ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை (Shri Ram Janmbhoomi Teerth Kshetra) என்பது 2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்க 5 பிப்ரவரி 2020 அன்று நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில்இராமர் கோயில் கட்டுவதற்கு ஒரு பட்டியல் சமூக உறுப்பினர் மற்றும் இந்து சமய மடாதிபதிகள் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் கொண்ட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை நிறுவப்படுவதாக அறிவித்தார்.[3][4] இந்த அறக்கட்டளையின் பதிவு அலுவலகம் மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் இல்லம் அமைந்த ஆர்- 20, கிரேட்டர் கைலாஷ், புது தில்லி 110048 என்ற முகவரியில் செயல்படும்.[5] இந்த அறக்கட்டளையின் தலைவராக மகந்த் நிருத்திய கோபால் தாஸ், பொதுச் செயலராக சம்பத் ராய் மற்றும் பொருளாராக சுவாமி கோவிந்த்தேவ் கிரி, புனே உள்ளனர்.[6][7] மேலும் இராமர் கோயில் கட்ட ராம ஜென்ம பூமியில் 67 ஏக்கர் நிலம் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர்களும், நியமன உறுப்பினர்களும்
அறக்கட்டளைக்கு 9 நிரந்தர உறுப்பினர்களையும், 6 நியமன உறுப்பினர்களையும் இந்திய அரசு நியமித்துள்ளது.[8]
நிரந்தர உறுப்பினர்கள்
மடாதிபதிகள்
ஜெகத்குரு சங்கராச்சாரியார் ஜோதிஷ் பீடாபதி, சுவாமி வாசுதேவானந்தர், பிரயாக்ராஜ்
ஜெகத்குரு மாதவாச்சாரிய சுவாமி விஷ்வ பிரசன்னதீர்த்த சுவாமி, உடுப்பி