வன் தரையிறக்கம்![]() ஒரு விமானம் அல்லது விண்கலம் இயல்பான தரையிறக்கத்தை விட அதிக செங்குத்து வேகத்துடனும் விசையுடனும் தரையைத் தாக்கும்போது வன் தரையிறக்கம் (hard landing) ஏற்படுகிறது. தரையிறக்கம் என்பது விமானத்தின் இறுதி கட்டமாகும், இதில் விமானம் தரைக்குத் திரும்புகிறது. தரையிறங்கும்போது சராசரி செங்குத்து வேகம் நொடிக்கு 2 மீ ஆகும்; எந்தவித கூடுதலான செங்குத்து வேகமும் குழுவினரால் கடினமானதாக வகைப்படுத்தப்பட வேண்டும். வன் தரையிறக்கத்தை தீர்மானிக்க குழுவின் தீர்ப்பு மிகவும் நம்பகமானது, ஏனெனில் பதிவுசெய்யப்பட்ட முடுக்க மதிப்பின் அடிப்படையில் தீர்மானிப்பது அரிது என்பதால் அறிவுறுத்தப்படவில்லை, [1] ஏனெனில், உண்மையான செங்குத்து முடுக்கம் பதிவு ஆவதில்லை. கடினமான தரையிறக்கங்கள் வானிலை நிலைமைகள், இயந்திர சிக்கல்கள், அதிக எடை விமானம், வலவர் முடிவு மற்றும் / அல்லது வலவரின் பிழை காரணமாக ஏற்படலாம். வன் தரையிறக்கம் பொதுவாக நிலப்பரப்பில் கட்டுப்பாடற்ற இறங்குதலுக்கு(மொத்த்லுக்கு) மாறாக, விமந்த்தின் மீது விமானிக்கு இன்னும் உள்ள மொத்த அல்லது பகுதியளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. வன் தரையிறக்கங்கள், இலேசான பயணிகளின் ஏந்து குறைவு முதலவஊர்திச் சிதைவு, கட்டமைப்புச் செயலிழப்பு, காயங்கள் மற்றும்/அல்லது உயிர் இழப்பு வரை அவற்றின் விளைவுகளில் மாறுபடும். ஒரு விமானம் கடினமான தரையிறங்கும் போது, அதன் அடுத்த பறப்பதற்கு முன், அது சிதைவேதும் அடைந்துள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். [1] வன் தரையிறக்கங்கள் பாதுகாப்பாக அல்லது முறையாக மேற்கொள்ளப்படாவிட்டால், விமானங்களுக்கு விரிவான சிதைவை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, 20 ஜூன் 2012 அன்று, ஆல் நிப்பான் ஏர்வேஸின் போயிங் 767 விமானத்தின் புறணியில் ஒரு பெரிய மடிப்பு உருவாகும் அளவுக்கு விசையுடன் தரையிறங்கியது. [2] இறுதி அணுகுமுறை நிலைப்படுத்தப்படாதபோது, குழுவினர் கலத்தை நிறுத்திவிட்டுச் செய்துவிட்டுச் செல்ல வேண்டும் என; 2015,மார்ச் 14 அன்று கோலாலம்பூரில் இருந்து வந்த பிறகு, மெல்போர்ன் விமான நிலையத்தில் மலேசியன் வான்வழி வானுந்து A330 வன் தரையிறக்கத்தை ஆராய்ந்த பிறகு , ஆத்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் பரிந்துரைத்தது [3] அயர்லாந்தின் குறைந்த கட்டண விமான நிறுவனமான இரயனேர் கடினமான தரையிறக்கங்களுக்குப் பரவலானபெயரைப் பெற்றுள்ளது. [4] உலங்கூர்திகளைப் பொறுத்தவரை, எந்திர அல்லது பொறி சிதைவுற்ற அல்லது செயலிழந்த போது, சுழலகங்கள் சரியாக இருக்கும் போதும் கட்டற்று இயல்பாக சுழலும்போதும் வன் தரையிறக்கம் ஏற்படலாம். தன்னியக்கச் சுழற்சியின்போது, சுழலிகளின் மீது காற்றோட்டம் திருப்பப்படுவதோடு, ஓரளவு தூக்கலையும் வழங்குகிறது, இறங்கும் போது வரையறுக்கப்பட்ட வலவரின் கட்டுப்பாட்டை ஏற்கும். ஒரு திறனூட்டப்படாத இறங்கலாக, அதைப் பாதுகாப்பாக செயல்படுத்த கணிசமான வலவரின் திறமையும் பட்டறிவும் தேவைப்படும். ஏவூர்தி கட்டத்தில் விண்கலத்தின் வன் தரையிறக்கம் பொதுவாக அதன் அழிவுடன் முடிவடைகிறது அது வேண்டுமென்றேயோ அல்லது தற்செயலாகவோ நிடழலாம். சந்திரயான் -1 போன்ற திட்டமிட்ட உயர்விரைவுத் தாக்கம் மொத்தல் எனப்படுகிறது. மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia