தேசிய நெடுஞ்சாலை 13
தேசிய நெடுஞ்சாலை 13 (National Highway 13 -India), என்பது இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தின் மிக நீளமான அருணாச்சல நெடுஞ்சாலை வலையமப்பின் ஒரு பகுதி ஆகும். இது 1,559 கி.மீ. நீளமான இருவழிப்பாதையாகும். இது வடமேற்கில் தவாங் நகரிலிருந்து தென்கிழக்கில் வக்ரோ வரை செல்கிறது.[1][2] முழு பாதையும் 2018-ல் 6.2 கி. மீ. நீளமுள்ள திபாங் ஆற்றின் குறுக்கே திபாங் நதிப் பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் செயலுக்கு வந்தது.[3][4] சனவரி/பிப்ரவரி 2022க்குள் இலக்கை நிறைவு செய்யும் குறுகிய மாற்றுப் பாதையான சேலா சுரங்கம், அனைத்து வானிலை இணைப்பையும் வழங்கும்.[5][6] நெடுஞ்சாலைகள் மறுபெயரிடப்படுவதற்கு முன்பு, இது தே. நெ. 229 மற்றும் தே. நெ. 52 என அறியப்பட்டது.[7] இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை, இந்தியாவின் கிழக்குப் பகுதியின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு எதிரே உள்ள சீனாவின் மேற்கு தியேட்டர் கட்டளையின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் இந்திய இராணுவத்தின் திறன்களை மேம்படுத்துகிறது. பாதைதே. நெ. தவாங், பொம்டிலா, நெச்சிபு, செப்பா, சாகலி, ஜிரோ, டபோரிஜோ, அலோங், பாசிகாட், தேசு ஆகிய நகரங்களை இணைக்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வக்ரோ அருகே தே. நெ. 15 சந்திப்பில் முடிவடைகிறது.[7][8] சந்திப்புகள்
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia