ஹவாய் (அருணாச்சலப் பிரதேசம்)
ஹவாய் (Hawai), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும். இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடகிழக்கே 536 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது. இந்த ஊர் இமயமலையில் 1296 மீட்டர் உயரத்தில் உள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறான லோகித் ஆறு ஹவாய் ஊர் வழியாகப் பாய்கிறது.[1] இந்த ஊர் இந்தியா-சீனா எல்லையிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. போக்குவரத்துஅருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத் தலைமையிடமான திங்புவிலிருந்து ஹவாய் வழியாக இந்திய-சீனாவை பிரிக்கும் மெக்மோகன் கோடு வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 13 திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.[2][3][4][5] மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 187 குடியிருப்புகள் கொண்ட ஹவாய் பேரூராட்சியின் மக்கள் தொகை 982 ஆகும். அதில் 625 ஆண்கள் மற்றும் 357 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 571 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 80.31 %ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 45.01% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.78%, இசுலாமியர் 8.45%, சமணர்கள் , பௌத்தர்கள் 1.32%, மற்றும் கிறித்தவர்கள் 2.44%, வீதம் உள்ளனர்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia