வருவாய்த் துறை (தமிழ்நாடு)

வருவாய்த் துறை, தமிழ் நாடு
துறை மேலோட்டம்
அமைப்பு1811
ஆட்சி எல்லைதமிழ் நாடு
தலைமையகம்சென்னை
அமைச்சர்
அமைப்பு தலைமைகள்
  • குமார் ஜெயந்த் இ.ஆ.ப.,, அரசு கூடுதல் தலைமைச் செயலாளா்
  • T.செல்வராஜ், இணை செயலாளர்
மூல அமைப்புதமிழ் நாடு அரசு
வலைத்தளம்https://www.tn.gov.in/dept_profile.php?dep_id=MjY & https://www.cra.tn.gov.in/index.php

வருவாய்த் துறை, தமிழ்நாடு அரசின் தொன்மையான துறைகளில் ஒன்றாகும். இத்துறை முதலில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் கி.பி. 1786-இல் தொடங்கப்பட்டது.

வரலாறு

இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் 1781-இல் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது. முதல் வருவாய் வாரியம் 1786-இல் வங்காள மாகாணத்திலும் அதனைத்தொடர்ந்து சென்னை மாகாணத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழகத்தில் 1980-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வருவாய் வாரியம் ஒழிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை உருவாக்கப்பட்டது.

2004 சுனாமிக்குப் பின்னர் பேரிடர் மேலாண்மையை நிருவகிக்கவும், பேரிடரைத் தணிக்கவும் 2005-ஆம் ஆண்டு முதல் வருவாய்த் துறையானது வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1]

முக்கியப்பணிகள்

1. பல்வேறு அரசுத் திட்டங்களின் சேவைகளை தமிழக மக்களுக்கு திறம்பட வழங்குதல்.

2. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை செயல்படுத்துதல்.

3. அரசு நிலங்களின் பாதுகாவலராகச் செயல்படுதல் மற்றும் மாநிலத்திற்கான நிலப் பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பதை உறுதி செய்தல்.

4. நிலச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துதல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கும் தகுதியுள்ளவர்களுக்கும் நிலம் வழங்குதல்.

1. தமிழ்நாடு அரசின் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தி மக்களுக்கு சேவை செய்தல்

2. இயற்கை இடர்பாடுகளின் போது நிவாரணமும் அதன்படி மறுசீரமைப்பும் செய்தல்

3. அரசு நிலங்களைப் பாதுகாத்தல், அவை தொடர்பான ஆவணங்களை பராமரித்தல். நிலவகை மாற்றம், நில ஒப்படை, அரசு நில குத்தகை, நிலக்கொடை, ஆக்ரமணம், நில உரிமை மாற்றம், நில எடுப்பு, பட்டா வழங்கல், நில சீர்திருத்தம், நகர்புற நில வரி வசூலித்தல் போன்ற பணிகளையும் வருவாய்த்துறை செய்கிறது

மேற்கூறிய நோக்கங்களை நிறைவேற்ற, துறையின் கீழ் பின்வரும் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத்துறையின் நிர்வாகம்

வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத் துறையானது ஐந்து இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தலைமையிலான ஆணையாளர்கள் ஐந்து துறைகளை நிர்வகிக்கின்றனர். அவைகள் பின்வருமாறு:

  • வருவாய் நிருவாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிப்புத்துறை ஆணையரகம். [2]
  • நில நிருவாக ஆணையரகம் [3]
  • நிலச்சீர்த்திருத்த ஆணையரகம். [4]
  • நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையரகம். [5]
  • நகர்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநரகம். [6]

துறையின் மாவட்ட அளவிலான முக்கிய அலுவலர்கள்

தமிழக பேரிடர் மேலாண்மை

2004 சுனாமிக்குப் பின்னர்த் தமிழ்நாடு அரசு 2005-இல் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமை மூலம் கொள்கைகள் வகுத்துள்ளது. அரசு ஆணை எண் 143 வருவாய் என்சி 1(2), நாள்: 27.05.2013-இன்படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. [7] பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 14(2)-இன்படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழுவின் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினர்களாக அதிகபட்சம் 9 நபர்கள் இருப்பர்.[8]

மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு:

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 25(2)-இன்படி அதிகபட்சம் 7 உறுப்பினர்கள்

  • தலைவர் --- மாவட்ட ஆட்சியர்
  • உறுப்பினர்கள் --மாவட்ட வருவாய் அலுவலர், காவல் துறை கண்காணிப்பாளர், தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் மாவட்ட அளவிலான இரு அதிகாரிகள்

மாநில பேரிடர் மீட்பு நிதி (01.04.2010)

இந்திய அரசின் பங்கு - 75% மாநில அரசின் பங்கு - 25%

சிறப்பு இனங்களில்:

இந்திய அரசின் பங்கு - 90% மாநில அரசின் பங்கு - 10%

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Commissionerate of Revenue Administration, Disaster Management and Mitigation
  2. Revenue and Disaster Management Department
  3. Commissionerate of Land Administration
  4. Commissionerate of Land Reforms
  5. Commissionerate of Survey and Settlement
  6. Urban Land Ceiling and Urban Land Tax
  7. Tamilnadu State Disaster Management - TNSDMA
  8. Disaster Management and Mitigations
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya