வி. ராமசுப்பிரமணியன்
வி. ராமசுப்பிரமணியன் (V. Ramasubramanian)(பிறப்பு 30 ஜூன் 1958) என்பவர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார். தமிழ்நாட்டினைச் சார்ந்த இவர், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். முன்னதாக ராமசுப்பிரமணியன் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[1] இளம் வயது மற்றும் கல்விஇராமசுப்ரமணியன், ஜூன் 30, 1958-ல் தமிழ்நாட்டில் மன்னார்குடியில் பிறந்தார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் இளம் அறிவியல் பயின்றார். இதன் பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பாடம் பயின்று பிப்ரவரி 16, 1983 அன்று சட்டப் பட்டம் பெற்றார். வழக்கறிஞராகபிறகு, மெட்ராஸ் உயர் நீதிமன்றம், நகரம் மற்றும் சிறிய வழக்குகள் நீதிமன்றம், மாநில நுகர்வோர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் மன்றம், மத்திய மற்றும் மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள், சென்னை, குடிமை மற்றும் அரசியலமைப்பு விடயங்களில் மற்றும் சேவை விடயங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகஇராமசுப்ரமணியன், ஜூலை 31, 2006 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டர்.[2] பின்னர் நவம்பர் 9, 2009 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். முக்கியத் தீர்ப்புகள்இராமசுப்பிரமணியன் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கினார்.
தெலங்காணா உயர் நீதிமன்ற நீதிபதியாகஇராமசுப்ரமணியன், தனது சொந்த வேண்டுகோளின் பேரில் ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்காகன உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஏப்ரல் 27, 2016 முதல் இவரது பணிமாறுதல் அமல்படுத்தப்பட்டது. இந்த உயர் நீதிமன்றம், ஆந்திர மாநிலத்திற்கு எனப் பிரிக்கப்பட்டு தனி உயர்நீதிமன்றமாக உருவாக்கப்பட்ட பின்னர், ஐதராபாத்தில் உள்ள தெலுங்காணா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றினார்.[3] இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாகநீதியரசர் வி. ராமசுப்ரமணியன், கடந்த ஜனவரி 1, 2019. இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2019 ஜூன் 22 அன்று பதவியேற்றார். இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகநீதியரசர் வி. ராமசுப்ரமணியன், இந்திய மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட பின்னர், கடந்த 23.09.2019 நியமிக்கப்பட்டர்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia