வந்தனா சீனிவாசன்
வந்தனா சீனிவாசன், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். தனித்தன்மை கொண்ட குரலமைப்பும், சுயாதீன பாடகியாகவும் இருக்கும் இவர், தென்னிந்திய திரைப்படத் துறையில் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். வாழ்க்கை வரலாறுவந்தனா, சிறுவயதிலிருந்து உயர்நிலைப் பள்ளியை முடிக்கும் வரை தனது குருவான திருமதி சீதா கிருஷ்ணனிடமிருந்து கர்நாடக பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றுள்ளார். கல்லுரிப்படிப்பிற்க்காக 2006 ஆம் ஆண்டில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் (மெட்ராஸ் பல்கலைக்கழகம்) உளவியல் பாடப்பிரிவில் சேர்ந்த அவர், இந்தியாவின் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளர். அங்கே, மற்றொரு குருவான, திருமதி தனுஸ்ரீ சாஹாவின் கீழ் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றுள்ளார். இலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்வி நிலையத்தில் நிறுவன மற்றும் சமூக உளவியலில் முதுகலைப் பட்டம் பெற 2009 ஆம் ஆண்டில் இலண்டனுக்குச் சென்று அங்கும் பல்வேறு இசை தாக்கங்களை வெளிப்படுத்தி குறிப்பாக பங்களாதேச இசையை ஆராய்ந்துள்ளார். 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னைக்குத் திரும்பியதை, அவர் ஒரு சுயாதீன இசைக்கலைஞராகவும் பின்னணிப் பாடகியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[1][2] 2017 ஆம் ஆண்டில் இசைக்கலைஞரின் வாழ்க்கைகளைப் பற்றிய உரையை டெட் கருத்தரங்குகளில் பகிர்ந்துள்ளார்.[3] மியூசிகலோரி தயாரிப்புகள் என்ற பெயரில் பிற இசைப்பாடகர்கள், பின்னணி பாடகர்கள், இசைவல்லுனர்களை இணைத்து ஆன்மாவை உருக்கும் மெல்லிசையை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் பட்டத்தில்[4] என்ற தொழிலதிபரை மணந்துள்ள வந்தனா, தனது கணவருடன் இணைந்து இன்ஸ்ட்டாகிராம்இணையதளத்தில், அனஸ்டோரிஸ்ஒன்லைன் என்ற பெயரில் பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் விற்பனையும் செய்து வருகிறார்.[5] இசைப்பட்டியல்பின்னணிப் பாடல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia