வி. எஸ். சந்திரலேகா
வி. எஸ். சந்திரலேகா (பிறப்பு 25 ஜூலை 1947), இந்திய ஆட்சிப் பணியாளரும் அரசியல்வாதியும் ஆவார். அவர் ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பிரிவின் தலைவராக இருந்தார். இது 11 ஆகஸ்ட் 2013 அன்று பாரதிய ஜனதா கட்சியோடு இணைக்கப்பட்டது. இவரை எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் மாநில முதலாவது பெண் கலெக்டராக நியமித்தார்.[1] ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்சந்திரலேகா 25 ஜூலை 1947ல் அப்போதைய மதராஸ் மாகாணத்தில் திண்டுக்கல்லில் பிறந்தவர். இந்திய நிர்வாக சேவை சேர்வதற்கு (ஐ.ஏ.எஸ்) முன், கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருந்தார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அரசு ஊழியர்
அவர் 1992ல் இந்திய நிர்வாக சேவையிலிருந்து ராஜினாமா செய்தார். அரசியல்வாதிசந்திரலேகா 1992 இல் ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் 1992 முதல் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக பதவி வகித்தார். 1996 இல் இவர் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மு. க. ஸ்டாலின் (திராவிட முன்னேற்றக் கழகம்) அவர்களுக்கு எதிராக நின்று தோல்வியுற்றார். இவர் மயிலாப்பூர் தொகுதியில் 2006 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கலந்து கொண்டு 2,897 வாக்குகள் மட்டுமே பெற்றார்.[2] இவர் தான் ஜெயலலிதாவிற்க்கு சசிகலாவை அறிமுகப்படுத்தினார். [3] குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia