ஹரகுமார் தாகூர்ஹரகுமார் தாகூர் (Hara Kumar Tagore) (1798-1858) இவர், கொல்கத்தாவின் ஓர் முன்னணி நில உரிமையாளாரகவும், கொடையாளியாகவும் சமசுகிருத அறிஞராகவும், எழுத்தாளாராகவும் மற்றும் இசைக்கலைஞராகவும் இருந்துள்ளார். இவர் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த பாதுரியகட்டா கிளையைச் சேர்ந்தவர். கோபி மோகன் தாகூரின் மூத்த மகனான இவர், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு பாதுரியகட்டா குடும்பத்திற்கு தலைமை தாங்கினார்.[1] பணிகள்ஹரகுமார் தாகூர், இந்து வேதங்கள், சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றார். இவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட புத்தகங்களைத் தொகுத்தார். சப்தகல்பத்ரம் என்ற நூலைத் தொகுப்பதில் இராதாகாந்த தேவ் என்பவருக்கு (1783–1867) உதவினார்.[2] படைப்புகள்மேலும், அரதத்வா-தீதி (1881), புராச்சரண-போதினி (1895) மற்றும் சிலா-சக்ரார்த்தபோதினி போன்ற நூல்கள்: இவரால் இயற்றப்பட்டது. சிலா-சக்ரார்த்தபோதினி என்பது பல்வேறு வகையான கற்களைக் கையாள்கிறது, அவை நாராயணனின் அடையாளமாக வணங்கப்படுகின்றன.[3] பல்வேறு தாந்த்ரீக சடங்குகள், குறிப்பாக காளி வழிபாடு தொடர்பான நடைமுறை விஷயங்களில் ஒரு கையேட்டையும் எழுதினார்.[4] இசையமைப்பாளர்சமசுகிருதத்தில் உதவித்தொகை பெற்ற ஒரு இசைக்கலைஞரான இவர் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராகவும் இருந்தார்.[5] குடும்பம்இவர் பிரசன்னா குமாரின் அண்ணன் ஆவார். ஹரா குமார் 1858இல் இறந்தார்; இவரது மூத்த மகன் மகாராஜா சர் ஜதிந்த்ரமோகன் தாகூர் அவர்களால், குடும்பத்தின் பாதுரியகட்டா கிளை கிளைத்து வளர்ந்தது.[1] இவருக்கு சௌரிந்திரமோகன் மற்றும் சௌதிந்திரமோகன் என்ற இரு மகன்களும் இருந்தனர். நினைவுஇவர் தனது தந்தையின் நினைவாக தனது சகோதரர் பிரசன்ன குமாருடன் முலிசோர் என்னுமிடத்தில் ஒரு கோவிலைக் கட்டினார்..[6] மேலும், கலை மற்றும் இசைக்காக இவர் தாராளமாக பணத்தை நன்கொடையாக வழங்கினார். இவர் புகழ்பெற்ற "எமரால்டு போவர்," என்றா ஒரு அழகான மாளிகையை கட்டியிருந்தார். இதை மேற்கு வங்க அரசு கையகப்படுத்தியது. இது இப்போது ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.[7][8] கொல்கத்தாவில் உள்ள ஒரு சதுக்கத்திற்கு ஹரகுமார் தாகூர் சதுக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia