வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோயில்

அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°23′48.1″N 78°46′47.5″E / 11.396694°N 78.779861°E / 11.396694; 78.779861
பெயர்
புராண பெயர்(கள்):வெங்கனூர்
பெயர்:அருள்மிகு விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:வெங்கனூர்
மாவட்டம்:பெரம்பலூர் மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:விருத்தாச்சலேஸ்வரர்/விருத்தகிரீஸ்வரர்
உற்சவர்:பழமலை நாதர்
தாயார்:பாலாம்பிகை / பெரியநாயகி

விருத்தாச்சலேஸ்வரர் திருக்கோயில் என்பது தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தில் அமைந்த சிவன் கோயில் ஆகும். விருத்தாச்சலேஸ்வரர் கோயிலின் மூலவர் பெயர் விருத்தாச்சலேஸ்வரர், அம்பாள் பெயர் பெரியநாயகி ஆகும்.[1]சுவேதா ஆற்றின் கரையில் இக்கோயில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. .இக்கோயிலின் தூண்கள் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.

அமைவிடம்

இக்கோயில் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2][3][4]

சிறப்பு

17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவப்பிரகாச சுவாமிகள் இக்கோயிலின் சிவனைப் போற்றும் வகையில் திருவேங்கைக் கலம்பகம், திருவேங்கைக் கோவை, திருவேங்கை உலா, திருவேங்கை அலங்காரம் பாடியுள்ளார். இத்தலத்தை திருவேங்கை / வேங்கைமாநகர் என்றும் சிவனை பழமலை நாதர் என்றும் பதிவு செய்துள்ளார்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் தூண்களை தட்டினால் வெண்கலத்தை தட்டுவது போல ஒலி வரும்.

கட்டிடக் கலை

இக்கோயில் கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விமானம் அல்லது கருவறை வட்ட வடிவில் உள்ளது. .மண்டபத் தூண்களில் விலங்குகள், போர் வீரர்கள், யானைகள், புலியைக் கொல்லும் வீரர்கள் போன்ற சிற்பங்கள் உள்ளது. வசந்த மண்டபத்தின் மேற்கூரையில் நவகிரகங்கள், கிருஷ்ண லீலா, நடனமாடும் பெண்கள், 12 ராசிகள் போன்ற ஓவியங்கள் உள்ளது.

வரலாறு மற்றும் கல்வெட்டுகள்

இக்கோயில் விஜயநகர மன்னர் வெங்கடபதி தேவமகராயர் காலத்தில் கட்டப்பட்டது. இவ்விடத்தை விஜயநகரப் பேரரசு காலத்தில் கன்னி வளநாட்டு வண்ணாடு அல்லது வெங்கனூர் என்று அழைக்கப்பட்டது. இக்கோயில் கல்வெட்டுகளின்படி, பழமலைநாதர் மற்றும் பெரியம்மை நாச்சியாருக்கு சன்னதியுடன் கூடியது. இக்கோயிலின் அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், உள் பிரகாரம், 2வது பிரகாரம், கோபுரம் ஆகியவை துறையூர் பாளையக்காரர் எராம ரெட்டியார் மகன் லிங்க ரெட்டியார் என்பவரால் கட்டப்பட்டது.

சிறப்பு நாட்கள்

இங்கு தமிழ்ப் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தரிசன நேரம்

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

மேற்கோள்கள்

  1. கோயில் அமைவிடம்
  2. கோயில் தகவல்கள்
  1. வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில்
  2. "Viruthajaleswarar Venganur".
  3. "Viruthachaleswarar Temple : Viruthachaleswarar Temple Details | Viruthachaleswarar- Venganoor | Tamilnadu Temple | விருத்தாச்சலேஸ்வரர்".
  4. "Viruthajaleswarar Venganur".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya