ராஜ்குமார் சிங்
ராஜ்குமார் சிங் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1975 ஆம் ஆண்டு ஐ. ஏ. எஸ் ஆகவும், பின்னர் இந்திய உள்துறைச் செயலாளராகவும் இருந்தார்.[1][2]இவர் தற்போது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராக உள்ளார். இளமைக் காலம்இவர் 1952 ஆம் ஆண்டின் திசம்பர் இருபதாம் நாளில் பிறந்தார். இவர் பீகாரின் தலைநகரான பட்னாவைச் சொந்த ஊராகக் கொண்டவர். இவருக்கு சீலா சிங் என்னும் மனைவியும், சமீர் சிங் என்னும் மகனும், சுவேதா சிங் என்னும் மகளும் உள்ளனர். அரசியல் வாழ்க்கைஇவர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், ஆரா மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு முதல் மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை, மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பதவி வகித்து வருகிறார்.[3] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia