வேதப் பாரம்பரிய வலைவாசல்
வேதப் பாரம்பரிய வலைவாசல் (Vedic Heritage Portal) என்பது இந்தியக் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தினால் தொடங்கப்பட்ட ஓர் இந்திய அரசுத் திட்டமாகும்.. வேதங்களில் பொதிந்துள்ள செய்திகளைத் தொடர்புகொள்வதற்கும், வேதப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் இது ஒரு வலைவாசலை வழங்குகிறது.[1] இந்த வலைவாசலில் வேதங்கள், உபநிடதங்கள், வேதாங்கங்கள், உபவேதங்கள், வேதச் சடங்குகள் உள்ளிட்ட பண்டைய நூல்களின் படியெடுத்தல்கள் ஒலி-ஒளி வடிவத்தில் உள்ளன.[2] பின்னணிவேதப் பாரம்பரிய வலைவாசலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் சாவும் மத்தியக் கலாச்சார அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியும் மார்ச் 27, 2023 அன்று தொடங்கி வைத்தனர்.[3][4] இந்தியாவின் பண்டைய வேதங்கள், கையெழுத்துப் பிரதிகளில் உள்ள அறிவை எண்ணிம வடிவங்களில் பாதுகாக்க அரசாங்கம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், இதை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதாகவும் அமித் ஷா இத்தருணத்தில் கூறினார்.[5] 1987ஆம் ஆண்டு இந்த மையம் நிறுவப்பட்டதிலிருந்து இந்திரா காந்தி தேசியக் கலை மையம் இந்தத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களில் பணியாற்றி வருவதாகத் திட்ட இயக்குநர் சுதிர் லால் தெரிவித்தார். 2003ஆம் ஆண்டில், யுனெஸ்கோ வேதங்களை உச்சரிப்பதை 'மனிதக்குலத்தின் அருவமான கலாச்சாரப் பாரம்பரியம்' என்று அறிவித்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தின் கலைத் துறை இதைப் பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கியது.[6][7] வலைவாசல்இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தின்படி, இந்த வலைத்தளம் 18,000க்கும் மேற்பட்ட வேத மந்திரங்களைக் கொண்ட 550 மணி நேரத்திற்கும் மேலான ஒலி-ஒளித் தொகுப்புகளின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இது பல்வேறு வேத ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் வேதபதி குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. இவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து வேத அறிவில் நிபுணர்களாக உள்ளனர். இந்த வலைவாசல் ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளிலும் கிடைக்கிறது. சமசுகிருத உள்ளடக்கத்துடன். 'வேத அறிவு ' மற்றும் நவீன அறிவியலுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் அறிவியல் பாடங்கள் குறித்த விரிவுரைகளுடன் இணைந்து ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இந்த வலைத்தளம் ஆவணப்படுத்துகிறது.[3][8] குறிக்கோள்கள்இந்த வலைவாசலின் நோக்கம்:[1]
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia