ரோகிஞ்சா மக்கள்
ரோகிஞ்சா மக்கள் (Rohingya people, Ruáingga Bengali: রোহিঙ্গা ரோகிங்கா) என்பவர்கள் மியான்மரில் இராக்கைன் மாநிலத்தின் வடக்கே வசிக்கும் இந்தோ-ஆரிய இனக்குழுவாகும். இவர்கள் ரோகிஞ்சா மொழியைப் பேசுகின்றனர்.[12][13] ரோகிஞ்சா மக்கள் இராக்கைன் மாநிலத்தின் பூர்வகுடிகள் என ரோகிஞ்சா மக்களும், சில ஆய்வாளர்களும் கூறும் அதே வேளையில், இவர்கள் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் வங்காளத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் எனவும்,[14][15][16] அல்லது குறைந்தது 1948 பர்மிய விடுதலைக்குப் பின்னரும், 1971 வங்கதேச விடுதலைப் போரின் பின்னரும் குடியேறியவர்கள்[17][18] எனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோகிஞ்சா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மனித உரிமைக்காக அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை என்ற பெயரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.[19] [20] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia