ராம் நாத் கோவிந்த்
இராம் நாத்து கோவிந்து (Ram Nath Kovind, ராம் நாத் கோவிந்த், பிறப்பு: 1 அக்டோபர் 1945)[2] இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவராவர்.[3][4] இவர் 2015 முதல் 2017 வரை பீகார் மாநிலத்தின் ஆளுனராக இருந்தார்.[5] மேலும் 2017 ஆம் ஆண்டு, பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார்.[6][7][8][9][10] பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார்.[11][12] 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் உத்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். பிறப்பும் கல்வியும்1 அக்டோபர் 1945 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் தீராப்பூர் பகுதியில் பிறந்தார். தந்தையார் மைகு லால் தாயார் கலாவதி. இவர் கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்றார். இவர் தில்லி நீதிமன்றத்தில் தொழில்முறை வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[13][14] தொழில் வாழ்க்கை1971 ஆம் ஆண்டு புதுதில்லி வழக்குரைஞர் கழகத்தில் தன்னை ஒரு வழக்கறிஞராக பதிந்தார். ஒரு வழக்கறிஞராக, சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர், பெண்கள், ஏழைகள் ஆகியோருக்கு புது தில்லியிலிருந்த இலவச சட்ட உதவி மன்றத்தின் மூலம் உதவி செய்தார். 1977 ஆம் ஆண்டிலிருந்து 1979 வரை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் பதில் சட்ட ஆலோசகராக கடமையாற்றியதுடன் 1977-78 காலப்பகுதியில் அப்போதைய பிரதம மந்திரி மொரார்ஜி தேசாயின் தனிப்பட்ட உதவியாளராகவும் பணி புரிந்தார். சுமார் 16 வருட காலம் புதுதில்லி உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.[15] [16] அரசியல்1998 முதல் 2000 ஆண்டு வரை பாரதீய ஜனதாக் கட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் பிரிவின் தலைவராக இருந்தார். மேலும் அகில இந்திய கோலி சமாஜின் (All-India Koli Samaj) தலைவராகவும் இருந்தார்.[17] கட்சியின் தேசிய ஊடகத் தொடர்பாளராகவும் பணியாற்றினார். பாஜக உறுப்பினர்1991 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினரானார். 1998 முதல் 2002 ஆம் ஆண்டு வரை பாஜக தலித் மோர்ச்சா தலைவராக செயல்பட்டார். கட்டம்பூர் மற்றும் போக்னிப்பூர் சட்டபேரவை தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி பெற்றார். மாநிலங்களவை1994 ஆம் ஆண்டில் உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி 12 ஆண்டுகள்வரை பணியாற்றினார். இந்த கால கட்டத்தில் பழங்குடியினர் நலன், சமூக நீதி போன்ற பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் இடம்பெற்றிருந்தார். மேலும் நாடாளுமன்ற அவைக்குழு தலைவராகவும் பணியாற்றினார். கல்வி நிலையங்களில் பதவி
குடியரசுத்தலைவர்பிரணாப்முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், 2017 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவால் அறிவிக்கப்பட்டு[19] 25 சூலை 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் பதினான்காவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இவருக்கு இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. எஸ். கேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia