யமுனா (நடிகை)
யமுனா (Yamuna) மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ்ப் படங்களிலும் தெலுங்கு படங்களில் முதன்மையாகத் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார்.[3] மாமகரு, மௌன போராட்டம், எற்ற மந்தாரம் போன்ற படங்களில் நடித்த இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையமுனா கருநாடகாவின் பெங்களூரில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிரேமாவாகப் பிறந்தார். இவர்களது பூர்வீகம் ஆந்திராவின் சித்தூர் ஆகும். ஆனால் இவரது குடும்பம் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தது. இயக்குநர் பாலச்சந்தரின் திரைப்பட அறிமுகத்திற்குப் பிறகுத் தனது பெயரை யமுனா என மாற்றிக்கொண்டார்.[1] திரைத்துறையில்யமுனா சிவ ராஜ்குமாருடன் இணைந்து கன்னடத் திரைப்படமான மொடடா மரேயல்லி (1989) மூலம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவர் 50க்கும் மேற்பட்ட கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[4] இவர் 1989-இல் விருது பெற்ற தெலுங்குத் திரைப்படமான மௌன போராட்டம்[5][6][7] மூலம் புகழ் பெற்றார். இத்திரைப்படம் சபீதா பதேயின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இது மிகப்பெரிய ஊடக வரவேற்பினைப் பெற்றது. ஒரு அரசாங்க அதிகாரியால் காட்டிக் கொடுக்கப்பட்ட துர்காவாக யமுனா நடித்தார். மேலும் தனது முறையற்ற குழந்தைக்குச் சரியான அடையாளத்தை வழங்கத் திருமண அங்கீகாரம் கோரி தனது திருமண உரிமைகளுக்காக இத்திரைப்படத்தில் போராடும் தாயாக நடித்திருந்தார்.[8] பின்னர் யமுனா மற்றொரு வெற்றிகரமான திரைப்படமான மாமகருவில் வினோத் குமாருக்கு இணையாகச் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.[9] 1990ஆம் ஆண்டு வெளியான புட்டிண்டி பட்டுச் சேரா திரைப்படத்தில், மாமியார்களால் துன்புறுத்தப்படும் அதிர்ஷ்டமற்ற மருமகளாக இவர் நடித்தார். 1990ஆம் ஆண்டு <i id="mwOw">எர்ரமந்தாரம்</i> திரைப்படத்தில் முன்னணி நடிகையாகவும் நடித்தார்.[10] சிவராஜ்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோருடன் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.[11] திருமணத்திற்குப் பிறகு, இவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். சிறிது இடைவெளிக்குப் பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் ஈ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்வேஷிதா என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். திரைப்படவியல்தெலுங்கு
மலையாளம்
கன்னடம்
தமிழ்
தொலைக்காட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia