ஸ்கோலியோசிஸ்
நெளிமுதுகு அல்லது கொடுமுதுகு எனப்படும் இப் பிறவிக்குறைபாடு மருத்துவத்துறையில் இசுக்கோலியோசிசு (scoliosis) என்றழைக்கப்படுகின்றது. இது கிரேக்கச்சொல் :σκολίωσις ( ச்7கோலிஓசி7ச்7 ) என்பதில் இருந்து உருவானது. கிரேக்க மொழியில் σκολί-ος ( ச்7கோலி-ஓச்7) என்றால் வளைந்த, நெளிந்த, கொடு (bent, crooked) என்றுபொருள்.[1][2]. அதாவது மாந்தனின் முதுகந்தண்டு ஏறத்தாழ இடவலமான திசையில் நெளிந்து வளைந்து இருப்பதாகும். சிக்கலான முப்பரிமாண (முத்திரட்சித்) தோற்றத்தைக் கொண்டதாக இருப்பினும், புதிர்க்கதிர்கள் (X-கதிர்கள்) படத்தைக் கொண்டு பார்க்கும்போது, நெளிமுதுகு அல்லது கொடுமுதுகு (இசுக்கோலியோசிசு) நோயின் வெளிப்பாடால், முதுகந்தண்டு நேராக இருப்பதைக் காட்டிலும் "S" அல்லது "C" வடிவத்தில் வளைந்து இருப்பதைக் காணலாம். இது பிறவியில் ஏற்படும் கோளாறு என்றும், (முதுகெலும்பு சிரையால் பிறக்கும்போது ஏற்படும் கோளாறு), நோய் முதல் அறியா (idiopathic, இடியோபேஆத்திக்) (குழந்தை, இளம் பருவம், அல்லது பெரியவர்களுக்கு ஏற்படக்கூடியது என துணை-வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடங்கும் வயதிற்கேற்ப அதன் பெயரும் வேறுபடும்) என்றும், காரணமாக வகைப்படுத்தப்படுகிறது அல்லது பிளந்திருக்கும் முதுகந்தண்டு, பெருமூளை வாதம், தண்டுவட தசை செயல் இழப்பு அல்லதுஉடல் காயம்) போன்றவற்றுடன் தொடர்புடைய நரம்புத் தசை கோளாறினால் இவ்வாறு ஏற்படலாம். (இதை, மற்றொரு நிலையின் இரண்டாம் நிலை அறிகுறியாகவும் கருதலாம்) இந்தக் குறைபாடானது, அமெரிக்காவில் மட்டும் 20 மில்லியன் மக்களிடம் காணப்படுகின்றது..[3] காரணம்நெளிமுதுகு (இசுக்கோலியோசிசு) நோயானது, பொதுவாக பெரியவர்களையே அதிக அளவில் பாதிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் முழுமையாக தெரியாத போதிலும், இதற்கு பல காரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.[4] பலவகையான சோதனைகளை அறிவியலாளர்கள் மேற்கொண்ட போதிலும், இதற்கான சரியான காரணத்தை இன்னும் யாராலும் கண்டறிய முடியவில்லை. ஆனால் இது ஒருவகையான மரபணுக் கோளாறு என்பதை மட்டும் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.[5] இந்த நோயானது, பெரும்பாலும் பெண்களைத் தாக்கக்கூடியது. முதுகெலும்பு சிரையால் ஏற்படும் பிறவிக் கோளாறுகாரணமாகவும், பிறவியிலேயே இந்நோய் மனிதர்களை தாக்குவதாக கூறப்படுகிறது. பொதுவாக, இந்நோயின் வளர்ச்சியானது பருவ வயதில் வரக் காரணம் இருப்பது சீரற்ற முறையில் வளைந்த நிலையில் இருக்கும் முதுகுதண்டு அமைப்பும் காரணம் ஆனால் பரவலாக இதன் மூலக் காரணம் என்னவென்று அறியப்படவில்லை. இதுவொரு நோய்முதல் அறியா நோய்களுள் ஒன்று.[6] இந்நோயானது தானாக ஏற்படவும் வாய்ப்புண்டு அல்லது, பருவ வயதில் திடீர் வளர்ச்சிக் காரணமாகவும் ஏற்பட வாய்ப்புண்டு. ஏப்ரல் 2007 ஆம் ஆண்டு, குழந்தைகளுக்கான டெக்ஃசாசு இசுகாட்டிசு ரைட் மருத்துவமனை (Texas Scottish Rite Hospital for Children) ஆய்வாளர்கள் [7] நெளிமுதுகு (இசுக்கோலியோசிசு) நோய்க்கான நோய் முதலறியா நிலைக்கு காரணமாக உள்ள முதல் மரபணுவைக் கண்டறிந்தனர், CHD7. மருத்துவத்தில் ஒரு வெளிப்பாடாக, பத்து ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மையை 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த மாந்த மரபணுவியலுக்கான அமெரிக்க ஆய்விதழ் (American Journal of Human Genetics) வெளியிட்டது.[5] நோய் இருப்புநெளிமுதுகு (ஸ்கோலியோசிஸ்) நோயால் தாக்கப்பட்ட மனித உடல், 10° அளவிற்கு வளைந்ததாக 1.5% -இலிருந்து 3% சதவீத மக்களை பாதிக்கக்கூடியதாக உள்ளது.[8] 20° க்கும் குறைவாக நோய் தாக்குதல் நிகழ்வது ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமாக உள்ளது. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தைக் கடந்த பெண் குழந்தைகளை இது பாதிக்கிறது.[9] நோய் அறிகுறிகள்எலும்புக்கூடு நன்கு வளர்ச்சியடைந்தவர்கள் இந்நோயால் அதிகம் பாதிப்படைவதில்லை. ஆனால் இந்த நோய் தீவரமாக தாக்கப்பட்டவர்கள், நுரையீரல் செயல்பாட்டில் தொய்வு, இதய அழுத்தம் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் போதல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்நோயின் அறிகுறியில் அடங்குபவை:
சம்பந்தப்பட்ட நிலைகள்ஸ்கோலியோசிஸ் நோயானது சிலவேளைகளில் பின்வரும் நிலைகளுடன் தொடர்புடையதாக இருக்கும் எலர்-டன்லஸ் சிண்ட்ரோம் (ஹைபர் பிளக்ஸிபிலிட்டி, 'ஃபிளாபி பேபி' சிண்ட்ரோம், மற்றும் நிலையின் பிற வேறுபாடுகள், கார்கட்-மரி-டூத், பிரேடர்-வில்-சிண்ட்ரோம், கைபோசிஸ், செரிபிரல் பால்ஸி, ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி, மஸ்கூலர் டைஸ்ட்ரோபி, ஃபெமிலியல் டைசாட்டோனோமியா, சார்ஜ் சிண்ட்ரோம், பிரடெரிக அட்டாக்சியா, ப்ரோட்டஸ் சிண்ட்ரோம், ஸ்பைனா ஃபிபிதா, மர்ஃபேன்ஸ் சிண்ட்ரோம், நியூரோஃபிப்ரோடோசிஸ், கனெக்ட்டிவ் டிஷ்யூ டிஸ் ஆர்டர், காக்னிடியல் டயாபிராக்மெட்ரிக் ஹெர்னியா, மற்றும் க்ரானியோஸ்பைனல் ஆக்ஸிஸ் டிஸ் ஆர்டர் (எ.கா., சிரிங்கோமைலியா, மீட்ரல் வால்வ் புரோலாப்ஸ், அர்னால்ட்-சயாரி-மல்பங்ஷன்). நடப்பதில் சிரமம், ஜீரண சிக்கல்கள், நிரந்தர பாதிப்பு உட்பட. பரிசோதனை![]() இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சோதிக்கப்பட்டு, இதுபோன்ற ஊனம் ஏற்பட காரணம் என்ன என்பது கண்டறியப்படும். உடல்நல சோதனையில், செய்யப்படுபவை:
சோதனையின்போது, நோயாளியின் மேலாடை கழற்றப்பட்டு, முன்பக்கம் வளையச் சொல்லுவர். (இதன் பெயர் ஆடம்ஸ் ஃபார்வர்டு பெண்ட் டெஸ்ட்[10] இது பெரும்பாலும் பள்ளி மாணவர்களிடையே பரிசோதிக்கப்படும்.) நோய் பரவி இருப்பது கண்டறியப்பட்டால், எக்ஸ்-ரே எடுக்கும்படி நோயாளி அறிவுறுத்தப்படுவர். மாற்றாக, நோயின் தன்மையை அறியக்கூடிய, ஸ்கோலியோமீட்டர் பயன்படுத்தப்படக்கூடும்.[11] நோயாளியின் அசைவு கண்காணிக்கப்பட்டு, பிற இயலாமைக்கான அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா (எ.கா., கன்னக்குழிவு, ரோம வளர்ச்சி, கொழுப்புக்கட்டி, அல்லது இரத்தக்குழல் கட்டி போன்றவற்றின் பாதிப்பால் ஏற்படும் ஸ்பைனா ஃபிபிதா உட்பட இந்த அறிகுறிகள் உள்ளனவா என்றும் சோதிக்கப்படும்). முழுமையான நரம்பு சோதனையும் செய்யப்படும். ஸ்கோலியோசிஸ் இருப்பது சந்தேகிக்கப்பட்டால், முழு தண்டுவடத்தையும் ஆராயக்கூடிய AP/குறுக்கு (முன் - பின்பக்க தோற்றம்) மற்றும் வெளிதள்ளிய/வடுக்கு (பக்கக் காட்சி) தோற்றங்களை காண்பிக்கக்கூடிய எக்ஸ்-ரேக்கள் எடுக்கப்பட்டு ஸ்கோலியோசிஸ் நோயின் வளைவுத் தன்மை ஆராயப்பட்டு கைபோசிஸ் மற்றும் லார்டோசிஸ் தாக்குதலும் சேர்ந்துள்ளதா என்பது கண்டறியப்படும். இந்நோய் ஏற்படக் காரணம் பிறவிக் குறைபாடா அல்லது நோய் முதல் அறியா நிலையில் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிவதற்கு, தண்டின் முழு நீளத்தைக் காண்பிக்கும் எக்ஸ்-ரே எடுக்க அறிவுறுத்தப்படும். அதுவும் நின்ற நிலையில் வைத்து எடுக்கப்படும். சிலருக்கு மூன்று முதல் பன்னிரெண்டு மாத இடைவெளியில் நோயின் வளர்ச்சி நிலையைக் கண்டறிய தொடர் ரேடியோகிராஃப் பரிசோதனை நிகழ்த்தப்படும். சில சூழ்நிலைகளில், முதுகுத்தண்டின் தோற்றத்தை அறிந்துகொள்வதற்காக, MRI சோதனையும் நிகழ்த்தப்படும். நிற்கும் நிலையில் வளைவுத்தன்மையை சிறப்பாக அறிய முடியும். இதற்கு கோப் ஆங்கிள் என்ற அளவீட்டைப் பயன்படுத்துவர். கோப் ஆங்கிள் எனப்படுவது, இரண்டு கோடுகளுக்கு இடையில் குறிக்கப்படுவதாகும். அதாவது நோயின் தாக்கம் அல்லது வளைவு ஏற்பட்டிருக்கும் மேல் பகுதி மற்றும் அதன் முடிவுப் பகுதியை இணைக்கும் வகையில் இந்த அளவீடு வரையப்பட்டு ஆய்வு செய்யப்படும். இரு வளைவுத்தன்மையால் பாதிக்கப்பட்ட நோயாளியாக இருந்தால், இரு வளைவுகளிலும் இந்த அளவீடு கணக்கிடப்ப்படும். வளைவின் நெளிவுத்தன்மை அல்லது பிரைமரி மற்றும் காம்ப்பன்சேட்டரி வளைவுகளை அளவிடவும், சில நோயாளிகளுக்கு வெளிநோக்கிய படி அமைந்திருக்கும் வளைவை எக்ஸ்-ரே கொண்டு கண்காணிப்பர். AIS -க்கான மரபணு சோதனை ஆனது 2009 ஆம் ஆண்டில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறதெனினும் குழந்தைப் பருவ வளைவின் வளர்ச்சியை முயற்சிக்க, அந்த சோதனையானது இன்னும் மேல் கண்காணிப்பில் உள்ளது. நோய்முன்கணிப்புவளர்ச்சி நிலை வெளிப்பாடைப் பொறுத்தே, இந்நோயின் ஆரம்பநிலையை அறிய முடியும். பொதுவாகவே, பெரிய வளைவுகளானது, சிறிய வளைவுகளைக் காட்டிலும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. மார்புச் சிரை மற்றும் இருபக்க முதன்மை வளைவை ஒரு பக்க மார்புச்சிரை வளைவுடன் ஒப்பிடுகையில், இருப்பக்க தாக்கமே ஆபத்தானதாகும். எலும்புக்கூடு முழு வளர்ச்சி அடையாதவர்களுக்கும் இந்நோயின் பாதிப்பு அதிகம் உள்ளது. (அதாவது, பருவ வயதை அடையாதவர்கள்). பதின்பருவத்தினருக்கான முதல் அறியா ஸ்கோலியோசிஸ் நோய்க்கான மரபணு சோதனைஜெனோமே-வைடு மையத்தின் ஆய்வின்படி, பருவ வயதின் நோய் முதல் அறியா நிலையுடன் ஒற்றை நியூக்ளியோடைட் பாலிமோர்பிசம் என்ற பாதிப்பு பாதிப்படைந்தவரின் டிஎன்ஏ -இல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஐம்பத்து மூன்று, பரம்பரை உதாரணங்கள் கிடைத்துள்ளன. ஸ்கோலியோசிஸ் நோயானது, பயோமெக்கானிக்கல் குறைபாடாக விவரிக்கப்படுகிறதெனினும், அதன் வளர்ச்சியானது வழக்கத்திற்கு மாறான தாக்கத்தைப் பொறுத்தது இல்லையெனில் ஹூயுடர்-வோக்மென் லா என்று அறியப்படுகிறது.[12][13] நிர்வகித்தல்ஸ்கோலியோசிஸ் தொடர்பான பாரம்பரிய மருத்துவ மேலாண்மை சிக்கல் வாய்ந்தது மேலும் அது வளைவின் தீவிரம் மற்றும் எலும்புக்கூட்டின் வளர்ச்சி போன்றவற்றின்படி அது தீர்மானிக்கப்படுகிறது. இவை இரண்டும் அதன் வளர்ச்சி நிலையை அறிய உதவும். பிற மருத்துவங்கள்
உடல் வளர்ச்சி அடிப்படையிலான அறிவியல் ஆய்வுகளில், பிரேசிங் முறை உள்பட, பிசிக்கல் தெரபி மூலம் இதற்கு தீர்வு காண சில திட்டங்களைக் கொண்டும் சோதிக்கப்பட்டது.[14] அறிவியல் சமூகத்தில், கிரொபிராக்டிக் மற்றும் பிசிக்கல் தெரபி மூலமாக இந்நோயை சரிபடுத்துவதில் சில பாதிப்புகள் உள்ளன என்று கண்டறியப்பட்டது. காரணம் அதில் பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகள்; மற்ற ஆய்வுகளைத் தவிர, இதில் சில ஆதரிக்கும்படி இருந்தன.[15] பிசியோதெரபி முறைகள்ஸ்க்ரோத் முறை என்பது, ஸ்கோலியோசிஸ் நோய்க்கு அளிக்கப்படும், தீங்கற்ற ஒரு வகையான பிசியோதெரபி முறையாகும். 1920ஆம் ஆண்டில், ஐரோப்பாவில் நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றியடைந்தது.[16][17] ஸ்கோலியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கத்ரீனா ஸ்க்ரோத் என்பவரால் ஜெர்மனி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருத்துவ முறையானது, அவரின் இந்த கண்டுபிடிப்பை மதிக்கும் வகையில் ஸ்கோலியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஜெர்மனியில் உருவான இந்த மருத்துவ முறையானது ஸ்பெயின், இங்கிலாந்து, சமீபத்தில் அமெரிக்காவிலும் பின்பற்றப்படுகிறது. ஸ்கோலியோசிஸ் தொடர்பான இந்த முறைகள் அனைத்தும், வழக்கத்திற்கு மாறாக அமைந்திருக்கும் நரம்புதசையை (குறிப்பாக, பின்புறம், போதுமான வலிமை இல்லாமை போன்ற தாக்குதலை) சரிபடுத்துவதன் மூலம் குணமாக்கப்படுகிறதெனினும், சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளால் குறைந்தபட்சமாவது நோயின் தீவிரம் குறைக்கப்படுகிறதென்று அறியப்பட்டுள்ளது.[18] வளர்ச்சியின் அடிப்படையில், 15 முதல் 20° வரையிலான அமைப்பின்படி இருக்கும் வளைவானது, பிசியோ-லாஜிக்-திட்டத்தின் மூலமும்,[19] 20 முதல் 30° வரையிலான வளைவுகளை சரிசெய்ய „3D-மேட்-ஈஸி“ என்ற முறையும் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இந்த திட்டம் சோதிக்கப்படுகிறது,[20][21] ஆனால் 30° -க்கும் மேலான வளைவு கொண்டவர்களுக்கு, இவ்விரண்டு திட்டங்களின் செயல்முறைகளும் பரிசீலிக்கப்பட்டு முக்கியமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்க்ரோத் முறை சிகிச்சை வழங்குவதும் இதில் பயனுள்ளதாய் அமைய வாய்ப்பிருக்கிறது.[22] மிக முக்கியமான சோதனைகளில், மிகவும் திறமைவாய்ந்த பணியாளர்கள் பயன்படுத்தப்படுவர். சிகிச்சை மட்டும் எடுத்துகொண்டு செல்லும் நோயாளிகளுக்கு மருத்துவமனை வழங்கும் மறுவாழ்வு சீரமைப்பானது, மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சமமாக கவனிக்கப்படுகின்றது,[23] சரியாக திட்டமிட்ட சோதனைகளின்படி சிகிச்சை அளிக்கும்போது சிகிச்சை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லும் வெளிப்புற நோயாளிகளும் மிகுந்த பயனைப் பெறுகின்றனர் இந்தக் குறைப்பாட்டை நீக்குவதற்கு, மிகச்சிறந்த மருத்துவத்தை வழங்குவதும் அவசியமாகிறது. அதற்கான செயல்விளக்கங்களைப் புரிந்துகொண்டு சிறந்த சிகிச்சையால் அந்நோயின் தாக்கத்தை குறைக்க முடியும். அளிக்கப்படும் சிகிச்சையானது, வளைவின் அளவு, நோயாளியின் வயது, மற்றும் வளைவின் தீவிரத்தைப் பொறுத்து அளிக்கப்படுகிறது. சிகிச்சைக் குறித்த நீண்ட கால தரவு முறைகள் இல்லாத காரணத்தினால், இன்றைய காலகட்டத்தில் இந்நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையானது, நோயின் தாக்கத்தைக் கொண்டே, எடுக்கப்படும் ஆய்வுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது.[24] தொழில்ரீதியான சிகிச்சை முறைகள்தொழில்ரீதியாக சிகிச்சை அளிக்கும் நிபுணர், காயம் அல்லது நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபடும்படியான சிகிச்சையை அளிப்பார் ஸ்கோலியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர், இம்முறை சார்ந்த நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, நோயாளிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து, சிகிச்சையின் மூலம் அவர் தேறி வருவதை அவருக்கு உணர்த்துவார். இதுபோன்ற உதவிகளும், வழங்கும் சிகிச்சைகளும் நோயாளிகளுக்கு ஆதரவு தந்து மற்றவர்களைப் போல் அவரும் தமது பணியை சிறப்புடன் ஆற்ற ஏதுவாய் அமையும். பிரேசிங் முறையில் வழங்கப்படும் சிகிச்சைகடந்த பல ஆண்டுகளாக, ஸ்கோலியோசிஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு, பல விதங்களில் பிரேசிங் கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன [25]. பிரேசிங் முறையில் அளிக்கப்படும் சிகிச்சையில், வளைந்த எலும்புகள் மேலும் வளையாமல் தடுக்கும் வண்ணம், சரிபடுத்தக்கூடிய மருத்துவம் உண்டு என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன[26]. மற்றும் பிற ஆய்வுகளும், இந்நோய்க்கு பிரேசஸ் முறை மிகச்சிறந்த நிவாரணியாக இருப்பதாகவும் உறுதிசெய்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான தங்களது பணிகளைச் செய்ய இம்முறை உதவுவதாக தெரிவித்துள்ளனர்[27]. இதோடு மட்டுமின்றி, நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், எப்படி உட்கார வேண்டும், படுக்க வேண்டும், என்பதும், தலையணைகள், வெட்ஜ்கள், ரோல்கள் மற்றும் செயற்கை எலும்பு உறைகள் போன்றவற்றை தனது உடல்நிலைக்கு தக்கவாறு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் இந்த முறையில் அவர்களுக்கு விளக்கப்படுகிறது[28]. ஏற்றுக்கொள்ளத்தக்க மற்றும் ஈடுசெய்யக்கூடிய விதத்தில் அமைந்திருக்கும் பல செயல்பாடுகள் இந்த முறையில் நோயாளிக்கு வழங்கப்பட்டு அவர்கள் மற்றவர்களைப் போல் சுதந்திரமாக வாழ உதவுகிறது. சுய-கவனிப்பு சுய-கவனிப்பு செயல்பாடுகள் என்பது, மற்றவர்களின் உதவி இல்லாமல், ஒருவர் தன்னையே பாதுகாத்துகொள்வதாகும். நோய்த்தாக்குதலால் ஏற்படும் உடல்நலக் குறைபாடு, சிகிச்சை முறையில் விதிக்கப்படும் சில கட்டுப்பாடுகள் போன்றவை, சுய-கவனிப்பு செயல்பாடை நிறைவேற்ற விடாமல் நோயால் பாதிக்கப்பட்டவரை தடுக்கும்[29]. இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் முதல்கட்ட சிகிச்சை என்பது, முதுகுத்தண்டு மேலும் வளையாமல் இருப்பதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையே. வளைவின் அளவு அடிப்படையில், பின்வரும் மூன்று வழிகளில் ஒன்று அளிக்கப்படும்; பிரேசிங், அறுவை சிகிச்சை அல்லது தனிப்பயனாக்கப்பட்ட இருக்கையின் மூலம் வழங்கப்படும் உடலின் நிலைக்கோரல்[29][30][31]. ஸ்கோலியோசிஸின் வளர்ச்சியை நிறுத்துவது என்பது, அன்றாடம் செய்யக்கூடிய பல வேலைகளில் ஏற்படும் செயலிழப்புகளைத் தடுக்க உதவும், அதாவது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது, இடுப்பு வீக்கம், குனிவது அல்லது எதையாவது தூக்கும்போது ஏற்படும் வலிகளைக் குறைக்கிறது. தொழில்முறை சிகிச்சையாளரானவர், தனிப்பயனாக்கப்பட்ட குஷன்களைத் தேர்வு செய்துதருவார். இந்த தனிப்பட்ட அமரும் நிலை ஆதரவானது முதுகெலும்பு வளைவு அல்லது வளைவிற்கு ஏற்ற சரிபடுத்தலை ஏற்படுத்தி வலியைக் குறைக்கும். இந்த வகையான சிகிச்சையானது, சக்கர நாற்காலியில் நகர்ந்து சென்று சிறு சிறு வேலைகளை செய்யும்போது இடுப்பு வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, கைகளுக்கு வலிமையைக் கொடுக்கிறது.[29]. இந்த சிகிச்சையின் ஒரு பகுதியாக, நோயாளியானவர், தானாக உடை உடுத்திக்கொள்வது, குளிப்பது, அலங்கரித்துக்கொள்வது, ஆரோக்கியமான உணவை தானே உட்கொள்வது போன்ற செயல்களை செய்ய தூண்டப்படுவார். நவீன வசதிகளுடன் கூடிய குளியலறையில் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.[32]. அலங்காரம் செய்துகொள்வது, உடை உடுத்திக்கொள்ளச் செய்வது போன்றவற்றை பழக்கப்படுத்துவதன் மூலம் நோயாளியானவருக்கு தனி சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. அவர் தனது பணிகளை செய்யும்போது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அவருக்கு தொழில்முறை சிகிச்சையாளர் உதவுவார். ஷூவை போட வைக்க மற்றும் அகற்ற பயன்படும் சாதனங்களும் இவர்களுக்காக பிரத்யேகமாக உள்ளது. இரைச்சியை நறுக்குவது அல்லது சாப்பிடுவது போன்றவற்றில் ஏற்படும் அசௌகரியங்களைத் தீர்ப்பதற்கு, நவீன கருவிகள் அல்லது பாத்திரங்கள் இவர்களுக்காக உண்டு. உற்பத்தித் திறன் உற்பத்தி செயல்பாடுகள் என்பன, சம்பளம் பெறக்கூடிய அல்லது பெறாத, பள்ளி, அலுவலகம் மற்றும் விளையாட்டு போன்றவையாகும்.[33]. உடல்நல மேம்பாட்டில் கண்டறியப்பட்ட சமீபத்திய ஆய்வில் கூறப்படுவது, வெவ்வேறு விதமான சிகிச்சைகளின் வளர்ச்சியாகப்பட்டது, ஸ்கோலியோசிஸ் மேலாண்மையில் உதவிப்புரியக்கூடியதாகவும், சிகிச்சை பெறும் அனைத்து விதமான வயதினரின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதாகவும் அமைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் துணை தொழில்நுட்பமானது பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி, தொழில்நுட்பத்தின் கிடைக்கும் தன்மை மற்றும் தரத்தை வெகு சிறப்பாக மேம்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[34]. துணை தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் விளைவாக, திறன்களில் வளர்ச்சி, அன்றாட செயல்பாடுகளில் மேற்கொள்ளக்கூடிய செயல்திறன், பங்கேற்பு நிலைகள், வாழ்க்கைத்தரம் இவற்றின் மதிப்புகளை உயர்த்துவதாக அறியப்பட்டுள்ளது.[33]. பொதுவான துணை தொழில்நுட்ப சிகிச்சையானது, அமருதல் மற்றும் முன்பக்க செயல்பாடு சார்ந்த கட்டுப்பாட்டில் சிறப்பாக பணிபுரிகிறது. முன்பக்க செயல் கட்டுப்பாடு சரியாக அமையாத குழந்தைகள் இவ்வகையான பயிற்சிகளால் சிறப்பாக தேறி வருவதாகவும், தன் வேலைகளை தாங்களே செய்துகொள்ளும் அளவிற்கு தகுதி பெற்றவர்களாய் இருப்பதாகவும், தங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதாகவும் பரவலாக அறிப்பட்டுள்ளது.[35]. வகுப்பறை மற்றும் விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் பங்கேற்று தங்களது கற்பனைத் திறனை மேம்படுத்திக்கொள்கின்றனர்[33]. நரம்புத்தசைக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கு, ஸ்கோலியோசிஸ் மேலாண்மை செயல்பாட்டில், சக்கர நாற்காலியில் அமர வைத்தல் என்பது மிகச்சிறந்த சிகிச்சையாக கண்டறியப்பட்டுள்ளது[36]. வசதியான சக்கர நாற்காலியில் அமர்வதால் இளைஞர்கள் வகுப்பறை செயல்பாடுகளில் மிக நீண்ட நேரத்திற்கு சோர்வில்லாமல் உட்கார்ந்து பங்கேற்க முடிகிறது. உட்காரும் நிலையை 20 டிகிரிகளுக்கு முன் தள்ளியபடி (தொடைகளை நோக்கி) மாற்றி அமைத்தலாது, உட்காரும் போது ஏற்படும் அழுத்தத்தை சரிசமமாக பகிர்ந்து அமருவதை வசதியாக்குகிறது. ஸ்கோலியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், அலுவலகத்தில் பணிபுரியும்போது இதுபோன்ற சூழ்நிலையில் தனது இருக்கையை அமைத்துக்கொள்வதால், அவரது வேலைத்திறன் கூடுவதாகவும், வாழ்க்கைத் தரததை உயர்த்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சக்கர நாற்காலியைப் பயன்படுத்தாதவர்களுக்கு, பிரேசிங் முறையைப் பயன்படுத்தி ஸ்கோலியோசிஸ்க்கு சிகிச்சை வழங்கமுடியும். நரம்பு சார்ந்த சிகிச்சைக்கு பிரேசிங் முறையை சரியாகப் பயன்படுத்தினால், வாழ்க்கை மாற்றமும் அதை ஈடுசெய்வதில் பெரும்பங்காற்றும். ஓய்வுநேரம் ஓய்வுநேர செயல்பாடுகள் என்பது, தனி ஒருவர் வாழ்வை அர்த்தமுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றிக்கொள்ளக்கூடிய நல்ல தருணம் ஆகும். நெஞ்சுவலி, முதுகுவலி, மூச்சு விடுதலில் சிரமம், ஓரளவே முதுகுத்தண்டை நகர்த்த முடியும் என்ற சூழல்கள் யாவும் உடற்பயிற்சி செய்யும்போது விட்டுவிலகி ஓடிவிடும். OT இன் பங்கானது, ஸ்கோலியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உடற்பயிற்சிகளை சரியான நேரத்தில் கொடுத்து, அவர்களது உடல்நல பாதிப்புகளை அகற்றி, உடல்சார்ந்த எல்லா நடவடிக்கைகளிலும் அவர்கள் கலந்துகொள்ள உதவி புரிவதாகும். விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வமாக கலந்துகொள்ளும் தனிநபர்களுக்கென OT ஆல் பரிந்துரைக்கப்படும் பொதுவான அணுகுமுறையே பிரேசிங் ஆகும்[27]. வெவ்வேறான பிரேசஸில் இருக்கும் நன்மைகள், தீமைகள், அதை முறையாக அணியும் முறை, அனுதினமும் அதைப் பராமரிக்கும் விதம் போன்றவற்றை அதைப் பயன்படுத்துபவருக்கு அறிவிக்க வேண்டியது OT இன் பொறுப்பாகும். மூச்சுவிடுதலில் சிரமம் அல்லது நெஞ்சு வலி போன்ற இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த விஷயங்களிலிருந்து அந்த நபரைக் காப்பது, தொழில்முறை சிகிச்சையாளரின் கடமையாகும். அவர்களுக்கு தங்களது சக்தியைத் சேமிக்கும் நுட்பங்களும் தொழில்முறை சிகிச்சையாளாரால் கற்றுக்கொடுக்கப்படும்[32]. அந்த நபருக்கு ஏற்றதுபோல், அவர் அன்றாடம் செய்யும் வேலைகளிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்வது போன்றவையும் இதில் அடங்கும். உதாரணத்திற்கு, சிகிச்சை பெறும் நோயாளியானவர் நீச்சல் பயிற்சியில் ஈடுபடும்போது அவ்வப்போது ஒய்வு எடுத்துக்கொண்டு தனது உடல் சக்தியை சேமித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுவார். இதோடு மட்டுமில்லாமல் திட்டமிடப்பட்ட ஓய்வில் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சிறந்த மூச்சுவிடுதலுக்கான நுட்பங்கள் போன்ற விஷயங்களும் OT ஆல் அவருக்கு கற்றுதரப்படும்[32]. உடற்பயிற்சி அல்லது விளையாட்டைக் கற்றுக்கொடுப்பது அல்லது அதில் சில மாற்றங்களைச் செய்து, ஸ்கோலியோசிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அன்றாட செயல்பாடுகளைச் சிறப்புடன் ஆற்ற தொழில்முறை சிகிச்சையாளர் உதவுவார்[32]. சிகிச்சையாளரின் அறிவுரைப்படி நடப்பது என்பது உடற்பயிற்சி அல்லது விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் சில நேரங்களில் சிகிச்சையாளர் அனுபவிக்கும் கடினத்தன்மையிலிருந்து விடுதலைக் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, உடற்பயிற்சி செய்யும்போது அவ்வப்போது இடைவேளை எடுத்துக்கொள்வது. ஸ்கோலியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் ஒருவேளை விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் பங்கேற்க முடியாவிட்டால், தொழில்முறை சிகிச்சையாளர் அதை உணர்ந்துகொண்டு அவரின் விருப்பம் மற்றும் திறனிற்கு ஏற்றபடி அவரை உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபட வைப்பது அவரது கடமையாகும். பயிற்றுவிப்பது அல்லது பயிற்சியாளாராக இருப்பதன் மூலம் OT ஆனவர் நோயாளியை உற்சாகபடுத்தி அவரை உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடவைத்து வழிகாட்டுவார். பிரேசிங்எலும்பு வளர்ச்சி இருக்கும் நோயாளிகளுக்கே பொதுவாக பிரேசிங் செய்யப்படுகிறது இது பொதுவாக அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கபடும் நிலைக்கு மேல் அது வளராதபடி தடுப்பதற்கு வளைவை தாங்கிப் பிடிப்பதற்கு இந்த முறை உதவுகிறது. வலியை நீக்குவதற்கு, பெரும்பாலும் இளவயதில் உள்ளவர்களுக்கு இந்த முறை பின்பற்றப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிவரை தாங்கி பிடிப்பதற்கு கருவி ஒன்று நோயாளியின் உடம்பில் பொருத்தப்படும்; சில நேரங்களில் நோயாளியின் கழுத்துப் பகுதிவரையும் தாங்கி பிடிக்கும் கருவிகளும் பொருத்தப்படக்கூடும். பொதுவாக,TLSO, என்ற பிரேஸ் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஃபைபர் கிளாஸ் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கும். தோள்பட்டையிலிருந்து, இடுப்பு வரையிலான பகுதியில் பொருத்தும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு 22 முதல் 23 மணிநேரங்கள் வரை இதை அணியலாம். இது முதுகுத்தண்டில் உள்ள வளைவுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. இதன் வடிவமைப்பு மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணரின் திறமைக்காக மட்டுமின்றி, நோயாளியின் ஒத்துழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு அவர் அதைப் பயன்படுத்தக்கூடிய மணிநேரங்கள் போன்றவற்றின் அடிப்படையில்தான் அதன் திறன் அமைந்துள்ளது. பொதுவாக, நோய் முதல் அறியா நிலையில் ஏற்படும் வளைவுகள் மற்றும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று தீர்மானிக்கப்படுபவர்களுக்கே பிரேசஸ் முறை பயன்படுத்தப்படும். இளம் வயது குழந்தைகள் உடலில் இன்னும் அதிகமான வளைவை ஏற்படுத்திக்கொள்ளாத வகையில் இது பயன்படுத்தப்படும். அறுவை சிகிச்சை முன் கூடுமானவரை வளைவின் வளர்ச்சியை இது தடுக்கும். பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டு மேலும் பாதிப்பு அடைவதிலிருந்து இது தடுக்கும். இந்த முறையானது உணர்வு ரீதியான மற்றும் உடல்ரீதியான வசதியின்மையை ஏற்படுத்தும். அன்றாட செயல்பாடுகளை செய்வதில் மிகுந்த சிரமம் இருக்கும் காரணம் இந்த முறையினால் வயிற்றுப்ப்குதிக்கு மிகுந்த அழுத்தம் கிடைக்கும் இதனால் மூச்சு விடுவதிலும் சிரமம் இருக்கும். அடிவயிற்றுப் பகுதிக்கு அழுத்தம் ஏற்படுவதால் குழந்தைகள் தங்களது எடையை இழக்கவும் வாய்ப்புண்டு. ஸ்கோலியோசிஸ் ஆய்வு அமைப்பின் பரிந்துரைகளின்படி, பிரேசிங்கில், 25 டிகிரிகளை விட அதிகமான வளைதல் பயிற்சிகள், 30 மற்றும் 45 டிகிரிகளில் உள்ள வளைவுகள், ரிஸ்ஸர் குறி 0, 1 அல்லது 2 (பெல்விக் வளர்ச்சி பகுதியில் எக்ஸ்-ரே அளவீடு), மற்றும் பெண்களில் மாதவிடாய் தொடங்கிய 6 மாதத்திற்குள்ளாக.[8] பூப்படைதல் காலத்தில், 25° கோப்புக்கும் அதிகமான வளர்ச்சியடையும் ஸ்கோலியோசிஸானது, சினீவு பிரேஸ் போன்ற அமைப்பு சார்ந்த பிரேஸ் உடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டும், மேலும் இதனுடைய வழியாக, சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணிநேரங்கள் பிரேஸை அணிந்திருக்க வேண்டும். (ஒரு நாளுக்கு 23 மணிநேரங்கள் என்பது இன்னும் சிறந்த முடிவைத் தரக்கூடும்). சமீபத்திய பிரேஸ் உருவாக்கமானது CAD/CAM என்ற தொழில்நுட்பத்திலானது. இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், வடிவம் சார்ந்த நிலையான பிரேஸ் சிகிச்சைக்கு இது உதவும். இந்த அமைப்பு முறைகளால், பிரேஸ் உருவாக்கத்தில் ஏற்படும் தீவிரமான தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பமானது, பிரேஸ் கட்டமைப்பிற்கான பிளாஸ்டர் வார்ப்புரு உருவாக்கத்தையும் தடுக்கிறது. அளவீடுகளானது, பிளாஸ்டரிங்குடன் ஒப்பிடத்தகாததாய் இருக்கும்பட்சத்தில், அதை எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ளலாம். இதில் ஜெர்மனியில் கிடைக்கும் CAD / CAM பிரேஸ்களான ரெக்னியர்-சியனவு பிரேஸ் , ரிகோ-சியனவு பிரேஸ் மற்றும் ஜெனிசிங்கன் பிரேஸ் போன்றவை வியஸ்ஸைப் பொறுத்தவரை இம்மாதிரியானவையாகும்.[37] பல நோயாளிகள், சியனவு-லைட் பிரேஸையே விரும்புகின்றனர், ஏனெனில் அதுவே, உலகளாவிய அளவில் எழுத்துப்பூர்வமாக சிறந்த பிரேஸ் என்றறியப்பட்டுள்ளது மற்றும் தற்போது பயன்பாட்டில் உள்ள எந்த பிரேஸை விடவும் அணிவதற்கு இதுவே எளிதானது.[38][39] ஆனாலும், இந்த பிரேஸ் எல்லா வகையான வளைவு வடிவங்களுக்கும் கிடைப்பதில்லை. ![]() சமீபத்திய வளர்ச்சியடைந்த பிரேஸ்களில் ஒன்று ஸ்பைகர் டைனமிக் பிரேஸ். மான்ட்ரியல் கனடாவில் உள்ள செயின்ட். ஜஸ்டின் மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்குழுவினரால் இது உருவாக்கப்பட்டது. ஆய்வுத் திட்டபணியின் ஒரு பகுதியாக கனடா நாட்டு அரசாங்கத்தால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1992 ஆம் ஆண்டு மான்ட்ரியலில் முதன்முதலாக பிரேஸ் பயன்படுத்தப்பட்டது மேலும் உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. ரிஜிட் பிரேசிங்கில் உள்ள வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி இந்த பிரேஸ் வேலை செய்கிறது. 3 விதமான அழுத்தத்தின் மூலம், முதுகுத்தண்டை நேராக முயற்சிக்கப்படுவதைக் காட்டிலும் சரியான நகர்வை ஸ்பைன்கேர் பயன்படுத்திக்கொள்கிறது. ஸ்கோலியோட்டிக் நிலைக்கு எதிரான நிலையில் உடலின் பகுதிகள், தோள்பட்டைகள், விலா எலும்புகள், லம்பர் ஸ்பைன் மற்றும் பெல்விஸ் போன்ற பகுதிகளை நிலைப்படுத்தும்படி செய்யப்படுகிறது. உடல் வேறுநிலைக்கு மாறும்போது, அதற்கேற்ற சரியான நிலைக்கு உடலுடன் இணைக்கப்பட்டிருக்கும் முதுகுத்தண்டானது நகரும். சில நிலைகள் மற்றும் ஸ்பைன் நிலைகளானது ஸ்கோலியோடிக் வளைவின் நிலைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. ஸ்பைன்கேர் கருவியில் உள்ள நன்மைகள் என்னவென்றால், அதை அணிவதும் அணிந்த பின் இயல்பான நகர்வுகளையும் அது எளிமையாக்கிவிடும். ரிஜிட் பிரேசிங்கில் ஏற்படும் தசை வலிமையிழப்பு பக்க விளைவுகள் போன்றவை இதில் ஏற்படாது. துணிகளின் உள்ளே கனகச்சிதமாய் இது பொருந்திவிடும். இது ஒரு சரியான அணிகலன் என்பதை 95.7 சதவீத நோயாளிகள் உணர்ந்துள்ளனர். நோய் முதல் அறியா நிலையில் உள்ள ஸ்கோலியோசிஸ் சிகிச்சையில், ஸ்பைன்கேர் டைனமிக் பிரேசிங் அணிதலானது வெற்றிகரமான முடிவுகளை வழங்கிய பிரேசிங் முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 2005 ஆம் ஆண்டின் ஸ்கோலியோசிஸ் ஆய்வு சமூகத்தின் வழிகாட்டுதலின்படி[40], ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக் ஆர்தோபேடிக்ஸ் என்ற பதிப்பில் 2007 ஆம் ஆண்டு ஜுன்மாதம் பிரேசிங் குறித்த இரண்டு பெரிய ஆய்வுகள் வெளிவந்தன. அதில் ஒரு ஆய்வானது ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை[41] யால் மேற்கொள்ளப்பட்டதாகும் இந்த ஆய்வில் ஸ்பைன்கேர் பிரேஸின் திறன்கள் விவாதிக்கப்பட்டது. மற்றொன்று, செயின்ட். ஜஸ்டின் குழந்தைகள் மருத்துவமனை [42] யில், நடத்தப்பட்டு, ஸ்பைன்கேர் பிரேஸின் திறன்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. ஸ்கோலியோசிஸ் ஆய்வு சமூகத்தின் வழிகாட்டுதலின் இரண்டு ஆய்வுகளிலும், 3 வகையான குழுக்களின் முடிவுகள் ஒப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டதாகும். இந்த ஆய்வின் முடிவுகளில், ஸ்பைன்கேர் பயன்படுத்துவதால் 76.5 சதவீதம் அறுவை சிகிச்சை தவிர்க்கப்படுவதாகவும், இரவுநேரத்தில் அணியக்கூடிய பிரேஸ் ஆனது 40% விளைவை ஏற்படுத்தி அறுவை சிகிச்சையை தவிர்ப்பதாகவும், TSLO ஆனது 21% விளைவை ஏற்படுத்தி அறுவை சிகிச்சையை தவிர்ப்பதாகவும் கூறப்பட்டது. இந்த முடிவுகளின் அடிப்படையில் வைத்து பார்க்கும்போது, TLSO உடன் வைத்து ஒப்பிடுகையில், ஸ்பைன்கேர் சிகிச்சையானது 71% சதவீதம் அறுவை சிகிச்சையிலிருந்து தப்பிக்க உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பைன்கேர் குழுவின் விளைவுகளைப் பற்றி சிலர் விமர்சித்துள்ளனர்,[43] தனித்தனி அமைப்புகளின் கண்டுபிடிப்பாளர்களால் இந்த முடிவுகள் சரியாக மீண்டும் உருவாக்கப்படவில்லை. ஆனாலும், இங்கிலாந்து,[44], போலந்து[45][46] ஸ்பெயின் [47] மற்றும் கிரீஸ் [48] ஆகியவற்றில் உள்ள தனித்தனி மையங்கள் தனித்தனி முடிவுகளை வெளியிட்டுள்ளன. இந்த ஆய்வுகள் ஒவ்வொன்றிலும் பெறப்பட்ட முடிவுகளானது, செயின்ட். ஜஸ்டின் மருத்துவமனை ஆய்வுகளுடன் கிடைத்த முடிவுகளுடன் ஒத்துபோயின. ஸ்பைன்கேரை பயன்படுத்தி எதிர்மறையான முடிவுகளையே இரண்டு ஆய்வுகளும் வழங்கின.[49][50] அதன் மோசமான அறிவியல் செயல்முறைகள் மற்றும் விருப்ப முரண்பாடுகளின் காரணமாக மிக அதிகமாக இரண்டு ஆய்வுகளும் விமர்சிக்கப்பட்டன.[51] ஸ்பைன்கேர் பிரேஸ் பயன்படுத்தும்படி வடிவமைக்கப்படாத காரணத்தால், ஆய்வு ஆசிரியரால் ஸ்பைன்கேர் பிரேசின் பயன்பாடு ஒரு ஆய்வில் மாற்றப்பட்டது. ஸ்பைன்கேரைப் பொருத்துவதில் அந்த ஆசிரியருக்கு முன் அனுபவம் ஏதுமில்லாமல் இருந்தது அதனால் ஒரு ஆசிரியராக அதன் பயன்களை அவரால் பிரபலப்படுத்த முடியாமல் போனது. இரண்டாவது ஆய்வில், ஓரளவே பயிற்சியடைந்த நிபுணர்கள் குழுவால் ஸ்பைன்கேர் பயன்படுத்தப்பட்டது ஆனால் பிரேசிற்கு தேவையான முக்கிய உபகரணங்கள் அதில் இல்லாமல் இருந்தது. [51]. இதன் மூலம் இவ்விரு ஆய்வுகளும் விளக்குவது என்னவெனில், முன் அனுபவம் பெற்ற பயிற்சியாளாரால் இது பயன்படுத்தவேண்டும், பயன்பாட்டிற்கு ஏற்றபடி அதை பொருத்துவதற்கும் பயிற்சி நிரல் அமைக்க வேண்டு என்பதே அது. ஸ்கோலியோசிஸ் நோயால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு பிரேஸ் பயன்படுத்துவதற்கு பதில் முதலில் பிளாஸ்டர் ஜாக்கட் அணிவதற்கு பயிற்சி அளிக்கப்படும். குழந்தைக்கு ஏற்படும் அறியாநிலை ஸ்கோலியோசிஸை தொடர்ச்சியான பிளாஸ்டர் தொகுப்புகளைப் (EDF: நீட்டித்தல், நகர்த்துதல், வளைத்தல்) பயன்படுத்தி நிரந்தரமாக சரிசெய்வது சாத்தியம்[52] என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை ஒரு சிறப்பான சட்டத்தில் சரிசெய்தல் முறையாக பயன்படுத்தப்படும், இதனால், குழந்தையின் மென்மையான எலும்புகளை அதனுடைய வளர்ச்சியுடன் சரியாக "ஒழுங்கமைக்க" முடிகிறது. இந்த முறையானது, UK நாட்டைச் சேர்ந்த மின் மேத்தா என்ற சிறப்பு நிபுணரால் உருவாக்கப்பட்டது. சில ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு அணிவிக்கும் தன்மைகொண்ட CAD/CAM பிரேஸ்கள் இன்றளவில் எங்கும் கிடைக்கும்படி உள்ளது. இதனால் பிளாஸ்டர் ஜாக்கெட்களுக்கு தற்போது மவுசு இல்லை என்பது உறுதியாகிறது.[37] அறுவை சிகிச்சைவளர்ச்சி நிலையில் இருக்கும் வளைவுகளை சரிபடுத்தவே அறுவை சிகிச்சை பயன்படுகிறது (அதாவது, 45 முதல் 50 டிகிரிகளுக்கு அதிகமாக) இருக்கும் வளைவுகள் இளம் வயதினருக்கு தொல்லை கொடுக்கக்கூடியதாகும், ஸ்பைனா பிஃபிதா என்ற ஒரு வித வளைவு நோயைக் கொண்டவர்களும் பெருமூளைச்சிரை வாதத்தைக் கொண்டவர்களும் அமர்வதிலும் மற்ற பணிகளைச் செய்யவும் சிரமப்படுவர். அவர்களை பாதித்திருக்கும் வளைவானது, மூச்சு விடுவது போன்ற உளவியல் ரீதியான செயல்பாடுகளை பாதிக்கும். முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணரால் மட்டுமே ஸ்கோலியோசிஸ் நோய்க்கு சிறந்த அறுவை சிகிச்சையை செய்ய முடியும். ஸ்கோலியோடிக் முதுகுத்தண்டை நேராக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு ஆனால் சில நேரங்களில் அதில் வெற்றியும் ஏற்படும். கருவிகொண்டு செய்யப்படும் முதுகுத்தண்டு பிணைப்பு![]() முதுகுத்தண்டு பிணைப்பு என்பது ஸ்கோலியோசிஸ் நோய்க்கு பரவலாக செய்யப்படும் அறுவை சிகிக்சையாகும். இந்த செயல்முறையில் (உடம்பின் ஒரு பகுதியில் இருந்து எலும்பு தன் ஒட்டு அல்லது ஓரினத்திசு ஒட்டு -இல் இருந்து எடுக்கப்படும்) எலும்பானது, முதுகெலும்புச் சிரைப் பகுதியில் பொருத்தப்படும். அவை மென்மையான நிலையிலிருந்து கடினமான திட நிலைக்கு மாற்றம் பெறும். முதுகுத்தண்டு நகர்த்தி செயல்படுவது போன்ற வேலைகளில் ஈடுபடும்போது ஏற்படும் வலியிலிருந்து இது தடுக்கும். மார்பு அல்லது வயிறுக் குழியில் உள்ளிடுவதன் மூலம் முன்பக்க செயல்முறையிலிருந்து இது செய்யப்படும் அல்லது பின்பக்க செயல்முறையிலிருந்தும் இதைச் செய்யலாம். இந்த சேர்க்கைகள் பெரும்பாலானவர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மெட்டல் கருவிகள் எதுவும் இல்லாமல் தான் ஸ்பைனல் ஃபியூஷன் செய்யப்படும். அறுவை சிகிக்சைக்குப் பிறகு, வார்ப்பு பொருத்தப்படும். முடிந்தவரை எலும்பை நேராக இழுத்து, சரியான பிணைப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். எதிர்பாராதவிதமாக, சூடர்த்ரோசிஸ் என்ற பிணைப்பு செயலிழப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு. 1962 ஆம் ஆண்டு, பவுல் ஹாரிங்டன் என்பவர் முதுகுத்தண்டை நேராக்க செய்யப்படும் சிகிச்சையை அறிமுகப்படுத்தினார். இந்த சிகிச்சையில் மெட்டல் கருவி கொண்டு முதுகெலும்பு சீர் செய்யப்படும். ஆனால் உண்மையாகவே, ராட்சட் அமைப்பில் ஹாரிங்டன் ராட் என்பதை வைத்தே சிகிச்சை செய்யப்படுகிறது. வளைவின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் கொக்கிகளால் இணைத்து உடல் நகரும்போது வளைவானது நகரவோ அல்லது நேராக்கப்படவோ வாய்ப்புண்டு. இந்த ஹாரிங்டன் செயல்முறையில் ஏற்படும் குறை ஒன்று உண்டு அது என்னவென்றால், இடுப்புப் பகுதியின் ஓட்டில் சரியான நிலையை அது கொடுக்காமல் குறை ஏற்படுத்தியதுதான். இதன் விளைவாக, நேராக எழுந்து நிற்பதற்கு முதுகுதண்டின் பிணைக்கப்படாத பகுதிகள் அதை சமன்படுத்த முயற்சிக்கும். வயதானவர்களுக்கு, ஆர்த்ரைட்டிஸ், வட்டு மறுசெயலாக்கம், தசை பிடிப்பு, வலி நிவாரணிகளால் ஏற்படும் வலி, அறுவை சிகிச்சை, முழுநேரமும் பணிசெய்ய முடியாமல் போகும் குறைபாடு ஏற்படலாம். "தட்டையான பின்புறம்" என்பது தொடர்புடைய சிக்கலின் மருத்துவ பெயராகும். இது லம்பர் ஸ்கோலியோசிஸ் உள்ளவர்களுக்கு ஏற்படுவது.[vague] நவீன முதுகெலும்பு அமைப்பு முறைகளானது, வகிட்டு நிலை மற்றும் சுழற்சி குறைகள் போன்ற சிக்கல்களை ஹாரிங்டன் ராட் அமைப்பால் தீர்க்க முடியவில்லை எனக் கண்டறிந்துள்ளது. ராட்கள், ஸ்க்ரூகள், கொக்கிகள் மற்றும் வயர்களைப் பயன்படுத்தி முதுகெலும்பை வலிமையானதாகவும், ஹாரிங்டன் ராடை விடவும் பாதுகாப்பானதாகவும் ஆக்க முயற்சி செய்தனர். இந்த தொழில்முறை கோட்ரல்-டுபவுசெட் கருவியாக்கல் என்றழைக்கபட்டது. தற்போது மிக பொதுவான தொழில்நுட்ப செயல்முறையாக உள்ளது. நவீன முதுகெலும்பு பிணைப்பிற்கு பொதுவாக நல்ல வரவேற்பு கிடைக்கிறது காரணம் சரிசெய்தல்களின் விகிதாச்சாரமானது, தோல்விகள் மற்றும் பாதிப்பு ஏற்படும் காரணிகளில் இருந்தே உயர்ந்தே இருக்கிறது.[சான்று தேவை] பிணைக்கப்பட்ட முதுகெலும்புகளைக் கொண்ட நோயாளிகள், மற்றவர்களைப் போல் இயல்பான வாழ்க்கை வாழ்பவர்களாக உள்ளனர். அவர்கள் இளம் வயதுக்காரர்களாக இருந்து, நாளடைவில் ஏதேனும் அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் புதிய அறுவை சிகிச்சை தொழில் உத்திகளைக் கொண்டு அதை சரிசெய்யும் வசதியும் உண்டு. ஸ்கோலியோசிஸ்க்காக அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள் ராணுவத்தில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். யுனைடெட் கிங்டம், ஸ்வீடன் மற்றும் அமெரிக்காபோன்றவை அந்த நாடுகளின் பட்டியலில் அடங்கும். பெடிக்கிள் ஸ்க்ரூ மட்டுமேயான உள்ளக முதுகுத்தண்டு ஊடுருவல் பதின்பருவ ஐடியோபாதிக் ஸ்கிலியோசிஸ் கொண்ட நோயாளிகளுக்கு 2 ஆண்டுகளில், பெரிய முதன்மை வளைவு சரிசெய்தலை மேம்படுத்தக்கூடும். இது இரட்டை கருவி பயன்பாட்டை விட மேம்பட்டது (அதாவது முனை ஊக்குகள் மற்றும் டிஸ்டல் பெடிக்கிள் திருகாணிகளுடன் உள்ளவை) (அதாவது 65% இரண்டாவது முறையில் 46%). இதனை ஒரு ரெட்ரோஸ்பெக்டிவ் பொருத்தப்பட்ட கோஹோர்ட் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.[53] நோயாளியின் வயது, ஊடுருவல் நிலைகள், லென்க்கே வளைவு வகை மற்றும் அறுவை முறை ஆகியவற்றின் அடிப்படையில், கணிப்பு கோஹோர்ட்கள் ரெட்ரோஸ்பெக்டிவ் கோஹார்ட்களுடன் பொருத்தப்படுகின்றன. இந்த இரண்டு குழுக்களும், வயது, லென்க்கே AIS வளைவு அல்லது ரைஸர் நிலை ஆகியவற்றைப் பொறுத்த வரை கணிசமான அளவு வேறுபடுவதில்லை. ஊடுருவப்பட்ட முதுகெலும்பின் எண்ணிக்கை கணிசமான அளவு வேறுபடக்கூடியது (பெடிக்கிள் திருகாணிக்கு 11.7±1.6, இரட்டை முறைக்கு 13.0±1.2). இந்த ஆய்வின் முடிவுகள், ஒற்றைச் சார்பானவையாக இருக்கக்கூடும். ஏனெனில், பெடிக்கிள் திருகாணி குழுவோடு, கலவை கருவி குழுவின் ரெட்ரோஸ்பெக்டிவ் ஆய்வுகளுக்கு எதிராக பகுப்பாய்வு செய்யப்படுகிறது. ஸ்கோலியோசிஸ் நோயின் பாதிப்பால், இடுப்பு வீங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்போது அதை சரிசெய்ய, காஸ்டோபிளாஸ்டி (தோரோகோப்ளாஸ்டி என்றும் அழைக்கப்படும்) என்ற மருத்துவ சிகிச்சை உண்டு.[vague] பிணைப்பு அறுவை சிகிச்சைக்கு அடுத்து எந்த நேரத்திலும் இந்த சிகிச்சை செய்யப்படும். அந்த அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாகவோ அல்லது சில வருடங்கள் கழித்தோ செய்யப்படலாம். பிணைக்கப்பட்ட முதுகெலும்பானது, இடுப்புப் பகுதியில் சுழல்வதை சார்ந்தே அதன் வெற்றி உள்ளது. இடுப்பு வீக்கம் என்பது முதுகெலும்பு சுழற்சியில் ஏற்பட்டுள்ள கோளாறைக் குறிக்கும் அறிகுறியாகும்.
ஸ்கோலியோசிஸ்காக, அறுவை சிகிச்சை செய்துகொள்வது 5% ஆக இருக்கிறது. இதற்கு சாத்தியமான சிக்கல்களாக கருதப்படுபவை மென் அல்லது கடினத் திசுவின் பாதிப்பு, மூச்சுவிடுதலில் சிரமம், இரத்தப் போக்கு மற்றும் நரம்பு பாதிப்புகள் போன்றவை. ஆனாலும் சமீபத்திய சான்றின்படி பிரச்சனைகளின் அளவு குறைந்துள்ளதாகவே கூறப்படுகிறது. முன்பெல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு 5% மறு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது ஆனால் இன்றைக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சையைப் பொறுத்தமட்டில் நீண்டகாலம் பிரச்சனை இன்றி என்ன வேண்டும் என்பது விளங்காததாகவே இருக்கிறது.[54][55] இதை வைத்துப் பார்க்கும்போது, முதுகெலும்பில் ஏற்படும் குறைகளின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை அறுவை சிகிச்சை குறுக்கீடுகளாலும் மாற்ற முடியாது என்பதும், அறுவை சிகிச்சை என்பது காஸ்மட்டிக் அறிகுறியாகவும், இளம்வயது நோய் முதல் அறியா நிலை (AIS)யில், 80° -க்கும் அதிகமாக ஸ்கோலியோசிஸின் தாக்குதல் இருக்கக்கூடாது என்பதும் விளங்கும்.[54][56] காஸ்மட்டிக் அறுவை சிகிச்சையின் விளைவுகள் எப்போதும் நிலையானதாக இருக்காது.[54] அதனால், சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவமனைக்கு இது தொடர்பான மருத்துவமனைக்கு நோயாளி செல்வது பரிந்துரைக்கப்படுகிறது. பிணைப்பு இல்லாத அறுவை சிகிச்சைபுதிய உட்பொதித்தலானது, பிணைப்பு அறுவை சிகிச்சையை தாமதப்படுத்தி, முதுகெலும்பு வளர்ச்சியை இளம்வயது குழந்தைகளுக்கு அதிகமாக்குவதே நோக்கமாகும். மிக இளவயது நோயாளிகளுக்கு, அதாவது மார்பு வளர்ச்சி போதாமையின் காரணமாக மூச்சு விடுதலில் சிரமம், கணிசமான அளவு இதய அழுத்தம் போன்றவற்றை கொண்டவர்களுக்கு, விலா எலும்புகளை நகர்த்தி அதன் குழிவான பக்கத்தை நகர்த்துதல் அதிக பயன் தரக்கூடியதாக இருக்கும். இந்த நெடுக்குவாக்கு நீட்டிக்கக்கூடிய புரோஸ்தெடிக் டைட்டானியம் விலாக்கள் (VEPTR) காரணமாக, மார்பு குழியின் அளவு அதிகரித்து, முதுகெலும்பு நேராகி, அது வளர்ச்சியடையவும் வாய்ப்பு ஏற்படும். வளரும் குழந்தைக்கு செய்யக்கூடிய மாற்று வழிகளாவன, முதுகெலும்புக்கு இடையே இரும்பு சட்டத்தைச் செருகுவதாகும், இதனால் முழு வளைவும் ஊடுருவாமல் தடுக்கப்படும். ஆனால் இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும், மற்றும் முதுகெலும்பில் இரும்பு சட்டங்களை நுழைப்பதும் வரம்புக்கு உட்பட்டதே. இந்த முறைகள் நேர்மையானதாகவும், உறுதியானதாகவும் இருந்தாலும், இந்த சிகிச்சைகள் வளரும் நோயாளிகளுக்கு மட்டுமே சாத்தியமானவை ஆகும். மேலும் இவற்றால் ஏராளமான வலியும் ஏற்படக்கூடும். ஸ்கோலியோசிஸ் ஆய்வு சமூகம்ஸ்கோலியோசிஸ் ஆய்வு சமூகமானது, ஒரு தொழில்துறை நிறுவனம். இதில் மருத்துவர்கள் மற்றும் உடல்நல நிபுணர்கள் உள்ளனர். முதுகெலும்புக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த வகையில் சீரிய முறையில் சிகிச்சை வழங்குவதையே முதன்மை காரியமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். 1966 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, உலகத்தின் முதன்மையான முதுகெலும்பு சிகிச்சை சமூகமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. உறுப்பினராவதில் உள்ள கண்டிப்பு, அவர்களின் உடன்பாட்டிற்கு ஏற்றவர்களை தேர்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. தற்போதைய புள்ளிவிவரத்தின்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகெலும்பு நிபுணர்கள், சில ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், எலும்பியல் சிகிச்சை நிபுணர்கள் போன்றோர் உள்ளனர். இந்த அமைப்பின் நோக்கமே முதுகெலும்பு பிரச்சனையுள்ள நோயாளிகளை அரவணைத்து அவர்களுக்கு முதன்மையான மற்றும் சிறந்த சிகிச்சை வழங்குவதே ஆகும்.[57] இந்த சமூகத்தைச் சார்ந்த பல உறுப்பினர்கள், விருப்ப முரண்பாடை தெளிவாக நோயாளிகளுக்கு அறிவுறுத்துகின்றனர். இந்த தொழில்துறையானது, ஆய்வுகளை மட்டும் ஆதரிக்காமல், தனிப்பட்ட செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் தருகிறது. சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்க்ரூவின் மதிப்பு கிட்டத்தட்ட 1.35 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட மதிப்பு வாய்ந்ததாகும் அதனால் சிகிச்சை பெறும் ஒருவர் அதனால் அடையும் பலன்களை உணர முடியும்.[58] முதுகெலும்பு என்பது, அதன் சிகிச்சையாளர்களுக்கு லாபம் ஈட்டித்தரும் விஷயமாகவும் இருக்கிறது.[59] அதனால், முதுகெலும்பு சிகிச்சையாளர் ஒருவரால் அறிவுறுத்தப்படாத வரை, தெளிவான மருத்துவ சிகிச்சையைப் பெறமுடியாது என்பதை நோயாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.[54] மேலும் பார்க்ககுறிப்புகள்பன்னாட்டுத் தரப்புத்தக எண் [[Special:BookSources/{{{1}}}|{{{1}}}]] பிழையான ISBN
வார்ப்புரு:Dorsopathies வார்ப்புரு:Congenital malformations and deformations of musculoskeletal system </nowiki> |
Portal di Ensiklopedia Dunia