பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம்
பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம் (Traditional Knowledge Digital Library) (டி.கே.டி.எல் ) என்பது பாரம்பரிய அறிவின் இந்திய எண்ணிம நூலகம் (அறிவு களஞ்சியம்) ஆகும். குறிப்பாக மருத்துவ தாவரங்கள் மற்றும் இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் சூத்திரங்கள் பற்றிய தகவல்களைக் கொண்டது. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (சி.எஸ்.ஐ.ஆர்) மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா) ஆகியவற்றிற்கிடையேயான ஒத்துழைப்பாக 2001இல் அமைக்கப்பட்டது. இந்நூலகத்தின் நோக்கம் நாட்டின் பண்டைய மற்றும் பாரம்பரிய அறிவை சுரண்டலிருந்து உயிரியல் மற்றும் நெறிமுறையற்ற காப்புரிமைகள் மூலம் ஆவணப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பதாகும். இது சர்வதேச காப்புரிமை வகைப்பாடு முறைகளின்படி மின்னணு மற்றும் வகைப்படுத்துகிறது. தவிர, காப்புரிமை அல்லாத தரவுத்தளம் பாரம்பரிய அறிவை அடிப்படையாகக் கொண்ட நவீன ஆராய்ச்சியை வளர்ப்பதற்கு உதவுகிறது. ஏனெனில் இது தீர்வுகள் அல்லது நடைமுறைகள் குறித்த இந்த பரந்த அறிவை அணுகுவதை எளிதாக்குகிறது.[1][2][3] 2010 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் யோகா குறித்த 148 புத்தகங்களை பொது உரிமைப் பரப்பில் படியெடுத்தது ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானின் ஆகிய ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 34 மில்லியன் பக்கத் தகவல்களாக உள்ளன. இவை 80,000 ஆயுர்வேத சூத்திரங்கள், 1,000,000 யுனானி மற்றும் 12,000 சித்தா தகவல்கள் நூலகத்தில் உள்ளன. முன்னணி சர்வதேச காப்புரிமை அலுவலகங்களான ஐரோப்பியக் காப்புரிமை அலுவலகம் ( ஈபிஓ), ஐக்கிய இராச்சிய வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமை அலுவலகம் (யுகேபிடிஓ) மற்றும் ஐக்கிய நாடுகள் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம் ஆகியவற்றுடன் பாரம்பரிய அறிவை உயிரியளவிலிருந்து பாதுகாக்க, சர்வதேச காப்புரிமை பரிசோதனையாளர்களுக்குத் தகவல்களை வழங்குவதற்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. காப்புரிமை தேடல் மற்றும் தேர்வுக்காக டி.கே.டி.எல் தரவுத்தளத்தில் காப்புரிமை வழங்குவதற்கு முன்னர் இவர்கள் பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம் அணுகல் மேற்கொள்வார்கள்.[1][4][5] வரலாறுஇந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கு, அய்க்கிய நாடுகள் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகம் (யுஎஸ்பிடிஓ) வழங்கிய மஞ்சள் மற்றும் பாஸ்மதி அரிசி காப்புரிமைகள் மற்றும் 1990களின் பிற்பகுதியில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் (ஈபிஓ) வழங்கிய வேம்பின் காப்புரிமையை இந்திய அரசு வெற்றிகரமாகப் போராடி ரத்து செய்தது. மட்டுப்படுத்திய பின்னர் உயிரியஅறிவுத்திருட்டு மற்றும் நெறிமுறையற்ற உயிரிபொருள் பயன்பாட்டு எதிர்பார்ப்பு பிரச்சினை தலைப்புச் செய்தியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து காப்புரிமை கோரிக்கைகள் வெளிவந்தன. இந்தியாவின் பரந்த பாரம்பரிய மருத்துவ அறிவு சமஸ்கிருதம், இந்தி, அரபு, பாரசீக, உருது, மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நிறைந்து இருந்தது. சர்வதேச காப்புரிமை அலுவலகங்களில் உரிமைகோரல்களைப் பாரம்பரிய அறிவுடன் சரிபார்க்க மூலங்கள் இல்லாததால் தேர்வாளர்களால் சரிபார்க்க இயலாமல் போனது. இதனால் ஏற்பட்ட அனுபவத்தின் மூலமும், இந்தியப் பாரம்பரிய பயன்பாட்டுப் பொருட்களுக்கான காப்புரியினை வெளிநாட்டினர் பெறுவதைத் தடுக்க, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறை நிபுணர்கள் (அதாவது ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் யோகா ), காப்புரிமை பரிசோதகர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் போன்ற துறைகளில் நிபுணர்களின் பணிக்குழுவை உருவாக்க இந்திய அரசின் ஆயுஷ் துறை தூண்டியது. இதன் தொடர்ச்சியாகப் பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகம் (டி.கே.டி.எல்) 2001இல் தொடங்கப்பட்டது. இதன் பணிகளாக, முன்னெடுப்பாக ஆயுர்வேத சூத்திரத்தை உரையில் விவரிக்கும் சமஸ்கிருத ஸ்லோகாக்களை படியெடுத்து, பாரம்பரிய அறிவு வள வகைப்பாட்டினைப் (டி.கே.ஆர்.சி) பயன்படுத்தி, உலகில் எந்த இடத்திலும் எந்தவொரு காப்புரிமை வழங்கும் பரிசோதனையாளருக்கு புரியும் வகையில் அமைத்தல். இதற்காக 34 மில்லியன் பக்கங்கள் ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் தரவேற்றப்பட்டுள்ளன.[4][6][7][8] 2006ஆம் ஆண்டு இத் தகவல் திட்டத் தொகுப்பு நிறைவு அடைந்தது. எனவே இந்திய அரசாங்கம் சர்வதேச நூலக அணுகலைக் காப்புரிமை அலுவலகங்களான ஐரோப்பியக் காப்புரிமை அலுவலகம் (EPO) ஜப்பான் மற்றும் பிரிட்டன் வெளிப்படுத்தல் உட்கூறு இல்லாத அடிப்படையில் வழங்கியது. இதன் மூலம் காப்புரிமை தேர்வாளர்கள் காப்புரிமை விண்ணப்பங்களை மதிப்பீடு செய்ய அனுமதித்ததால், பாரம்பரிய அறிவை "புதிய" கண்டுபிடிப்புகளாகக் காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகளை நிறுத்துகிறது.[1][5][6][9][10] பிப்ரவரி 2009இல் ஐரோப்பியக் காப்புரிமை அலுவலகத்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஜனவரி 2010இல் அய்க்கிய இராச்சிய வர்த்தக முத்திரை மற்றும் காப்புரிமை அலுவலகம் (UKPTO), மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இடையிலான உச்சி மாநாடு கூட்டத்திற்குப் பிறகு அமெரிக்கக் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்துடன் (USPTO) ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஜனவரி 2010இல். காப்புரிமை பரிசோதகர்கள் பாரம்பரிய அறிவு எண்ணிம நூலக தரவுத்தளத்தை அணுகுவதன் மூலம், நெறிமுறையற்ற காப்புரிமை உரிமைகோரல்கள் தொடர்பான சட்ட வழக்குகள், பல வருடங்கள் மற்றும் ஒவ்வொரு வழக்கிற்கும் பெரும் செலவினங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.[6][11][12] யோகக் கலையின் 1,500 தோரணைகள் தொடர்பான தரவுகளைச் சேர்க்கும் மற்றொரு திட்டம் 2008ஆம் ஆண்டில் தொடங்கியது. ஏராளமான தவறான குருக்கள் மற்றும் யோகா ஆசிரியர்கள் இந்த பண்டைய அறிவை தங்கள் நாடுகளில் காப்புரிமை பெற முயன்றனர், எனவே இதனைத் தடுத்துப் பாதுகாக்க இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 131 யோகா தொடர்பான காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டன. பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர், இந்திய அரசு யு.எஸ்.பி.டி.ஓவுடன் இந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டது.[13][14] இதன்பிறகு, ஒன்பது பள்ளிகளைச் சேர்ந்த யோகா குருக்கள் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற (சி.எஸ்.ஐ.ஆர்) விஞ்ஞானிகள் 200 பேர் இந்து காவியங்கள், மகாபாரதம் மற்றும் பகவத்கீதை, பதஞ்சலி யோகாசூத்திரங்கள் உள்ளிட்ட 35 பழங்கால நூல்களை வருடி எடுத்தனர். ஒவ்வொரு பூர்வீக காட்சியினையும் பதிவு செய்தனர். 2009ஆம் ஆண்டு இறுதியில், 1500 ஆசனங்கள் சேர்க்கப்பட்டன.[12][15] 2010ஆம் ஆண்டில், அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், எட்டு ஆண்டுகளில் 34 மில்லியன் பக்கங்கள் தகவல் ரூ .7 கோடி செலவில் சேகரிக்கப்பட்டதாகக் கூறினார். பாரம்பரிய அறிவு எண்ணிம நூலகத்தினைப் பயன்படுத்திக் குறைந்தது 36 வழக்குகள் ஈ.பி.ஓ மற்றும் 40 வழக்குகள் யுஎஸ்பிடிஓவால் அடையாளம் காணப்பட்டுள்ளன. வருங்கால திட்டமாக, இந்தியாவின் தேசிய பல்லுயிர் சட்டத்தின் கீழ், செவிவழி பரவிய பாரம்பரியத்தினை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், மக்களின் பல்லுயிர் பதிவேட்டினை அமைக்கவும் உள்ளது.[16][17] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia