ருத்திரநாத் கோயில்
ருத்திரநாத் கோயில் (Rudranath) (சமக்கிருதம்: रुद्रनाथ) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சிவாலிக் மலையில், கார்வால் கோட்டத்தில், சமோலி மற்றும் ருத்திரபிரயாக் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில், கல்பேஷ்வரர் கோயில் மற்றும் மத்தியமகேஷ்வர் கோயில் அருகே அமைந்த பஞ்ச கேதார தலங்களில் மூன்றாவதாகும். இக்கோயில் மூலவரை நீலகண்ட மகாதேவர் என்பர். ருத்திரநாத் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.[1] அமைவிடம்பஞ்ச கேதார தலங்களில் மூன்றாவதான ருத்திரநாத் கோயிலை அடைவது மிகவும் கடினமானதாகும்.[2] ரிஷிகேஷ் நகரத்திலிருந்து 241 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோபேஷ்வர் எனுமிடம் வரை பேரூந்தில் செல்ல வேண்டும். பின்னர் கோபேஷ்வரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாகர் எனும் கிராமத்திற்கு சிற்றுந்தில் சென்று, பின் கால்நடையாக 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ருத்திரநாத் கோயிலை அடையலாம். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia