கல்லூரிகளில் 25 ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[2] 2018 மே 31 அன்று உடல்நலக்குறைவால் தன் 84ஆம் வயதில் புதுச்சேரியில் காலமானார். அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டது.[3] படைப்புகள்பாடல்கள்
குழந்தைப் பாடல்கள்
கட்டுரை நூல்கள்
தமிழாக்கம்
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia