ராஜேஷ் நந்தினி சிங்
ராஜேஷ் நந்தினி சிங் ( Rajesh Nandini Singh ) (23 மார்ச் 1957 - 8 மே 2016) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். சத்தீசுகரின் ஜாஞ்சுகிர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள பிர்ரா கிராமத்தில் திவான் துர்கேஷ்வர் சிங், ராஜ்குமாரி பானு குமாரி தேவி ஆகியோரின் மூன்றாவது குழந்தையாக அம்பாகர் சௌகியின் அரச வீட்டில் பிறந்தார். 2009 தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினைந்தாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] முன்னதாக 1993-1998 காலகட்டத்தில் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அரசியல்வாதியான தல்பீர் சிங்கை மணந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார். இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். [3] இவரது மகள் ஹிமாத்ரி சிங் நவம்பர் 2016 இல் ஷாதோல் தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ராஜேஷ் நந்தினி சிங் மே 2016 இல் தனது 59 வது வயதில் மாரடைப்பால் இறந்தார். [4] சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia