லெசியா உக்ரைன்கா
லெசியா உக்ரைன்கா (உக்ரைனியன்: Леся Українка) உக்ரேனிய இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். இவரது கவிதைகள் மற்றும் நாடகங்களுக்கு மிகவும் பிரபலமானவை. இவர் ஓர் அரசியல் மற்றும் பெண்ணிய ஆர்வலராகவும் இருந்தார். இவர் தனது இலக்கிய புனைப்பெயரான ஒலேனா சில்கா என்ற பெயரில் நன்கு அறியப்பட்டவர். இவரது சிறந்த படைப்புகளில் விங்ஸ் ஆப் சாங்ஸ் (1893), தாட்ஸ் அண்ட் டிரீம்ஸ் (1902) போன்ற கவிதைகளின் தொகுப்புகள், என்சியன்ட் பாரி டேல் (1893), ஒன் வர்ட் (1903) போன்ற புராண தொகுப்புகள் மற்றும் பிரின்சஸ் (1913), கசாண்ட்ரா (1903-1907), கேடாகாம்ப்ஸில் (1905) மற்றும் பாரெஸ்ட் சாங் (1911) போன்ற காவியக் கவிதைகள் அடங்கும். வாழ்க்கை வரலாறு![]() லெசியா உக்ரைன்கா 1871 ஆம் ஆண்டில் உக்ரைனின் நோவோராட்-வோலின்ஸ்கி (இப்போது ஸ்வியாகல்) நகரில் பிறந்தார். இவர் உக்ரேனிய எழுத்தாளரும் வெளியீட்டாளருமான ஓல்கா டிராகோமனோவா-கோசாக்கின் இரண்டாவது குழந்தை ஆவார். லெசியா தனது இலக்கிய புனைப்பெயரான ஒலேனா சில்கா என்ற பெயரில் நன்கு அறியப்பட்டவர். லெசியாவின் தந்தை பெட்ரோ கோசாக் (கொசாக்கா குடும்பத்திலிருந்து), செர்னிகிவ் மாகாணத்தின் வடக்கத்திய பகுதியிலிருந்து வந்த சமரசவாதிகளின் சட்டமன்ற தலைவர் ஆவார். செர்னிகிவ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, கோசாக் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கணிதம் படித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தந்தை கீவ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று சட்டப் பட்டம் பெற்றார்.[1] 1868 ஆம் ஆண்டில் அவர் தனது நண்பர் மைக்கைலோ டிராகோமனோவின் சகோதரியான ஓல்கா டிராகோமனோவா என்பவரை மணந்தார். ஓல்கா நன்கு அறியப்பட்ட விஞ்ஞானி, வரலாற்றாசிரியர், தத்துவஞானி, நாட்டுப்புறவியலாளர் மற்றும் பொது நபராவார். லெசியாவின் தந்தை உக்ரேனிய கலாச்சாரத்தின் முன்னேற்றத்திற்கு மற்றும் உக்ரேனிய வெளியீட்டு முயற்சிகளுக்கு உதவினார். லெசியாவுக்கு மூன்று தங்கைகள் ஓல்கா, ஒக்சானா மற்றும் ஐசிடோரா, மற்றும் மைக்கோலா என்ற ஒரு இளைய சகோதரர் இருந்தனர். லெசியா தனது மாமா டிராகோமனோவ் மற்றும் அவரது ஆன்மீக வழிகாட்டியும் ஆசிரியருமான மைக்கைலோ ஒபாச்னி என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட அவரது சகோதரர் மைக்கைலோவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். லெசியா தனது தந்தையின் உடல் அம்சங்கள், கண்கள், உயரம் மற்றும் கட்டமைப்பைப் பெற்றிருந்தார். இவரது தந்தையைப் போலவே, இவர் மிகவும் கொள்கை ரீதியானவர் மற்றும் இவர்கள் இருவரும் தனிநபரின் கண்ணியத்தை உயர்ந்த மரியாதையுடன் கருதினர்.[2] இவருக்கு ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலியம், கிரேக்கம், லத்தீன், போலிஷ், உருசியம், பல்கேரியம் மற்றும் அவரது சொந்த உக்ரேனிய மொழி தெரியும். . லெசியாவின் தாயார், ஒரு கவிஞர், உக்ரேனிய மொழியில் குழந்தைகளுக்காக கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதினார்.[3] அவர் மேலும் பெண்கள் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தார். லெசியாவின் வளர்ப்பில் அவரது தாயார் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். உக்ரேனிய மொழி மட்டுமே வீட்டில் பயன்படுத்தப்படும் ஒரே மொழியாக இருந்தது, மேலும் இந்த நடைமுறையை அமல்படுத்த, உருசிய மொழியை முதன்மை மொழி கற்பிக்கும் பள்ளிகளைத் தவிர்ப்பதற்காக, குழந்தைகள் வீட்டில் உக்ரேனிய ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்பட்டனர்.[4] லெசியா நான்கு வயதில் படிக்கக் கற்றுக்கொண்டார், அவரும் அவரது சகோதரர் மைக்கைலோவும் இலக்கியத்தைப் படிக்கும் அளவுக்கு வெளிநாட்டு மொழிகளைப் படிக்க முடிந்தது. எட்டு வயதாக இருந்தபோது, லெசியா தனது முதல் கவிதையான ஹோப் என்ற கவிதையை எழுதினார். இது அரசிற்கு எதிரான அரசியல் இயக்கத்தில் பங்கேற்றதற்காக இவரது அத்தை ஒலேனா கோசாக் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டதற்கு எதிர்வினையாக இயற்றப்பட்டது. 1879 ஆம் ஆண்டில், இவரது முழு குடும்பமும் லுட்ஸ்கிற்கு குடிபெயர்ந்தது.[5] இவரது தந்தை அருகிலுள்ள கிராமமான கொலொடியாஸ்னேவில் குடும்பத்திற்கு வீடு கட்டத் தொடங்கினார். இந்த நேரத்தில், இவரது மாமா உக்ரேனிய நாட்டுப்புற பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் வரலாற்றைப் படிக்கவும், பைபிளை அதன் உத்வேகம் பெற்ற கவிதைகள் மற்றும் நித்திய கருப்பொருள்களுக்காகப் படிக்கவும் ஊக்குவித்தார்.[6] இசையமைப்பாளர் மைக்கோலா லைசென்கோ மற்றும் புகழ்பெற்ற உக்ரேனிய நாடக ஆசிரியரும் கவிஞருமான மைக்கைலோ ஸ்டாரிட்ஸ்கி ஆகியோரால் இவர் ஈர்க்கப்பட்டார். இவரது முதல் வெளியிடப்பட்ட கவிதை, "பள்ளத்தாக்கின் லில்லி", லிவிவில் உள்ள சோரியா இதழில் வெளிவந்தது. இங்குதான் இவர் தனது புனைப்பெயரை முதன்முதலில் பயன்படுத்தினார், இது அவரது தாயால் பரிந்துரைக்கப்பட்டது, ஏனெனில் உருசியப் பேரரசில், உக்ரேனிய மொழியில் வெளியீடுகள் தடை செய்யப்பட்டன.[7] இவரது முதல் கவிதைத் தொகுப்பு மேற்கு உக்ரைனில் ரகசியமாக வெளியிடப்பட்டது. இந்த நேரத்தில், லெசியா காசநோய் காரணமாக எந்த வெளிப்புற கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து படிக்கவில்லை. இந்த நேரத்தில் இவர் எழுதுவதில் முக்கிய கவனம் செலுத்தினார்.[6] 1890 களின் தொடக்கத்திலிருந்து, இவர் போல்டாவா பிராந்தியத்தில் வசித்து வந்தார். 1893 ஆம் ஆண்டின் கோடை காலம் முதல் 1906 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை, லெசியா கிட்டத்தட்ட ஒவ்வொரு கோடைகாலத்திலும் ஹடியாக் நகருக்கு அருகில் கிரீன் க்ரோவ் என்ற இடத்தில் வசித்து வந்தார். இவரது பல படைப்புகளில் இந்த இடம் குறிக்கப்படுகிறது, குறிப்பாக, ஸ்காட்லாந்தின் மன்னர் ராபர்ட் புரூஸ் என்ற புராணக்கதை இங்கு எழுதப்பட்டது. லெசியா ஆசிரியர் மகரோவாவுடன் நட்பு கொண்டார், பின்னர் அவருக்கு பல கடிதங்கள் எழுதினார். லெசியாவின் கவிதைகளும் நாடகங்களும் நாட்டின் சுதந்திரம் மற்றும் சுதந்திரம் மீதான நம்பிக்கையுடன் தொடர்புடையவை.[8] இவர் 1895 மற்றும் 1897 க்கு இடையில், கீவில் உள்ள இலக்கிய மற்றும் கலை சங்கத்தின் உறுப்பினராக ஆனார், இது புரட்சிகர ஆர்வலர்களுடனான அதன் உறவுகள் காரணமாக 1905 இல் தடை செய்யப்பட்டது. 1888 ஆம் ஆண்டில், லெசியாவுக்கு பதினேழு வயதாக இருந்தபோது, அவரும் அவரது சகோதரரும் உக்ரேனிய இலக்கியத்தின் வளர்ச்சியையும், வெளிநாட்டு நூல்களை உக்ரேனிய மொழியில் மொழிபெயர்க்கவும் ஊக்குவிக்க பிளேயாடா என்ற இலக்கிய வட்டத்தை உருவாக்கினர். இந்த அமைப்பு பிரெஞ்சு கவிதைப் பள்ளியான பிளேய்டேவை அடிப்படையாகக் கொண்டது. இந்த அமைப்பின் கூட்டங்கள் வெவ்வேறு வீடுகளில் நடைபெற்றன, மேலும் மைக்கோலா லைசென்கோ, பெட்ரோ கோசாச், கோஸ்டியன்டின் மைக்கால்சுக், மைக்கைலோ ஸ்டாரிட்ஸ்கி மற்றும் பலர் இதில் இணைந்தனர்.[9] இவர்கள் மொழிபெயர்த்த படைப்புகளில் ஒன்று நிகோலாய் கோகோலின் ஈவினிங்ஸ் ஆன் எ ஃபார்ம் நியர் டிகங்கா ஆகும். தாராஸ் ஷெவ்செங்கோ மற்றும் இவான் பிராங்கோ ஆகியோர் இவரது ஆரம்பகால கவிதைகளின் முக்கிய உத்வேகமாக இருந்தனர்.[10] இவரது கவிதைகள் பெரும்பாலும் தனிமை, சமூக தனிமைப்படுத்தல் மற்றும் உக்ரேனிய தேசத்தின் சுதந்திரத்தை போற்றுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இவரது முதல் கவிதைத் தொகுப்பான நா கிரிலக் பிஸென் (ஆன் தி விங்ஸ் ஆப் சாங்ஸ்) 1893 இல் வெளியிடப்பட்டது. கீவ் வெளியீடுகள் ரஷ்யப் பேரரசால் தடை செய்யப்பட்டதால், இந்த புத்தகம் அந்த நேரத்தில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் ஒரு பகுதியாக இருந்த மேற்கு உக்ரேனில் வெளியிடப்பட்டது. இவரது நோய் காரணமாக அவர் வறண்ட காலநிலை உள்ள இடங்களுக்குச் செல்வது அவசியமானது, இதன் விளைவாக, அவர் ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, பல்கேரியா, கிரிமியா, காகசஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் நீண்ட காலம் கழித்தார். இவர் மற்ற கலாச்சாரங்களை அனுபவிக்க விரும்பினார், இது அவரது இலக்கியப் படைப்புகளில் தெளிவாகத் பதிபலிக்கப்பட்டன. தி அன்சியன்ட் ஹிஸ்டரி ஆஃப் ஓரியண்டல் பீப்பிள்ஸ் இவரது இளைய உடன்பிறப்புகளுக்காக எழுதப்பட்டது. இந்த புத்தகம் லிவிவில் இவான் பிராங்கோவால் வெளியிடப்பட்டது. செவன் ஸ்ட்ரிங்ஸ், தி ஸ்டாரி ஸ்கை, டியர்ஸ்-பேர்ல்ஸ், த ஜர்னி டு தி சீ, கிரிமியன் மெமோரீஸ் மற்றும் இன் தி சில்ட்ரன்ஸ் சர்க்கிள் போன்ற இவரது ஆரம்பகால கவிதைகள் இதில் அடங்கும். இவர் பல காவியக் கவிதைகள், உரைநடை நாடகங்கள், உரைநடைகள், இலக்கிய விமர்சன கட்டுரைகள் மற்றும் சமூக-அரசியல் கட்டுரைகளையும் எழுதினார். 17 ஆம் நூற்றாண்டில் ஒரு உக்ரேனிய குடும்பத்தை மையமாகக் கொண்ட போயரின்யா (1914) மற்றும் உக்ரேனிய நாட்டுப்புறக் கதைகளில் இருந்து புராண கதாபாத்திரங்களை உள்ளடக்கிய லிசோவா பிஸ்னியா (1912) போன்றவை இதில் அடங்கும்.[11] 1897 ஆம் ஆண்டில், யால்டாவில்காசநோய்க்கான சிகிச்சை பெற்றபோது, லெசியா மின்ஸ்க்கை சேர்ந்த அதிகாரியான செர்கி மெர்சின்ஸ்கியை சந்தித்தார். இருவரும் காதலித்தனர், மேலும் மெர்சின்ஸ்கி மீதான இவரது உணர்வுகள் தான் தன்னைப் பற்றிய ஒரு வித்தியாசமான பக்கத்தைக் காட்டுவதற்கு காரணமாக இருந்தன. மெர்சின்ஸ்கி 3 மார்ச் 1901 அன்று அவரது படுக்கையில் இறந்தார். அவர் தனது மரண படுக்கையில் ஒரே இரவில் ஓடர்ஸிமா என்ற முழு வியத்தகு கவிதையையும் எழுதினார். லெசியா ரஷ்ய அரசாட்சியை தீவிரமாக எதிர்த்தார் மற்றும் உக்ரேனிய மார்க்சிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார்.[12] 1901 ஆண்டில், கீவ்விலிருந்து அவரது தோழர்கள் உருவாக்கிய பொதுவுடைமை அறிக்கையின் உக்ரேனிய மொழிபெயர்ப்பை வழங்கினார். 1907 ஆம் ஆண்டில் அரச காவல்துறையினரால் லெசியா கைது செய்யப்பட்டார், அதன் பின்னர் அரச கண்காணிப்பில் இருந்தார். 1907 ஆம் ஆண்டில், லெசியா ஒரு அரசவை அதிகாரியான கிளைமென்ட் கிவிட்காவை மணந்தார், அவர் ஒரு இனவியலாளராகவும் இசைக்கலைஞராகவும் இருந்தார். இவர்கள் முதலில் கிரிமியாவில் குடியேறினர், பின்னர் சியார்சியாவுக்கு குடிபெயர்ந்தனர். லெசியா 1913 ஆகத்து 1 அன்று சியார்சியாவின் சுராமியில் உள்ள ஒரு சுகாதார விடுதியில் இறந்தார். மரபுஉக்ரைன் மற்றும் பல முன்னாள் சோவியத் குடியரசுகளில் லெசியா உக்ரைன்காவுக்கு பல நினைவுச்சின்னங்கள் உள்ளன. கீவில் ஒரு முக்கிய நினைவுச்சின்னம் மற்றும் மரின்ஸ்கி பூங்காவில் ஒரு சிறிய நினைவுச்சின்னம் உள்ளன. அசர்பைஜானின் கராடக் ரையனிலும் ஒரு மார்பளவு சிலை உள்ளது. முக்கிய கீவ் திரையரங்குகளில் ஒன்றான லெசியா உக்ரைன்கா தேசிய கல்வி அரங்கம் பேச்சுவழக்கில் லெசியா உக்ரான்கா தியேட்டர் என்று குறிப்பிடப்படுகிறது. உக்ரேனிய புலம்பெயர்ந்தோரின் முயற்சிகளின் கீழ், கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் அவருக்கு பல நினைவு சங்கங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் உள்ளன, குறிப்பாக சஸ்காட்செவனின் சஸ்காட்சுவான் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.[13] நியூயார்க் மாநிலத்தில் உக்ரைன்காவின் மார்பளவு சிலையும் உள்ளது. ஒவ்வொரு கோடையிலும், டொராண்டோ உள்ள உக்ரேனியர்கள் ஹை பூங்காவில் உள்ள லெசியா உக்ரைன்கா நினைவுச்சின்னத்தில் அவரது வாழ்க்கையையும் பணிகளையும் கொண்டாடுகிறார்கள்.[14] இசையமைப்பாளர்கள் தமாரா மால்யுகோவா சிடோரென்கோ (1919-2005) மற்றும் யூடிஃப் கிரிகோரெவ்னா ரோழாவ்ஸ்காயா ஆகியோர் உக்ரைன்காவின் பல கவிதைகளை இசைக்கு அமைத்தனர்.[15][16] உக்ரைனின் தேசிய வங்கி லெசியா உக்ரைன்காவை சித்தரிக்கும் 200 ¥ பணத்தாளை வெளியிட்டது. ஆலோசகர் ஓலே போகல்சூக்கின் கூற்றுப்படி, உக்ரைன்காவின் சிகை அலங்காரம் யூலியா டிமோஷென்கோவின் தலைக்கு மேல் பின்னப்பட்ட சிகை அலங்காரத்தை ஊக்கப்படுத்தியது.[17] 2020 ஆம் ஆண்டில் உக்ரேனில் கூகிள் தேடலில் உக்ரேனிய பெண்கள் தேடல் வினவல்களின் தரவரிசையில் லெசியா உக்ரைன்கா மூன்றாவது இடத்தில் இருந்தார். நவம்பர் 2022 அன்று டினிப்ரோவின் புஷ்கின் அவென்யூ லெசியா உக்ரைங்கா அவென்யூ என்று மறுபெயரிடப்பட்டது.[18] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia