வலைவாசல்:கருநாடக இசை


தொகு  

கருநாடக இசை வலைவாசல்


வீணை வரைபடம்
வீணை வரைபடம்

கருநாடக இசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.

கருநாடக இசை பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


கருநாடக இசை வல்லுநர் ஒருவரை, ஆண்டுதோறும் தெரிவுசெய்து அவருக்கு சங்கீத கலாநிதி எனும் விருதினை சென்னை மியூசிக் அகாதெமி வழங்கிச் சிறப்பிக்கிறது. சங்கீத என்பதற்கு இசை எனவும், கலாநிதி என்பதற்கு கலையின் பெருஞ்செல்வம் (புதையல்) எனவும் பொருள். ஆக, சங்கீத கலாநிதி என்பதற்கு 'கருநாடக இசைக் கலையின் பெருஞ்செல்வம்' என்பது பொருள். கருநாடக இசையுலகில் மிக உயர்ந்த விருதாக இவ்விருது அனைவராலும் கருதப்படுகிறது.

தொகு  

பகுப்புகள்


கருநாடக இசை பகுப்புகள்


தொகு  

கலைஞர்கள்


பெ. தூரன் என்கிற ம. ப. பெரியசாமித்தூரன் (செப்டம்பர் 26, 1908 - சனவரி 20, 1987) ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ் புலவராகவும் கருநாடக இசை வல்லுனராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


  • கருநாடக இசை தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கருநாடக இசை தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • கருநாடக இசை தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கருநாடக இசை தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கருநாடக இசை தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?


  • மனோதர்மம் எனும் சொல், கருநாடக இசைத் துறையில் வழங்கப்பெறுவதாகும். ஒரு இசைக் கலைஞர், கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போது தனது படைப்புத்திறனை முன்னேற்பாடின்றி வெளிப்படுமாறு செய்தல் (improvisation) மனோதர்மம் என்றழைக்கப்படுகிறது.
  • சிறீரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
  • ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார்.
தொகு  

சிறப்புப் படம்


{{{texttitle}}}

தண்ணுமை (மிருதங்கம்) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

படம்: User:Ranveig
தொகுப்பு


தொகு  

திரைப்படப் பாடல்களில் இராகங்களின் பயன்பாடு


பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
மறைந்திருந்து பார்க்கும்… சண்முகப்பிரியா கே. வி. மகாதேவன் பி. சுசீலா தில்லானா மோகனாம்பாள்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்… சாருகேசி இளையராஜா பி. ஜெயச்சந்திரன் நானே ராஜா நானே மந்திரி
திருப்பாற் கடலில் பள்ளி… பைரவி கே. ஜே. யேசுதாஸ் சுவாமி ஐய்யப்பன்
தொகு  

செய்திகளில் கருநாடக இசை


விக்கிசெய்திகளில் கருநாடக இசை வலைவாசல்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


தமிழ்தமிழ்
தமிழ்
தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழ் தமிழர் தமிழ்நாடு இந்தியா இலங்கை
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya