1959 சீனாவிற்கு எதிரான திபெத்தியர்களின் கிளர்ச்சி (1959 Tibetan uprising or the 1959 Tibetan rebellion) 1951-இல் திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்த பின்னர்[11], திபெத் நாடானது, 1955-இல் சீனாவின் ஒரு நிர்வாகப் பகுதியாக மாற்றப்பட்டது. இதனை திபெத்திய மக்கள் ஏற்காது தொடர்ந்து அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் திபெத்திய பௌத்த சமயத் தலைவரான 14வது தலாய் லாமாடென்சின் கியாட்சோவை சீன அரசு கைது செய்து விடுவார்களோ எனற அச்சத்தின் காரணமான, 10 மார்ச் 1959 அன்று திபெத்தின் தலைநகரான லாசாவில்சீன அரசுக்கு எதிரராக திபெத்திய போராளிகள், பௌத்த பிக்குகள், திபெத்திற்கு கிழக்கில் உள்ள காம் மாகாண காம்பா மக்கள், திபெத்தை தனி நாடாக அறிவிக்க கோரி கிளர்ச்சிகளை தொடங்கினர்.[12][13]ஆனால் ஜெனரல் தான் குவான்சான் தலைமையிலான சீன இராணுவத்தினர் 23 மார்ச் 1959 அன்று சீனாவிற்கு திபெத்தியர்களின் கிளர்ச்சியை போரிட்டு ஒடுக்கினர். இந்த கிளர்ச்சியில் 2,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 85 ஆயிரம் முதல் 87 ஆயிரம் திபெத்தியர்கள் காயமடைந்தனர்.
கிளர்ச்சிக்குப் பின்னர்
திபெத்தின் தலைநகரான லாசா நகரத்தின் செரா விகாரை, கான்டென் விகாரை மற்றும் துரெப்ங் விகாரைகளை சீன இராணுவம் குண்டுகள் பொழிந்து பெரும் சேதம் உண்டாக்கினர். தலாய் லாமாவின் மெய்க்காவல் படையினரின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. திபெத்தியர்களின் வீடுகளையும், பொது இடங்களையும் சீனப்படையினர் சோதனையிட்டு, ஆயுதங்களை பறித்தனர். ஆயிரக்கணக்கான திபெத்திய பௌத்தப்பிக்குகளை கைது செய்தனர். பலரை மரண தண்டனை விதித்தனர். லாசாவில் இருந்த விகாரை எனும் வழிபாட்டு கட்டிடங்களை கொள்ளையடித்து, அழித்தனர்.[9]
12 மார்ச் மாதத்திற்குப் பின்னர் திபெத்திய பெண்கள் சீன இராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் மேற்கொண்டு கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி செய்த போராட்ட வீரகங்னைகளை சீன இராணுவம் கைது சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்ட பெண்களை சீன இராணுவம் சிறையில் கொடுமைப்படுத்தினர். 12 பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சீனா அரசின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத் பகுதிக்கு, 1965-இல் திபெத் தன்னாட்சிப் பகுதி என்ற சலுகை வழங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு சீனாவிற்கு எதிரான திபெத்தியர்கள் நடத்திய கிளர்ச்சியை நினைவு கூறும் வகையில், திபெத்தியர்கள் வாழும் உலக நாடுகளில் ஆண்டுதோறும் மார்ச், 10 நாளான்று திபெத்தியர்கள் எழுச்சி நாள் மற்றும் 12 மார்ச் அன்று திபெத்தியப் பெண்களின் எழுச்சி நாளும் கொண்டாடப்படுகிறது. [15]
↑Conboy, Kenneth J.; Morrison, James; Morrison, James (2002). The CIA's Secret War in Tibet. Lawrence: University Press of Kansas. Archived from the original on 1 April 2022. Retrieved 11 December 2018.
Watry, David M (2014). Diplomacy at the Brink: Eisenhower, Churchill, and Eden in the Cold War. Baton Rouge: Louisiana State University Press. ISBN978-0-8071-5718-3.