வழக்கு (இலக்கணம்)
தமிழ் இலக்கணத்தில் வழக்கு என்பது மக்களின் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறை ஆகும். நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ நாமும் அவ்வாறே வழங்கி வருவதைக் குறிக்கும். வழக்கு என்பது மரபு அல்லது பழக்கம் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது. ஒரு சில காலத்தில் இலக்கண விதிகளுக்கு மாற்றாகச் சொற்கள் பயின்றுவரின் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே வழக்காகும். வழக்கின் வகைகள்தமிழ் இலக்கணத்தில் வழக்கு இருவகைப்படும்.
இயல்பு வழக்குஒரு பொருளுக்கு அமைந்துள்ள இயல்பான சொல்லால் அப்பொருளை வழங்குவது இயல்பு வழக்கு எனப்படும். இது
என மூவகைப்படும். 1. இலக்கணம் உடையதுஇலக்கண நெறிப்படி முறையாக வரும் வழக்கு இலக்கணம் உடையது எனப்படும். சான்று:
2. இலக்கணப்போலிஇலக்கணம் இல்லாததாயினும் இலக்கணம் உடையதைப் போல சான்றோர்களால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப் போலி எனப்படும். சான்று:
தடித்த எழுத்தில் உள்ளவை சரியான சொற்களின் இலக்கணப்போலிகள் ஆகும். நிலைமொழிகள் முன் பின்னாக மாறிவருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழையல்ல என்று கருதப்படுகிறது. இலக்கணப் போலி 1. முதற்போலி 2. இடைப் போலி 3. கடைப்போலி என மூவகைப்படும் சான்று 1. முதற்போலி - மஞ்சு -மைஞ்சு 2. இடைப் போலி - அரசன் - அரைசன் 3. கடைப்போலி - அறம் -அறன் 3. மரூஉதொன்று தொட்டு வழங்கி வருதல் மட்டுமின்றி, இடையில் சில எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து, தானே மருவி (மாறி) வழங்குவது மரூஉ என வழங்கப்படும். சான்று:
இவ்வாறுசிதைந்து வருவது மரூஉ எனப்படும். 2. தகுதி வழக்குபொருள்களுக்கு அல்லது செயல்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை வழங்குவது தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை அல்லது செயல்களை வழங்குதல் தகுதி வழக்கு எனப்படும். அனைவரின் முன்னும் பேசத்தாகாத சொற்களுக்குப் பதிலியாக தகுதியான சொற்களைப் பேசுதலாகும். தகுதிவழக்கின் வகைகள்தகுதி வழக்கு என மூன்று வகைப்படும். 1. இடக்கரடக்கல்நன்மக்களிடத்தில் அல்லது சான்றோர்கள் அவையில் கூறத்தகாத சொற்களை மறைத்துப் பிற சொற்களால் கூறுவது 'இடக்கரடக்கல்' எனப்படும். சான்று:
2. மங்கலம்மங்கலமல்லாத சொற்களைக் கூறாமல் ஒழித்து, மங்கலமான சொற்களைக் கூறுதல் 'மங்கலம்' எனப்படும். சான்று:
(தடித்த எழுத்தில் உள்ளவை மங்கலமான சொற்களாகும்.) 3. குழூஉக்குறிஒரு குறிப்பிட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒரு பொருளை அல்லது செயலைக் குறிக்கும் சொல்லை ஒழித்து, வேறொரு சொல்லால் அப்பொருளை அல்லது அச்செயலைக் குறிப்பிடுவது 'குழூஉக்குறி' எனப்படும். சான்று:
நூற்பா
மேற்கோள்
இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia