ராஜ்பிப்லா இராச்சியம்
![]() ![]() ![]() ![]() ![]() ![]() இராஜ்பிப்லா இராச்சியம் (Rajpipla State) 1947-இல் இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் நர்மதா மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகராக ராஜ்பிப்லா நகரம் விள்ங்கியது. 1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இராஜ்பிப்லா இராச்சியம் 3929 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 2,49,032 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. நல்ல நீர் வளமும், நில வளமும் கொண்ட இராஜ்பிப்லா இராச்சியத்தின் மேற்கில் நர்மதா ஆறு மற்றும் தெற்கில் சாத்பூரா மலைத்தொடரில் தப்தி ஆறுகள் பாய்கிறது. மேலும் இந்த இராச்சியத்தில் இரத்தினக் கல் சுரங்கங்கள் உள்ளது. குஜராத்தில் பரடோ இராச்சியத்திற்குப் பின் இந்த இராஜ்பிப்லா இராச்சியமே செல்வச் செழிப்பு கொண்டிருந்தது. வரலாறு1421-ஆம் ஆண்டில் இராஜ்பிப்லா இராச்சியத்தை நிறுவியவர் இராஜபுத்திர குலத்தின் கோகில் வம்சத்தவரான கோமல் சிங் ஆவார். பின் இந்த இராச்சியம் குஜராத் சுல்தானகம் மற்றும் முகலாயப் பேரரசின் கீழ் ஒரு சிற்றரசாக இருந்தது. அடுத்து மராத்தியப் பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்தது. 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற இராஜ்பிப்லா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் செயல்பட்டது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராஜ்பிப்லா இராச்சியம் 1948-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு முடிய சௌராஷ்டிர மாநிலத்துடன் இணக்கப்பட்டது. பின்னர் மொழிவார் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, இராஜ்பிப்லா இராச்சியம், 1956-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. ஆட்சியாளர்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
21°47′15″N 73°33′48″E / 21.78750°N 73.56333°E
|
Portal di Ensiklopedia Dunia